India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பா.ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் NETFLIXல் வெளியானது. AUG 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடிக்கு மேல் வசூலித்தது. வழக்கமாக படம் வெளியான 30வது நாளில் OTTல் அந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்கும், NETFLIXக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தின் வெளியீடு தாமதமானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹600 அதிகரித்தது. நேற்று ஒரு சவரன் ₹57,040க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹57,440க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ₹7,130ஆக இருந்த நிலையில் இன்று ₹75 அதிகரித்து ₹7,205க்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அவையை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என MPக்கள் கனிமொழி, மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த சுரங்க அனுமதிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக MPக்கள் மக்களவையில் இவ்விவகாரத்தை எழுப்ப உள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் DMK ஃபைல்ஸ்-3 வெளியிடப்படும் எனவும், DMK கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், லாபங்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார். டங்ஸ்டன் விவகாரத்தில் CM நாடகமாடியதாக சாடிய அவர், பதவி விலக வேண்டுமென்றால் Tasmac பிரச்னைக்காக விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்பட்டால், பதவி விலகுவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார்.
அரசியலமைப்புச் சட்டம் ஏற்பட்டதன் 75ம் ஆண்டை முன்னிட்டு பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் தலா 2 நாள்கள் விவாதம் நடக்கவுள்ளது. இதில், வரும் 14ம் தேதி LSயிலும், 17ம் தேதி RSயிலும் PM மோடி பதிலுரையாற்றுகிறார். குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதால் ரூபாயின் மதிப்பு சரிவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். NDF மார்கெட்டில் ரூபாயின் மதிப்பு 14 முதல் 15 பைசா வரை குறைந்து 84.90ஆக வர்த்தகம் ஆனது. இன்றைய கரன்ஸி சந்தையில் இதன் தாக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கோவில்பட்டி அருகே நேற்று காணாமல்போன 5ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கருப்பசாமி(10), பக்கத்து வீட்டு மாடியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் கழுத்திலிருந்த 12 கிராம் தங்கச் செயின், 1 கிராம் தங்க மோதிரத்தைக் காணவில்லை எனப் பெற்றோர் கூறியுள்ளனர். இதனால், நகைக்காகச் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரத் நெட் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தொழில் முனைவோருக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 12,525 கிராமங்களுக்கு 1ஜிபிஎஸ் வேக நெட் சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து, முதல்கட்டமாக 960 கிராமங்களில் அந்த சேவையை ஆரம்பிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தொழில் முனைவோர், கேபிள் ஆபரேட்டர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைய மேலும் 24 மணி நேரம் ஆகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, நேற்றே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகம் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடம் மாறாமல் வலுப்பெறாமல் நிற்கிறது. இந்த தாழ்வுப் பகுதியால் டெல்டா கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 12வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கடந்த சுற்றில் வெற்றிபெற்று குகேஷ் முன்னிலை பெற்ற நிலையில், இச்சுற்றில் சீனாவின் டிங் வெற்றி பெற்று இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளார்கள். இன்னும் 2 சுற்று ஆட்டங்களே மிஞ்சியிருக்கிறது என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சாதிப்பாரா சென்னை பையன்?
Sorry, no posts matched your criteria.