India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகிஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் பெயர் ‘மன்மோகன் சிங் ஆண்கள் பள்ளி’ என்றால் நம்ப முடிகிறதா?. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு 1932இல் காஹ் கிராமத்தில் பிறந்த மன்மோகன், அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்தார். அவரது குடும்பத்தினர் வாழ்ந்த வீடு தற்போதும் அங்கு உள்ளது. 2008இல் டெல்லி வந்த அவரது பள்ளி நண்பர், ராஜா முகமது அலி, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை ஒருமுறை காஹ் வர வேண்டுகோள் விடுத்தார்.
ஆண்டுக்கு ரூ.3 லட்சம்- ரூ.15 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு மத்திய பட்ஜெட்டில் வரி குறைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. இதில் ரூ.10 லட்சம் வரை வரி விதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ரூ.15 லட்சம் வரை வரி குறைப்பு செய்யப்பட இருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கானோர் பயனடைவர் என்றும் புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
2002 சிறந்த பார்லிமென்டேரியன் விருது,
2005 USன் டைம் இதழின் டாப் 100 செல்வாக்கு மிக்க தலைவர்கள் பட்டியலில் இடம்,
1996 கெளரவ டாக்டர் பட்டம், டெல்லி பல்கலை. 1993, 1994 சிறந்த நிதியமைச்சருக்கான ஆசியா மணி விருது, யூரோமணி விருது, 1987 பத்ம விபூஷண், 1956 கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆடம் ஸ்மித் பரிசு,1955 சிறந்த மாணவருக்கான கேம்பிரிட்ஜில் ரைட்ஸ் விருது 14 கெளரவ டாக்டர் பட்டங்கள்.
கல்வி கற்க செல்லும் இடத்தில் காதலியுங்கள், மறைவிடம் செல்லுங்கள் என பெற்றோர் சொல்லி அனுப்பினார்களா என்று குணச்சித்திர நடிகர் MS பாஸ்கர் கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய அவர், “ஒவ்வொரு நபருக்கும் ஒரு கான்ஸ்டபிளை போட்டா பாதுகாப்பு தர முடியும்? இதில் அரசை குறை கூறுவது நியாயமே இல்லை” என்றார்.
வங்கிகளில் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.21,397 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2023இல் இதே காலகட்டத்தில் ரூ.23,863 கோடி மோசடி நடந்ததுள்ளது. இது 2024இல் ரூ.13,175 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இது அதிகரித்துள்ளது. மொத்தம் 18,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 8 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.
பிரதமராக 10 ஆண்டுகள் (2004-14) பதவி வகித்த மன்மோகன் சிங், 2018ல் ராஜ்யசபாக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரிடம் ₹15.77 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டார். டெல்லி, சண்டிகரில் 2 FLAT, மாருதி 800 கார், SBI, தபால் வங்கிகளில் டெபாசிட் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், தனக்கு கடன் இல்லை என குறிப்பிட்டது அவரின் நிதி ஒழுக்கத்திற்கான சான்றாகும்.
சுஷ்மிதா சென் தனது டீன்-ஏஜ் பருவத்தில் சல்மான் கான் மீது கொண்ட காதலை பற்றி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘மெய்னே பியார் கியா’ படம் வெளிவந்தபோது, எனக்கு கிடைக்கும் பணத்தில் சல்மானின் புகைப்படங்களை வாங்கி குவிப்பேன். இந்த போஸ்டர்கள் எனக்கு புனிதம் வாய்ந்தவை. ‘பீவி No-1’ படத்தில் நடித்தபோது இந்த விஷயங்களை அவரிடமே கூறினேன்” என்றார்.
சிறு வயதிலேயே தாயை இழந்த மன்மோகன் சிங், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர் வசித்த காஹ் கிராமத்தில், மின்சாரம், பள்ளி இல்லை. இதனால், நீண்ட தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று படித்ததுடன், மண்ணெண்ணெய் விளக்கு ஒளியிலே படித்தார். ஏழ்மையிலும் கற்பதை மட்டும் நிறுத்தாத அவர், பேராசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின், பல உயரிய பதவிகளை வகித்தாலும் வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தார்.
சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமை வாய்ந்த தொண்டை நாட்டின் செங்கையில் அமைந்துள்ளது ஆட்சிபுரீஸ்வரர் கோயில். சிவனின் தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடம் என்பதால் இத்தலம் ‘அச்சு இறு பாகம்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றானது. பல்லவ பேரரசால் நிர்மாணிக்கப்பட்ட இத்தலத்திற்கு சென்று ஈசனை வணங்கினால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
மன்மோகன்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று முதல் 7 நாள் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.சி. வேணுகோபால், மன்மோகன்சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது என்று குறிப்பிட்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.