India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரகுவரனை ரொம்ப மிஸ் செய்வதாக நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். திருமண பந்தத்தில் இருந்த போது எடுத்த கொண்ட புகைப்படம் ஒன்றை X தளத்தில் பதிவிட்டுள்ளார். இருவரும் சிரித்து பேசிக் கொண்டு இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்து அவருடன் இருந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 1996ஆம் ஆண்டு திருமணம் பந்தத்தில் இணைந்த இவர்கள் 2004லில் பிரிந்தனர். ரகுவரன் இல்லை என்றாலும் அவரின் நினைவுகளுடன் ரோகிணி வாழ்ந்து வருகிறார்.
கோவில்பட்டியில் வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக கிடந்த சிறுவனின் வாய், ஆசனவாய் பகுதியில் காயங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 10 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மொட்டை மாடியில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகியுள்ளன. சிறுவனின் உடல் தூத்துக்குடி GHஇல் உள்ள நிலையில், 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி INDIA கூட்டணி MPக்கள் தொடர் முழக்கம் எழுப்பியதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதோடு, அவை முடங்கி வருவதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முன்னதாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவும் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் பேட்மேன் என்பவர், 20 பெண்களை கடத்தி, ஏமாற்றி ஆன்மிகம் திருமணம் செய்துள்ளார். FLDS (Fundamentalist Church of Jesus Christ of Latter-day Saints) என்ற குழுவைச் சேர்ந்தவர் திருமணம் செய்த பெண்களில் 11 – 14 வயதுடைய சிறுமிகளும் உள்ளனர். காணாமல் போன வழக்கை விசாரித்த போது, போலீசார் இதனைக் கண்டுபிடித்தனர். இவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையிலிருந்து PMK சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் ஜி.கே.மணி, அதானி விவகாரத்தில் CM ஸ்டாலின், அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறினார். முன்னதாக அதானி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு எந்தத் தொடர்பும் இல்லை எனவும், அதானியை தான் சந்திக்கவே இல்லை என்றும் பேரவையில் CM கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இது மேற்கு-வட மேற்காக நகர்ந்து இலங்கை தமிழக எல்லையை கடக்கக்கூடும். இதன் தாக்கத்தினால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதென MET தெரிவித்துள்ளது.
காதலன் தன் private போட்டோவை வைத்து கொண்டு, பாலியல் ரீதியாக advantage எடுக்க முயன்றதால், ஆத்திரமடைந்த பெண் ஒருவர் அதிரடியாக அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி எடுத்துள்ளார். இச்சம்பவம் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, காதலன் தொந்தரவு தர, தாங்கி கொள்ள முடியாததால், பூங்காவிற்கு வரவழைத்து மரத்தில் அவரை கட்டி வைத்து, இச்செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் அப்பெண் தெரிவித்துள்ளார்.
அதானியை, தான் சந்தித்ததே இல்லை என பேரவையில் CM ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் அதானி நிறுவன முதலீடு, CM ஸ்டாலின் அவரை தனியாகச் சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக, பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாகப் பேரவையில் பேசிய அவர், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து பார்லிமெண்ட்டில் விவாதிக்க பாஜக, பாமக ஆதரவு அளிக்கிறதா இல்லையா என கேள்வி எழுப்பினர்.
கார்த்திகை மகா தீபத்தையொட்டி வரும் 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத்திருவிழா, வரும் 13ஆம் தேதி மகா தீபத்துடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி & கல்லூரிகள் செயல்படாது.
சென்னை தொழிலதிபர் நரசிம்ம ரெட்டியிடம் கவர்னர் பதவி வாங்கித் தருவதாக கூறி மராட்டிய நபர் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. அரசியல் பிரபலங்களை தெரியும் எனக் கூறி ரெட்டியிடம் பழகிய குல்கர்னி, ₹15 கோடி கொடுத்தால் கவர்னர் பதவி உறுதி எனக் கூறியுள்ளார். குல்கர்னி வலையில் சிக்கிய ரெட்டி, ₹5.07 கோடி கொடுத்துள்ளார். பின்னர், சதுரங்கவேட்டை பட பாணியில் ஏமாந்ததை உணர்ந்த ரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.