India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலுங்கு நடிகர் மோகன் பாபு மீது, அவரது மகனும், நடிகருமான மஞ்சு மனோஜ் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சொத்து தகராறில் மோகன் பாபு தன்னையும், தன் மனைவியையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டி, காயங்களுடன் ஐதராபாத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று அவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக, மனோஜ் தாக்கியதாக, மோகன் பாபு புகார் அளித்திருந்தார். சொத்து விஷயத்தில் தந்தையும், மகனும் மாறி மாறி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கெயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மூத்த பொறியாளர் முதல் அதிகாரி இடங்களுக்கு தகுதியானவர்கள் gailonline.com இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 261 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 11. எழுத்து, நேர்முக தேர்வு உள்ளது. இதில், உள் இடஒதுக்கீடும் உள்ளது. ₹60,000 – ₹1,60,000 வரை பதவிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.
AUS-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் பும்ராவை குறைவாக பயன்படுத்தியதாக ரோஹித் கேப்டன்சி மீது விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள ரோஹித், ஒரு நாள் முழுவதும் பும்ராவை ஓவர் போட சொல்ல முடியாது எனவும், சிராஜ், ரானா, நிதிஷ் என அணியில் உள்ள மற்ற பவுலர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பும்ராவின் வேலைப் பளுவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
வாழ்வில் இன்றியமையாத தண்ணீரை, சில காலத்தில் விலைக்கு வாங்கும் நிலைமை உருவாகி வருகிறது. ஆனால், இப்பவே 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ₹1,16,000 விற்பனையாகிறது. இந்த தண்ணீர் ஜப்பானின் Kobe என்ற இடத்தின் இயற்கை நீரூற்றில் இருந்து எடுக்கப்பட்ட உலகின் மிகவும் சுத்தமான தண்ணீர். Fillico Jewellery Water எனப்படும் இந்த பாட்டில் தங்க அலங்காரங்களும், நேர்த்தியான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. இருந்தாலும் 1 லட்சமா?
பாலியல் தொல்லை புகாரை வெறும் வார்னிங் கொடுத்து விடுதலை செய்யும் அதிகாரத்தை போலீசுக்கு யார் கொடுத்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட காலேஜ் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல், பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெளி மாநில பிரச்னைக்கு 4 பக்க அறிக்கை விடும் CM அமைதியாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டத்தை 2ஆக பிரித்து ஆத்தூர் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் இந்த கோரிக்கை நிறைவேற்றக்கோரி, அக்கட்சியின் MLAக்கள் வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பல அடையாளங்களை அறிந்து வைத்திருக்கும் உங்களில் பலருக்கும் தமிழகத்தின் அடையாளங்களை குறித்து தெரியுமா. நாட்டிற்கு அடையாளங்கள் இருப்பது போலவே, ஒவ்வொறு மாநிலத்திற்கும் தனி அடையாளங்களும் இருக்கிறது. தமிழகத்தின் நடனம் பாரதநாட்டியம் என தெரிந்தவர்களுக்கு தமிழகத்தின் மரம் பனைமரம் * தமிழகத்தின் விலங்கு நீலகிரி வரையாடு * மாநிலத்தின் பழம் பலாப்பழம் * தமிழகத்தின் பூ காந்தள் பூ.
Under 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் அசத்தலான பவுலிங்கால் 49.1 ஒவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் ராஜ், செட்டன் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி வெற்றி பெற்று 9வது முறையாக கோப்பையை தூக்குமா?
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஹெட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆட்டம் முடிந்த பிறகு சிராஜ் வெளியே வந்து இது ஒரு தவறான புரிதல். நாம் அந்த சம்பவத்தில் இருந்து விலகிவிடுவோம். ஒரு சிறந்த வாரத்தை அழிக்க வேண்டாம். நாங்கள் இருவரும் sweet அதை மறந்துவிட்டோம். அதை மறக்க விரும்புகிறோம்”. இதன்மூலம் ஒருவழியாக சிராஜ்-ஹெட் சண்டை ஒரு முடிவுக்கு வந்தது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியிடம் டெக்னிக்கல் பிரச்னை இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கோலி முழு திறனை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். Off Stumpக்கு வெளியே வரும் பந்தை எதிா்கொள்ள முடியாமல் அவர் திணறுவதாக விமர்சகர்கள் சொல்கின்றனர். இந்த பிரச்னையை அவர் சரி செய்யாத வரைக்கும் சோபிக்க முடியாது என்று மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.