India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘சூர்யா 45’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகியதாக கூறப்படும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ட்ரீம் வாரியர் நிறுவனம், புதிய sensation சாய் அப்யங்கரை கமிட் செய்துள்ளதாம். ‘கட்சி சேர’ பாடல் மூலம் பெரும் வரவேற்பை பெற்ற சாய், ஏற்கனவே LCUவில் ராகவா லாரன்ஸ் படத்திலும் கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயலின் இடத்தை சாய் நிரப்புவாரா?
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவையில் முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது மூன்றாவது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. தற்போது, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவை முன்னவர் துரை முருகனுக்கு அருகில் இடம் வழங்கப்பட்டுள்ளது. இது, கட்சியிலும் ஆட்சியிலும் அவரது ஆதிக்கத்தை காட்டுவதாகும்.
அரசு சேவையை பெற 66% வணிக நிறுவனங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவது LocalCircles சர்வேயில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 159 மாவட்டங்களில் 18,000 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 46% பேர் தானாக முன் வந்து லஞ்சம் கொடுத்ததாகவும், 16% பேர் லஞ்சம் கொடுக்காமல் அரசின் சேவைகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். டிஜிட்டல் மயம், CCTV வளர்ந்த போதிலும் இன்னும் லஞ்சம் ஒழியவில்லையே..!
சபரிமலை சீசன் தொடங்கிவிட்ட நிலையில், பக்தர்களுக்காக பல்வேறு வசதிகளை தேவசம் போர்டு மேற்கொண்டு வருகிறது. கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாக, தற்போது 18ம் படி ஏற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 80 பக்தர்கள் மட்டுமே 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிர்க்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து ஒரு கிராம் ₹7,130க்கும், சவரனுக்கு ₹120 உயர்ந்து ஒரு சவரன் ₹57,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலை எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ₹100 ஆக விற்கப்படுகிறது.
டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி சகாப்தம் தொடங்கிய தினம் இன்று. கடந்த 2014-ம் ஆண்டு தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் விராட் கேப்டன் பொறுப்பேற்றார். அவரின் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி உலகில் தலை சிறந்த அணியாக விளங்கியது. ஆஸி. மண்ணில் பல ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றி, BGT தொடரை ஆஸி. மண்ணில் வென்றது என கோலி தலையிலான இந்திய அணி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
கோவையில் பல கோடி ரூபாய்க்கு புதிய பங்களா வாங்கியிருப்பதாக வெளியான தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுத்துள்ளார். கோவையில் பங்களா வாங்கும் அளவுக்கு தனது நிதிநிலைமை இல்லை என்றும், கோவைக்கு வரும் போதெல்லாம் தனது மாமனார் வீட்டிலேயே தங்கி வருவதாகவும் அவர் பதிலளித்துள்ளார். தன்னை காண அங்கு வருவோர் இடவசதியின்றி வெளியே நிற்கும் நிலைதான் உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவியின் ‘அமரன்’ படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இப்படம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் நம்பர்-1 இடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. மொத்தம் 14 நாடுகளில் டாப்-10 பட்டியலில் உள்ளது. மலேசியா, மாலத்தீவு, நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 2வது இடத்திலும், கத்தாரில் 3வது இடத்திலும், பாகிஸ்தானில் 5வது இடத்திலும் நீடிக்கிறது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தான் வலியுறுத்தியதாகவும், அதுபற்றி பரிசீலிப்பதாக அவரும் உறுதியளித்தாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். PM மோடி ஆட்சியில் விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படும் என அண்ணாமலை மேலும் குறிப்பிட்டார். இன்று சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சிறப்பு தீர்மானம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
20 வருஷம் முன் எண்ட்ரி கொடுத்தாலும், தமிழில் தற்போது வரை 10 படங்கள் மட்டுமே நடித்துள்ளார். மொட்டைமாடி கல்பனாவாக, இன்னும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி, ஆமீர் கான், சல்மான் கான் என பாலிவுட் தலைகளையும் ஈர்த்தவர், 25 படத்துடன் ஒதுங்கிவிட்டார். செல்போன் கம்பெனி ஓனரை திருமணம் செய்து ஒதுங்கியவர், இப்போதும் என்ன பண்ணுகிறார் என தெரியவில்லை. கண்டுபிடிச்சிடீங்களா…கமெண்ட்ஸ் சொல்லுங்க
Sorry, no posts matched your criteria.