India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC குரூப்-1 மெயின்ஸ் தேர்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். தமிழ் தகுதித் தாள், பொது அறிவு தொடர்பான 3 தாள்கள் என மொத்தம் 4 தாள்கள் இடம்பெறுகின்றன. சென்னையில் 10 மையங்களில் டிச.13 வரை 4 நாள்கள் இத்தேர்வு நடைபெறுகிறது. இதற்காக 19 தலைமை தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை முன்னாள் MP இரா. மோகன் உடல் நலக்குறைவால் காலமானார். இவர், 1980ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1989ஆம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றிபெற்று கோவையின் முக்கிய புள்ளியாக இருந்தார். 81 வயதாகும் அவர், இன்று காலை வயது முதிர்வால் காலமானார்.
புயல் வெள்ளத்தில் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தோருக்கு புதிதாக சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு முகாம்களில் இச்சான்றிதழுக்காக விண்ணப்பிக்கும்படி அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டத் தேர்வுகள் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது.
பையில் பணம் எடுத்து செல்லாதோர் மொபைலில் உள்ள யுபிஐ மூலம் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களுக்காக ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விளம்பரம் வெளியிட்டுள்ளது. க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவோர், திரையில் வரும் பெயரை உறுதி செய்தபிறகு பணத்தை அனுப்ப வேண்டும். இல்லையெல், உங்கள் வங்கிக் கணக்கிலுள்ள பணம் திருடப்படும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளது.
2000ஆவது ஆண்டு கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் SM.கிருஷ்ணா. அப்போது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். ராஜ்குமாரை விடுவிப்பதற்காக இரு மாநில முதல்வர்களும் பலமுறை ஆலோசனை நடத்தினர். பின்னர், 108 நாள்களுக்குப் பின் வீரப்பனிடம் இருந்து ராஜ்குமார் மீட்கப்பட்டார்.
புதிய படத்தில் சீதையாக நடிப்பதால் சாய் பல்லவி சைவத்துக்கு மாறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்ட பொருட்செலவில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ராமாயணம் எனும் புது படம் உருவாகி வருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இப்படத்திற்காக சாய் பல்லவி சைவ உணவு பழக்கத்துக்கு மாறியுள்ளதாகவும், சைவம் மட்டுமே சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.
9 செவ்வாய்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகி , செவ்வாய் தோஷம் பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபாடு செய்யவேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரை அன்றைய தினம் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி விரதத்தையும் கடைபிடிக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை கந்தசஷ்டி கவசம் உச்சரிக்க வேண்டும்.
1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் SM கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். பின்னர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்டு இந்தியா மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிகளில் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்.
1999ஆம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று தேர்தலில் வென்று முதல்வரானார் SM.கிருஷ்ணா. 5 ஆண்டுகால முதல்வர் பொறுப்பு முடிந்தவுடன் மகாராஷ்டிர ஆளுநராக இவரை நியமித்தது மத்திய காங்கிரஸ் அரசு. பின்னர், மன்மோகன் ஆட்சியிலும் மத்திய அமைச்சராக இருந்தவர், 2017ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன்பின், 2023ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் பெங்களூருவில் காலமானார். இவர், 1999 முதல் 2004 வரை கர்நாடகத்தின் முதல்வராகவும் 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிர ஆளுநராகவும் பதவி வகித்தார். பின்னர், 2009 முதல் 2012 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன் விருதளித்து கௌரவித்தது.
Sorry, no posts matched your criteria.