India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருத்துவக் கல்வியை 5 ஆண்டுகளும் தமிழில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அது குறித்து தேசிய மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார். தமிழகத்தில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் முயன்று வருகிறார். இரு தரப்பிடமும் 87 நாட்களாக தொடர்ந்து பேசி வருகிறார். இந்தச் சூழலில் இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரவில்லை என்றால், தங்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த முயற்சியை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை என பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார் டிரம்ப்.
மூச்சுப்பயிற்சி பண்ணுங்க. அதுவே ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் மிக நல்லது. காலையில் மூச்சுப்பயிற்சி செய்வதால் மனக்குழப்பம், அதிக யோசனை, பதற்றம் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். மேலும், இப்பயிற்சி நுரையீரலுக்கும் மிக நல்லது. தொடங்கும் போது, 3 முதல் 10 நிமிடங்கள் வரை மூச்சுப்பயிற்சியை செய்யலாம். பழக பழக, 10 – 20 நிமிடங்கள் வரை பயிற்சியை நீட்டிக்கலாம். தள்ளிப்போடாமல், இன்றே தொடங்குங்கள். SHARE IT.
பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம்(IMD) எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். எனவே, பொதுமக்கள் மதியம் (12 -3 மணி வரை) வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், அடிக்கடி நீர், இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கவும்.
JEE 2-ம் கட்ட முதல்நிலை(மெயின்) தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.19) வெளியானது. IIT, NIT போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் UG பொறியியல் படிப்புகளில் சேர JEE முதல்நிலை, முதன்மை என 2 கட்டத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. கடந்த 2 – 9-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதிய நிலையில், அதன் முடிவுகள் <
நடப்பு IPL தொடரில், இதுவரை 7 மேட்ச்சில் விளையாடி இருக்கும் RCB, அதில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், தோல்வியடைந்த 3 மேட்சும் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிதான். வெளி கிரவுண்டில் வெற்றி பெற்ற அணியால், பாவம்…. சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பெறமுடியவில்லை!
மகாவிஷ்ணுவுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில் இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லுங்க. வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். மனநிம்மதி அடைந்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
‘ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்’
ம.பி., EX அமைச்சரும் பாஜக MLAவுமான உஷா தாக்கூர் பேசிய <
பாஜக உடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவில் எம்எல்ஏக்கள் உள்பட பலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் பணி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் முடிவெடுத்துள்ளார். இதனால், ஏப்.23-ம் தேதி இபிஎஸ் தனது வீட்டில் விருந்து வைத்து, அதிருப்தியில் இருப்பவர்களை சமாதனம் செய்ய செய்யவிருக்கிறார். இந்த விருந்தில் செங்கோட்டையன் உள்ளிட்டோரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.