India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
WTC தொடருக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தை பிடித்திருக்கிறது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் வென்றால் கூட இந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். அதன்பின், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா நம்மைவிட அதிக புள்ளிகள் பெற்றிருப்பதால் இந்தியாவுக்கு சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறந்தது. இதனால், தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும் என்றும் குடும்பத்தில் குறைவில்லா மகிழ்ச்சி உண்டாகும் என்றும் புராணங்கள் கூறுகின்றன. திருக்கார்த்திகை தீபத்தன்று வீட்டில் 27 விளக்குகள் ஏற்றுங்கள்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா-2’ பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ₹829 Cr வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிவேகமாக ₹800 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. கடந்த 4 நாட்களாக அதிகளவில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தெலங்கானாவில் இன்று முதல் கட்டணம் சற்று குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கால் விரல்களும் ஒரே அளவிலிருந்தால், யதார்த்தமும், பிறரின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பீர்கள். கடுமையான உழைப்பாளி. கால் பெருவிரலை விட 2ம் விரல் நீளமாக இருந்தால், இயல்பிலேயே நீங்கள் படைப்பாளி. சாகச குணம் அதிகமாக நிறைந்திருக்கும். பெருவிரல் நீளமாகவும் மற்ற விரல்கள் வளைந்தும் இருந்தால், சுயசிந்தனை கொண்டவராக இருப்பீர்கள். பிடிவாத குணமும் நிறைந்திருக்கும். இதில் நீங்க எந்த லிஸ்ட்டு?
சிரியாவை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த ஆசாத் குடும்பத்தினர், கிளர்ச்சிப் படைகள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சிரியாவில், 2000ம் ஆண்டில் இருந்து அதிபராக இருந்து வருபவர் பஷார் அல் ஆசாத். அதற்கு முன் 30 ஆண்டுகளாக அவருடைய தந்தை ஹபீஸ் அல் ஆசாத் அதிபராக இருந்தார். கிட்டதட்ட ராணுவ ஆட்சி போல, 1970 முதல் அங்கு ஒற்றை ஆட்சி முறை தான் வழக்கத்தில் உள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த இவர்கள், அங்கு 90% இருந்த சன்னி பிரிவினர் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அரசின் அனைத்து உயர் மட்டங்களிலும் சன்னி மக்கள் அகற்றப்பட்டு, ஷியா மக்கள் அமர்த்தப்பட்டனர். இந்த 56 ஆண்டுகளில் அங்கு சரியான மருத்துவம் கிடைக்காதது, வேலைவாய்ப்பின்மை என மூன்றாம் தர நாடாக சிரியா மாறியது. இதனை எதிர்த்து தொடங்கிய உள்நாட்டு போரில், இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அரசுக்கு எதிராக பல அமைப்புகள், பிரிவினைவாத அமைப்புகள் இணைந்தன. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிப் படைகள், கடந்த மாதம் 27ம் தேதி தீவிர தாக்குதல் நடத்தி, நாட்டின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்தன. தலைநகர் டமாஸ்கஸைக் கிளர்ச்சிப்படைகள் நெருங்கியதை அறிந்த அதிபர் ஆசாத், விமானம் மூலம் ரஷ்யா தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸ் அரண்மனைகளைக் கைப்பற்றினர்.
SLக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று, டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸி.,வை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து AUS, முதலிடத்திற்கு முன்னேறியது. ஆனால், அந்த மகிழ்ச்சி 24 மணி நேரம்கூட நீடிக்கவில்லை. தற்போது AUS மீண்டும் பழையபடி 2வது இடத்திற்கும், இந்தியா இன்னும் மோசமாக மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் டிச.16ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் துரோக வரலாற்றின் அடையாளம் என EPSஐ ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் DMK அரசு, மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், பார்லிமென்டில் சுரங்கம், கனிமத் திருத்தச் சட்ட வரைவுக்கு ADMK எம்பி தம்பிதுரை ஆதரவாக பேசியதை மறைத்துவிட்டு, EPS நாடகமாடுவதை மக்கள் அறிவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.