India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் டீ குடித்து உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. பன்ஸ்வாராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இன்று காலை ஒன்றாக அமர்ந்து டீ குடித்துள்ளனர். ஆனால், டீ தூளுக்கு பதில் பூச்சிக்கொல்லி பவுடர் கலந்ததால் சிறிது நேரத்திலேயே மருமகள், மாமியார், பேரன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மாமனாரும், கணவரும் ICU-வில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என்ன கொடுமைங்க இது..
மணிப்பூரில் 3 வாரங்களுக்கு பிறகு இணையச்சேவை இயல்புக்கு திரும்பியுள்ளது. சுராசந்த்பூர், தெளபல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகரித்த வன்முறையால் நவ.16 அன்று இணையச்சேவை முடக்கப்பட்டது. 2-வது ஆண்டாக மணிப்பூரில் தொடரும் வன்முறையில் இதுவரை 200-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான சொத்துகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். RBI-யின் 26வது கவர்னரான இவர் ஐஐடி கான்பூர் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலை.,யில் படித்துள்ளார். 1990-ல் IAS ஆகத் தேர்வான இவர், 33 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி, தற்போது மத்திய நிதித்துறையில் செயலாளராக (வருவாய்) உள்ளார். டிச.10-ல் சக்திகாந்த தாஸ் ஓய்வுபெறும் நிலையில், இவர் புதிய கவர்னராக பதவி ஏற்பார்.
ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் சான்றிதழ் கோரி அரசு தேர்வுகள் இயக்கத்தில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
IAS, IPS, IFS, IRS உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் UPSC மெயின்ஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முதல்நிலை தேர்வான prelims கிளியர் செய்த 14,627 பேர் செப்., மெயின் தேர்வு எழுதினர். இதில் வெற்றி பெறுபவர்கள் இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவர். தேர்வு முடிவுகளை www.upsc.gov.in, www.upsconline.nic.in தளத்தில் தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
இங்கிலாந்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பழைய வீட்டை வாங்கிய தம்பதி, அதனை புதுப்பித்தனர். அப்போது வீட்டுக்குள் புதைந்திருந்த 300 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கக் காசுகள் கிடைக்க, அவற்றை ஏலம்விட ரூ.2.5 கோடி கிடைத்தது. 17-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது, வணிகரான அந்த வீட்டு உரிமையாளர் பதுக்கி வைத்தது தான் இந்த தங்கக் காசுகளாம். அதிர்ஷ்டம் சிலநேரம் நம் காலுக்கு கீழே கூட இருக்கும்.
‘புஷ்பா -2’ திரைப்படத்தில், தான் ஏற்று நடித்துள்ள ஸ்ரீவள்ளி கேரக்டர் குறித்து ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் அவர், ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல; அது என் இதயத்திற்கு நெருக்கமான, என் உண்மையான கேரக்டர். ஸ்ரீவள்ளியை நீங்கள் இந்த அளவுக்கு கொண்டாடுவது என்னை நெகிழச் செய்கிறது. எனினும், புஷ்பா இல்லாமல் இந்த ஸ்ரீவள்ளி இல்லை எனக் கூறியுள்ளார்.
தன்னை பற்றி தவறான தகவலை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடுவதைப்பற்றி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் எவ்வித கருத்தையும் பேசவில்லை. கனிமவள ஊழலைத் தடுப்பதற்காக ஏல முறையை மட்டுமே அவர் பேசியுள்ளார். ஆனால், உண்மையை மறைத்து, என்னைப்பற்றி இப்படி தவறான தகவலை ஸ்டாலின் ‘X’இல் வெளியிட்டு கீழ்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடானது என கொந்தளித்துள்ளார்.
பான் கார்டை டிஜிட்டல்மயமாக்கும் நோக்கில் ‘பான் 2.0’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது. இந்த பணியின் போது போலி பான் கார்டுகள் கண்டறியப்படும். மேலும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் அவருக்கு ₹ 10,000 அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். எனவே, எக்ஸ்ட்ரா பான் கார்டு வைத்திருப்போர் உடனடியாக INCOME TAX அதிகாரியிடம் தெரிவித்து, அதை ரத்து செய்து கொள்வது நல்லது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், நாளை தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.