India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (டிச.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*வைட்டமின் A, பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.
*கேரட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் K உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
*உடல் எடையை குறைக்க விரும்புவோர், கேரட் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
*நாள்தோறும் 5 கேரட் சாப்பிட்டால், மலச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
*கண் பார்வை பிரச்னை உள்ளவர்களுக்கு, கேரட் ஒரு சிறந்த தீர்வு.
கோலியின் இன்றைய ஆட்டத்தை பார்த்த போது, ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்துள்ளார். 2ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித், பவுலர்கள் தன்னை நோக்கி வருவதற்காக காத்திருந்து கோலி நிதானமான விளையாடியதாகவும், லெக் சைடு, பவுன்சர் பந்துகளிலும் அவர் எளிதாக ரன்களை சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வாலும் Aggressiveஆக ஆடியதாக கூறியுள்ளார்.
➤மேஷம் – மேன்மை ➤ ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – தனம் ➤துலாம் – வரவு ➤விருச்சிகம் – முயற்சி ➤தனுசு – உயர்வு ➤மகரம் – கவலை ➤கும்பம் – லாபம் ➤மீனம் – ஜெயம்.
மன்மோகன் சிங் மறைவை தனிப்பட்ட இழப்பாக கருதுவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது நண்பராக, தத்துவஞானியாக, வழிகாட்டியாக இருந்ததாகவும், ஒரு போதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்வதாகவும் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் தனது நடத்தையில் மென்மையானவர், ஆனால் சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட அவரது நம்பிக்கைகளில் மிகவும் உறுதியானவர் எனவும் நினைவு கூர்ந்துள்ளார்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, 10-3-2-1 ஃபார்முலா பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்கப்போவதற்கு 10 மணி நேரத்திற்கு முன் டீ/காஃபி குடிப்பதை தவிர்க்கவும். 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே பணி செய்வதை நிறுத்துங்கள். மொபைல்/டிவி 1 மணி நேரத்திற்கு முன்பே ஆஃப் செய்யுங்கள். இதை கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் காலில் மாவுக்கட்டு போட்டது குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து காவல்துறை, கைது செய்ய சென்றபோது வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.
அனைத்து பெண்களும் ஆபத்து காலங்களில் உதவும் “காவல் உதவி” செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் கோவி. செழியன் அறிவுறுத்தியுள்ளார். அவசர காலங்களில் செயலியில் சிவப்பு நிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்தி, பெண்கள் உதவி பெறலாம். பயனர் விவரம், இருப்பிடம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்டு உடனே சேவை தரப்படும். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என ராமதாஸ் குரல் எழுப்பியுள்ளார். பஞ்சாப்பில் ஒரு டன் கரும்பு விலை ₹4,100 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ₹3150 மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலின் சாதனையா? என விமர்சித்த அவர், ஒரு டன் கரும்புக்கு ₹5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
UGC தலைவராக இருந்த போது மன்மோகன் சிங்கிற்கு வந்த ஒரு அழைப்புதான், அவரை அரசியலுக்கு வரவழைத்தது. 1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்து உலகமே திக்குமுக்காடிப் போயிருந்தது. இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து இருந்தது. அப்போது நெதர்லாந்தில் இருந்த மன்மோகனுக்கு, பிரதமர் நரசிம்ம ராவ்வின் செயலாளர் போன் செய்து, நிதி அமைச்சராக தேர்வு செய்துள்ளதாக கூறினார். அன்று முதல் அவர் அரசியல்வாதி ஆனார்.
Sorry, no posts matched your criteria.