India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2047ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலர்களாக உயரும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்தியா $3 ட்ரில்லியன் மதிப்புடன் தற்போது 5ஆவது பெரிய பொருளாதார நாடாக இருப்பதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இது உயர்ந்து $5 ட்ரில்லியன் மதிப்புடன் 3ஆவது இடத்திற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் அதிரடி உத்தரவை சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம்! டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக தேவராஜன் என்பவர் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற கடைகள், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டு, இதை நிறைவேற்ற டாஸ்மாக் கடைகளுக்கு 2 மாதங்கள் கெடு விதித்துள்ளது.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் AUS அணியின் எல்லிஸ் பெர்ரி புதிய சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 105 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 7000 ரன்கள், 300 விக்கெட்டுக்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். மேலும் 13 டெஸ்ட்டில் விளையாடியுள்ள அவர் 928 ரன்கள், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.
நமது WhatsApp-ல் பல Group-கள், Contact-கள் இருக்கும். அதில் வரும் அனைத்து மெசேஜ்களையும் நம்மால் பார்க்க முடியுமா என்றால் அது சந்தேகம்தான். எனவே, இப்படி தவறவிடும் மெசேஜ்களுக்காகவே WhatsApp ஒரு புது அப்டேட்டை கொண்டு வரப்போகிறது. அதாவது, மெசேஜை Remind செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம், பார்க்கத் தவறவிட்ட மெசேஜ்களை இனி Remind செய்து பார்க்கலாம்.
ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல் என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்திற்கு நக்சல்களைக் கொண்டு வந்துவிடலாம் என திட்டமிடுகிறார்களா என தெரியவில்லை என்று சந்தேகத்தை எழுப்பினார். மேலும், விசிக யார் கையில் உள்ளது. விசிகவிற்கு ஒரு தலைமையா? அல்லது இரண்டு தலைமைகளா?. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமா தயங்குவது ஏன் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆதார் அட்டையில் விவரங்களை புதுப்பிக்க இன்னும் 6 நாள் தான் அவகாசம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்றவர்களும், பெயர் – முகவரி மாற்றியவர்களும் இவற்றை புதுப்பிப்பது கட்டாயம். இவற்றை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் டிச.14 உடன் முடிவடைகிறது. அதற்கு மேல் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ₹ 50 கட்டணமாக செலுத்த வேண்டும். https://myaadhaar.uidai.gov.in/-இல் சென்று இலவசமாக அப்டேட் செய்யலாம்.
திமுகவை விமர்சித்த விஜய்யை கிண்டல் செய்யும் வகையில், சினிமா செய்திகளை தான் பார்ப்பதில்லை என உதயநிதி கூறியிருந்தார். இதற்கு தவெக காட்டமாக பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், எம்ஜிஆரை கூத்தாடி என ஏளனம் செய்த திமுகவை, மக்கள் ஒதுக்கி வைத்தார்கள். இன்று விஜய் மீது அதே ஏளனம் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. எனவே, 2026இல் திமுகவை ஒதுக்கிவிட்டு, விஜய் ஆட்சியில் அமர்வது உறுதி எனக் கூறப்பட்டுள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 11ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனான டிங் லிரெனை வீழ்த்தி தமிழ்நாட்டு வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொடரில் 2ஆவது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். இன்னும் 3 சுற்றுகள் எஞ்சியிருக்கும் சூழலில் 6-5 என்ற கணக்கில் குகேஷ் முன்னிலை வகிக்கிறார். இந்த 3 சுற்றுகள் டிராவில் முடிந்தாலே, சாம்பியன் பட்டத்தை அவர் வெல்வதற்கு வாய்ப்பு அதிகம்.
ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படவுள்ளதாக VCK தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டு மாத சம்பளத்தையும் கொண்டு இந்த நிவாரண நிதி, முதல்வரிடம் நேரடியாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். விசிக-திமுக இடையே சில நாள்களாக சுமூகமான சூழ்நிலை இல்லாத நிலையில், முதல்வரை அவர் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆட்டத்திறனுக்கு ஏற்ற மைதானமாக அடிலெய்ட் கருதப்படுகிறது. ஆசியாவில் இருப்பது போன்று இந்த மைதானம் இருக்கும். இங்கு பலமுறை IND வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதை உணர்ந்து கொண்டு, IND வீரர்களுக்கு போதிய அனுபவம் இல்லாத பிங்க் நிற பந்து போட்டியை AUS கிரிக்கெட் வாரியம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. அடிலெய்டில் பிங்க் நிற பந்து டெஸ்ட்டில் AUS ஒரு போதும் தோற்றது கிடையாது.
Sorry, no posts matched your criteria.