India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (2005) (100 நாள் வேலை திட்டத்தினால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது)
* தகவல் அறியும் உரிமைச் சட்டம் (2005) (இத்திட்டத்தினால் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை அதிகரித்தது)
* தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் (2013) (இத்திட்டத்தின் மூலம் இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டது).
2018-ம் ஆண்டு RS எம்பி பதவிக்கு தாக்கல் செய்த வேட்புமனுவில் மன்மோகன் சிங் தனது மொத்த சொத்து மதிப்பாக குறிப்பிட்டது- ரூ.15 கோடியே 75 லட்சம். 2018-19 ஆம் ஆண்டுக்கான அவரது மொத்த வருவாய் ரூ.89 லட்சத்து 42 ஆயிரம். 2012 ஆம் ஆண்டு தகவலின்படி டெல்லி மற்றும் சண்டிகரில் அவருக்கு பிளாட்கள் இருந்தன. 150 கிராமில் தங்கம் இருப்பதாக அந்த ஆண்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதது.
மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நெருக்கடியான காலங்களிலும் கருணாநிதி- சிங் ஒன்றிணைந்து, கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தியதாகவும், பிரதமர் என்பதை தாண்டி, TN மக்களுக்கு நண்பராக விளங்கியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். வாய்ச்சொல் வீரராக அல்லாமல், தனது தீர்க்கமான செயல்பாடுகளால் மன்மோகன் சிங் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். X பதிவில், “என்னுடைய வழிகாட்டியை இழந்துவிட்டேன். மன்மோகன் சிங் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியதாக, புகழாரம் சூட்டியுள்ளார்.
* UNCTAD தலைவர் (நியூயார்க்)
* மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்
* ரிசர்வ் வங்கியின் இயக்குநர்
* நிதித்துறை அமைச்சகத்தின் செயலாளர்
* ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
* பிளானிங் கமிஷனின் துணைத் தலைவர்
* பிரதமரின் ஆலோசகர்
* UGC தலைவர்
* MP, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர்
கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் வேலை உறுதித் திட்டம் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, அன்னிய முதலீடு, தனியார்மயமாக்கல் மற்றும் உரிமம் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தினார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், தேசிய ஊரக சுகாதார இயக்கம் மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய சீர்திருத்தங்களுக்கு அவர் அடித்தளம் அமைத்தார்.
2004ஆம் ஆண்டு காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்த நிலையில், சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், 13வது பிரதமராக மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரான அவர், தொடர்ந்து 2 முறை ( 2004 முதல் 2014 வரை ) அப்பதவியை வகித்தார். இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்த 4வது நபர் மன்மோகன் சிங் என்ற பெருமையை பெற்றவர்.
1991-ல் இந்தியா கடும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டபோது புதிதாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.நரசிம்ம ராவ், பொருளாதார ஆலோசகராக இருந்த மன்மோகன் சிங்கை அரசியலுக்குள் இழுத்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகள் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், தாராளமய பொருளாதார கொள்கைகள் உள்பட பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இதன் பின்னர்தான் சீர்திருத்த பொருளாதார நிபுணராக மன்மோகன் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 1954ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் MA (Economics) முடித்தார். பின்னர், 1957ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன்பின், 1962ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் D.Phil பட்டம் பெற்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) மண்ணை விட்டு பிரிந்துள்ளார். அவர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த கடைசி போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டர்பன் மற்றும் தாடியில்லாமல் இருக்கும் இந்த புகைப்படம், காண்போரின் மனதை கரையச் செய்கிறது. பொருளாதார புரட்சியை ஏற்படுத்தி, நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டவருக்கு, கட்சி பேதமின்றி அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.