India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நம்மில் பலர் இரவில் கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறோம். ஆனால், இதிலிருந்து வெளியேறும் கெமிக்கல் நமது உடலுக்கு பல்வேறு தீங்குகளை இழைப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். சுவாசப் பிரச்னைகள், தோல் வியாதிகள் ஏன் புற்றுநோய் வருவதற்கு கூட இது வழிவகுக்கும் என அலர்ட் கொடுக்கின்றனர். மேலும், குழந்தைகள் மற்றும் கருவில் இருக்கும் சிசுக்களைக் கூட இது பாதிக்கும் என தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் புதிய பான் கார்டு பதிப்பு, PAN 2.0 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. புதுப்பிக்கப்பட்ட புதிய PAN கார்டை உங்கள் முகவரிக்கு அரசு நேரடியாக அனுப்பும். கவனமாக இருங்கள். பான் கார்டு புதுப்பிப்புக்கான போன், மெசேஜ், மெயில் எதற்கும் பதிலளிக்க வேண்டாம். எந்த தகவலும் அல்லது OTP ஐயும் கொடுக்க வேண்டாம். எச்சரிக்கையாக இருந்து இணைய மோசடிகளைத் தவிர்க்கவும்.
ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பவன் கல்யாணின் உதவியாளரின் செல்போனை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர், பவன் கல்யாண் கொலை செய்யப்படுவார் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார். அதேபோல, அவரது செல்போனுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் மெசேஜ்கள் வந்துள்ளன. இதையடுத்து, பவன் கல்யாணுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் மனைவி, உங்கள் மீது கோபத்தில் இருப்பதை பின்வரும் அறிகுறிகள் உணர்த்தும்: 1)வழக்கத்துக்கு மாறான அமைதி 2)அடிக்கடி உங்களை விமர்சிப்பது 3)அடிக்கடி எரிச்சல் / கோபம் 4)தலைவலி, தசைப்பிடிப்பு அறிகுறிகள் 5)வழக்கமாக செய்துகொண்டிருந்த விஷயங்களில் விலகுவது 6)தாம்பத்ய உறவை தவிர்ப்பது 7)கடமைக்காக பேசுவது, இடித்துப் பேசுவது என பேச்சில் அதிருப்தி. உடனே காரணத்தை கண்டறிந்து சரிசெய்தால் மகிழ்ச்சி தானே!
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே இடத்தில நீட்டிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும். இது, தமிழகம் – இலங்கை இடையே கரையை கடக்கும் எனவும் கணித்துள்ளது. இதனால், நாளை முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது தாய் – தந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்தவர் ஸ்ருதி (24). அதற்கு பின் தனக்கு ஒரே ஆறுதலாக இருந்த தனது காதலன் ஜென்சனையும் சாலை விபத்தில் அவர் பறிகொடுத்தார். இத்தனை இழப்புகளுக்கு பிறகும் கூட, அவர் தன்னம்பிக்கையை சிறிதளவும் இழக்கவில்லை. இந்நிலையில், ஸ்ருதிக்கு வருவாய்த்துறையில் கிளார்க்காக கேரள அரசு பணியமர்த்தியுள்ளது.
குரு பகவான் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியப் போகின்றன. 1) கும்பம்: நிலுவையில் உள்ள வேலைகள் சுபமாக முடியும். முதலீடுகள் பெரிய லாபத்தை கொடுக்கும். குடும்ப வாழ்க்கை குதூகலமாகும். 2) மீனம்: சமூகத்தில் அந்தஸ்து உயரும். நல்ல வேலை கிடைக்கும். வீடு வாங்குவீர்கள். 3) ரிஷபம்: பணம் கொட்ட போகிறது. கஷ்டங்களும், நீண்டகால நோய்களும் தீரும்.
வேதாந்தாவை அரிட்டாபட்டிக்கு அனுப்பியவர் மோடி; நிறுத்துவதாக நடிப்பவர் அண்ணாமலை என்று சு.வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். நடந்ததை அவர் மறந்துவிட்டதால், நாடே மறந்திருக்கும் என இபிஎஸ் நம்புகிறார் என அவரையும் விட்டுவைக்காத சு.வெ., நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட அதிமுக வாய் திறக்கவில்லை. கார்ப்பரேட் விசுவாசத்திற்கு துணை போகும் எல்லாருக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்தார்.
பல்கலைக்கழக மானியக் குழு(UGC) நடத்தும் Ph.D, பேராசிரியர், விரிவுரையாளர், JRF ஆகியவற்றுக்கான நுழைவுத் தேர்வுக்கு(NET) விண்ணப்பிக்க, நாளையே (டிச.10) கடைசி தேதியாகும். வரும் ஜன.1 முதல் ஜன.19 வரை, வெவ்வேறு பாடப்பிரிவுகளுக்கான NET தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கு https://ugcnet.nta.ac.in/ என்ற இணையதளத்தில், தகவல்களை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
கார்த்திகை தீபம், பெளர்ணமியை முன்னிட்டு தி.மலைக்கு 10,109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தி.மலைக்கு டிச.12, 13, 14, 15இல் 1,982 சிறப்பு பேருந்தும், மற்ற நகரங்களில் இருந்து மீதமுள்ள சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அதேபோல், விழுப்புரத்தில் இருந்து தி.மலைக்கு டிச.13, 14, 15இல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.