India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடும் போராட்டத்திற்கு பிறகு, இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. காலை முதல் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி சிக்ஸ் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்துள்ளார். இதுவரை இந்தியா 166/8 எடுத்து, 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி 42(46), பும்ரா 2(4) ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று கோழி இறைச்சியின் விலை கிலோ ₹230 முதல் ₹280 வரை விற்பனையாகிறது. நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நிர்ணயித்த விலையின்படி, கறிக்கோழி கிலோ ₹95ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹110ஆகவும் விற்கப்படுகிறது. நாமக்கல்லில் இன்று முட்டை மொத்த விலை 10 பைசா உயர்ந்து ₹5.90ஆக உள்ளது. சென்னையில் இது ₹6.50 முதல் ₹7.00 வரை விற்கப்படுகிறது.
அம்பாளை தரிசிச்சிட்டு எந்த ஒரு காரியத்தை செஞ்சாலும் வெற்றி கிடைக்கும்னு சொல்லுவாங்க. அதுக்காக இவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணியிருக்காங்க பாருங்க. நாகர்கோவில்ல இரவு அம்மன் கோயிலுக்குள்ள போனவங்க விளக்கு பொருத்தி சாமி கும்பிட்டுட்டு, அந்த விளக்கையே திருடிட்டு போயிருக்காங்க. போலீஸ் மனோஜ், அர்ஜூன்னு ரெண்டு பேரை கைது பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க.
Under 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் மீதே அனைவரின் கவனமும் உள்ளது. இந்திய அணி: ஆயுஷ் மத்ரே, சூர்யவன்ஷி, ஆந்த்ரே , அமான்(C), கார்த்திகேயா, நிகில் குமார், ஹர்வன்ஷ் சிங்(வ), கிரண், ஹர்திக் ராஜ், சேத்தன் சர்மா, யுதாஜித் குஹா. All the best team India
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். VCKவில் யார் தவறு செய்தாலும் முகாந்திரத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் உணர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். VCK புதிய கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அப்போது இருவரும் சண்டையிடுவது போல் மோதி கொண்டனர். இச்சம்பவம் சர்ச்சையான நிலையில் இதுகுறித்து பேசிய சிராஜ் ” ஹெட் ‘நன்றாக பந்து வீசினாய்’ என்று சொல்லவில்லை. அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பொய் சொல்கிறார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம். அவர் பேசும் விதம் தவறாக இருந்தது, எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் தான் அப்படி நடந்து கொண்டேன்’ என்றார்.
‘life time settlement’ என்ற வார்த்தையை நிஜமாக்கும் வகையில் UAEக்கு வேலைக்கு போன இடத்தில், இந்தியர் ஒருவருக்கு பணமழை கொட்டியுள்ளது. அபுதாபியில் உள்ள கடை ஒன்றில் சேல்ஸ் மேனாக வேலை செய்யும் கேரளாவை சேர்ந்த அரவிந்த் அப்புக்குட்டனுக்கு பிக் லாட்டரியில் ₹57 கோடி பரிசு அடித்துள்ளது. இப்போ சொந்தமாக கடை வைக்கும் அளவுக்கு அப்புக்குட்டன் கோடீஸ்வரராகியுள்ளார். ஆனாலும் லாட்டரி போதை ரொம்ப ரிஸ்க் பாஸ்..
TASMAC கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்குமாறு பணியாளர்களுக்கு TASMAC நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும், விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு, வேறுபாடு இருந்தால் 50% அபராதம் வசூலிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
சென்னையில், பல கனவுகளுடன் முதலிரவு அறை சென்ற மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. திருமணத்தில் பெண் ஒருவர் கலாட்டா பண்ண, உஷாரான மணப்பெண் உறவினர்களுடன் மாப்பிள்ளையை அடைத்து வைத்து அவரின் போனை ஆய்வு செய்துள்ளார். அதில், பல பெண்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவர, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே, 3 பெண்ணை ஏமாற்றி, 4வது பெண்ணிற்கு தாலி கட்டியவருக்கு கட்டம் கட்டியுள்ளது காவல்துறை.
மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன், கணினி திரை வாயிலாக வீடியோ அழைப்பில் பேசும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை புழல், வேலூர், கோவை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 9 மத்திய சிறைகளில் இந்நடைமுறை அமலாகியுள்ளது. கைதிகள் 3 நாள்களுக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் 12 நிமிடம் கணினி மூலம் வீடியோ அழைப்பில் பேசலாம். ஒரு நிமிடத்திற்கு ₹2.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.