India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஸ்சில் ஜன்னல் சீட் கிடைத்தாலே Luck என்போம். ஆனால், 7 முறை சாவையே வென்றுவிட்டார் குரோஷியாவைச் சேர்ந்த பிரானோ செலக். வாழ்க்கையில் ஒரே முறை இவர் போன விமானம் விபத்தில் சிக்க, அதிலிருந்து தப்பித்தார். மழையால் ரயில் தடம் புரண்டும் பிழைத்தார். குன்றின் உச்சியில் இருந்தும் விழுந்தும் தப்பினார். இதுவே இவரை லக்கி பாஸ்கர் என நீங்கள் கூறினால், 2003ல் இவர் வாங்கிய லாட்டரியில் ₹8 கோடி பரிசும் விழுந்துள்ளது.
திருப்பூர் பல்லடம் அருகே கணவன், மனைவி வீட்டிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர். அண்மையில், அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொலைக்கு காரணமானவர்களை கண்டறியாத நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 கல்வி உதவித் தொகை வழங்க வகைசெய்யும் CM-ன் திறனாய்வுத் தேர்வுக்கு இன்று (டிச.10) முதல் டிச.18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹1000 வீதம் கல்வி ஆண்டில் ₹10,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in தளத்தில் பதிவேற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வருங்காலத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து சென்றிருக்கிறார் விசிக தலைவர் திருமாவளவன். திமுக – விசிக- தவெக என்று அரசியல் சர்ச்சை நிலவி வரும் சூழலில் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்பதாக திருமா பேசினார். இதனையடுத்து கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து சென்றார்.
நடிகர் சிவராஜ் குமார் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அங்கு அவரும், அவரது மனைவி கீதா சிவராஜ்குமாரும் முடி காணிக்கை செலுத்தினர். சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. ஆனால், இதனை சிவராஜ்குமார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
சென்னையில் வெள்ளியின் விலை ஒரே நாளில் 4% உயர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. நேற்று, கிராம் ₹100 என்று விற்கப்பட்ட வெள்ளி, இன்று ₹104ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக வெள்ளி விலை ₹100 என்று விற்கப்பட்டுவந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதன் விலை கடும் உயர்வைக் கண்டிருக்கிறது. தங்கம் விலை ஒரு நாளுக்கு 1% உயர்ந்தாலே மக்கள் அதிர்ச்சியடையும் நிலையில் வெள்ளி விலை சாதாரணமாக 4% உயர்ந்திருக்கிறது.
IND அணி WTC இறுதிப்போட்டிக்கு செல்ல
தற்போது நடைபெற்று வரும் ஆஸி., அணிக்கு எதிரான BGT தொடரை 4-1, அல்லது 3-1 என வெல்ல வேண்டும். 3-2 என தொடரை வென்றால், ஆஸி. அணிக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்டில் ஒரு போட்டியை இலங்கை வெல்ல வேண்டும். 2-2 என டிரா ஆனால் AUS-SL தொடரை SL 2-0 என வெல்ல வேண்டும். 2-3 என தோற்றால் PAK-SA தொடரை PAK 2-0 என வெல்ல வேண்டும் & AUS-SL தொடரில் ஒரு போட்டியில் SL தோற்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அடுத்த நிதியாண்டில் புதிதாக 1000 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல், மழையால் பெரும் சேதமடைந்துள்ள கடலூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட எல்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதியில் தடுப்பணைகள் கோரினர். பின்னர், பேசிய துரைமுருகன், எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளது. முதல்வரிடம் கூறி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் SM. கிருஷ்ணாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1960 முதல் கருணாநிதியுடன் SM கிருஷ்ணா நெருக்கமாக இருந்ததாகவும் மாநில நல்லிணக்கத்துக்காக இருவரும் உழைத்ததாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் SM.கிருஷ்ணாவின் பங்கு அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தி.மலையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த இடத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வரும் 13ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், 2,668 உயர மலையில் மகாதீபம் ஏற்ற வழக்கமாக 2,500 பக்தர்களுக்கு அளிக்கப்படும் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த இரு நாட்களுக்கு முன்பு புவியியல் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்த நிலையில், இன்று டெல்லியில் இருந்து வந்த குழு ஆய்வு செய்கிறது.
Sorry, no posts matched your criteria.