India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மன்னார்குடியில் காதலிக்க மறுத்ததாகக் கூறி கல்லூரி மாணவியை அத்தை மகன் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. படுகாயமடைந்த மாணவி திருவாரூர் அரசு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மகாதேவனை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சையில், திருமணத்திற்கு மறுத்ததாக டீச்சர் ரமணி பள்ளி வளாகத்திலேயே கடந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடப்பு கல்வியாண்டில் நாட்டில் 11.70 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக் கல்வி பெறவில்லை என மத்திய இணையமைச்சர் ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 7.84 லட்சம், ஜார்கண்ட்டில் 65,000, அசாமில் 63,000 குழந்தைகளும் பள்ளிக் கல்வியைப் பெறவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 544 ரேஷன் கடைகளும், 1,126 பகுதி நேர ரேஷன் கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மேலூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு அதிமுக MLA பெரியபுள்ளான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மூன்றரை ஆண்டுகளில் மொத்தம் 1,670 கடைகள் தொடங்கப்பட்டதாகவும், வாய்ப்பிருந்தால் மேலூரில் புதிய கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதிகமாக வேலை செய்வது Stressயே கொடுக்கும் என்பது உணர்ந்து ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரலில் அமலாகவுள்ளது, வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை, 3 நாள் விடுமுறை என்பது கேட்பதற்கே இனிப்பாக உள்ளது அல்லவா? இது பணிசெய்பவர்களின் வேலை பார்க்கும் திறனை அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால், நம் ஊரில் ஒருத்தர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யணும் என்கிறார். என்னவென்று சொல்வது…
எவ்வளவு காலத்திற்கு இலவசங்களை வழங்க முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2020ல் கொரோனா தொற்றால் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்து நீதிமன்றம் தாமாக விசாரித்து வருகிறது. இதில், 81 கோடி மக்களுக்கு மானிய விலை, FREE ரேஷன் பொருள்கள் வழங்கப்படுவதாக மத்திய அரசு கூறியது. இதையடுத்து, இலவசங்களுக்கு பதில் ஏன் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடாது என்று கேட்டுள்ளது.
நடைபெற்று வரும் BGT தொடரில் 2ம் டெஸ்ட் தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரோஹித், விராட் கோலி ஆகியோரின் ஃபார்ம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி. ரோஹித் இந்த ஆண்டில் 12 டெஸ்டில் 597 ரன்களும், கோலி 8 டெஸ்டில் 373 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்கள். இது அணிக்கு இவர்களால் அணியில் இளம் வீரர்களுக்கான இடமும் கேள்விக்குறியாகிறது என்ற கருத்தும் எழுகிறது. இது குறித்து என்ன நினைக்கிறீங்க
ஆதவ் அர்ஜுனா 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமா அறிவித்தது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். 6 மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா அல்லது திருமா அணி மாறுவாரா எனவும் இந்த சஸ்பென்ஸை யார் உடைப்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கெனவே, திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார் என்று பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சிறிதளவு உயர்த்தியுள்ளன. சென்னையில் நேற்று லிட்டர் பெட்ரோல் ரூ.100.80ஆக விற்கப்பட்டது. அதேபோல், லிட்டர் டீசல் ரூ.92.39ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.100.90ஆகவும், டீசல் விலை 10 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.92.49ஆகவும் விற்பனையாகிறது.
தேசியக் கல்வி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு ரூ.2,400 கோடியை விடுவிப்போம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்கொள்கை தமிழக நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அரசு ஏற்கவில்லை. இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய 2024-2025 ஆண்டு நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. ஏற்கெனவே உள்ள நிலுவைத் தொகையுடன் (ரூ.248.29 கோடி) சேர்த்து ரூ.2,400 கோடி தர வேண்டியுள்ளது.
சிரியா அதிபர் அல் அசாத்துக்கு அரசியல் ரீதியில் தஞ்சம் கொடுத்து இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் படை சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அல் அசாத் ரஷ்யாவுக்கு சென்று விட்டதாக தகவல் வெளியானது. ரஷ்யத் தொலைக்காட்சிகள் இதைத் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு வந்தன. இந்நிலையில் முதல்முறையாக ரஷ்ய அரசும் இதனை தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.