India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் திமுகவை சீண்டியுள்ளார் ஆதவ் அர்ஜுன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்டோருக்கு அதிகாரம் கிடைக்கக்கூடாது என்பதுதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை என்பதை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த மனநிலையை உடைத்தெறிய வரும் தேர்தலில் போராடுவேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவ(ன்) மறைவதில்லை என தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்ததை சுட்டிக்காட்டிய அவர், இதற்கு பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததுதான் காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஃபைட்டோ நியூட்ரியண்டுகள், உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது. இதில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகின்றன. இந்த அரிசி புற்றுநோயை எதிர்த்து போராடவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் வல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் இதில் இருக்கும் புரதங்கள் மற்றும் வைட்டமின் ஈ, முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பொறுப்பு கிடைத்தபோது இருந்த மனநிலையிலேயே, இடைநீக்கத்தின்போதும் இருந்தேன் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்களுக்கு நன்கு தெரியும் எனக்கூறிய அவர், மீண்டும் மன்னர் ஆட்சி என்பதை குறிப்பிட்டு, கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம் என சூளுரைத்துள்ளார்.
மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர INDIA கூட்டணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியசக்தி மின்திட்டத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக, அதானி மீது புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்னையை கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாகக் கூறப்படுகிறது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானம் இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்ததால், தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இன்று இரவுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி, விரைந்து ஒப்புதல் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
அடிலெய்ட் டெஸ்டின் போது இந்திய பவுலர் சிராஜும், ஆஸி., பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டும் மோதிக் கொண்டனர். சிராஜ் பந்தில் அவுட்டான ஹெட் எதையோ சொல்ல, சிராஜும் ஆவேசமாக பதிலளித்தார். இந்த செயல் ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதால், சிராஜுக்கு மேட்ச் சம்பளத்தில் 20% அபராதம் விதித்துள்ள ஐசிசி, இருவருக்கும் தலா ஒரு demerit புள்ளியையும் வழங்கி எச்சரித்துள்ளது.
இயக்குநர் பாலா இயக்கி அருண்விஜய் ஹீரோவாக நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் ஆடியோ ரிலீஸ், சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் டிச.18-ல் நடக்கவுள்ளது. பாலாவின் 25-ம் ஆண்டு கலைப் பயணத்தையும் ஆடியோ விழாவோடு சேர்த்து கொண்டாடவுள்ளது வி ஹவுஸ் புரொடக்ஷன். விழாவில் பாலாவின் நெருங்கிய கலையுலக நண்பர்கள் பலரும் பங்கேற்பர். பாலாவின் முதல் படமான சேது 1999-ல் வெளியானது. பாலாவின் படங்களில் உங்களை கவர்ந்தது எது?
பாம்புகள் பழிவாங்கும் என படங்களில் காட்டுவார்கள். அது நிஜம் தான் என நம்பும் வகையில் உள்ளது இச்சம்பவம். உ.பி. மஹோபா மாவட்டத்தில் ரோஷ்னி(19) என்பவரை 11 மாதங்களில் 11 முறை ஃபாலோ பண்ணி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கடித்துள்ளது பாம்பு ஒன்று. தோட்டத்தில் இருக்கும் போது அப்பெண் ஒருமுறை மிதித்து விட்டாராம். அவ்வளவு தான், இப்போது வரையில் பழிவாங்கி வருகிறது பாம்பு. என்னதான்யா பண்றது இதற்கு…?
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸ் நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், மத்திய அரசின் வருவாய் துறை செயலாளராக இருக்கும் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். டிச.11ஆம் தேதி முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் RBIயில் பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.