India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை திமுக அரசு திசை திருப்ப முயல்வதாக இபிஎஸ் குற்றஞ் சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்தாண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மசோதா தாக்கலின் போது ராஜ்ய சபாவில் ADMK எம்பி தம்பிதுரை பேசியது என்னவென்று விளக்கினார். அப்போது, மசோதாவை மட்டுமே தம்பிதுரை ஆதரித்ததாகவும், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அவர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
சென்னை மக்களுக்கு ₹6,000 மழை நிவாரணம் வழங்கப்பட்டது ஏன் என அமைச்சர் KKSSR விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவையில், ஃபெஞ்சல் புயல் நிவாரணம் குறித்து PMK எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சென்னை, தூத்துக்குடி வெள்ளத்தின் போது 10 நாள்கள் வெள்ளம் வடியாமல் இருந்தது. தற்போது பாதிப்பு இல்லை எனக் கூறவில்லை ஆனால் 2 நாள்களில் வெள்ளம் வடிந்துவிட்டது என்று கூறினார்.
வடசென்னை படத்தில் முதலில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பார்கள். ஆனால், இதுவரை அந்த காம்போ அமையவே இல்லை. அந்த முயற்சி ஒன்று தற்போது நடக்கிறது. கவுதம் மேனன் வெற்றிமாறனிடம் இருந்து கதை, திரைக்கதை ஒன்றை வாங்கி இயக்க தயாராகி வருகிறாராம். அதை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, சிம்பு தான் ஹீரோவாக கமிட்டாவார் எனப்படுகிறது. சிம்பு – கவுதம் மேனன் – வெற்றிமாறன் காம்போ எப்படி இருக்கும்?
1500ல் வாழ்ந்த Nostradamus கணிப்புகள் சில உண்மையாகின்றன. ஹிட்லர், கோவிட் குறித்த கணிப்புகள் உண்மையானதால், அவரின் புத்தகம் The Prophecies கவனம் பெறுகிறது. அதில், 2025ல் இங்கிலாந்தில் பரவும் பெருந்தொற்று பெரும் பாதிப்புகளை உண்டாக்கும், விண்கல் ஒன்று பூமியின் மீது மோதும், எரிமலை வெடிப்பு, வெள்ளத்தால் பிரேசில் கடுமையாக பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பெருந்தொற்றை உலகம் தாங்குமா?
10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை முறையாக கொண்டு வராதது யாருடைய தவறு என பேரவையில் CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 20% இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீட்டை கொடுத்தவர் கருணாநிதி எனவும், இந்த இட ஒதுக்கீட்டை எல்லாம் நீதிமன்றம் சென்று தடுக்க முடியவில்லை என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் கூட்டணியில் அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு தேர்தல் ஸ்டண்ட் என்றும் எதிர்க்கட்சியினரை விமர்சித்துள்ளார்.
இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. நாளை கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சிவகங்கை, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் EVM இயந்திரங்களில் முறைகேடு செய்தே, பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டி உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். EVM இயந்திர மாதிரிகளை பாடைகளில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று, பின்பு அதனை தீ வைத்துக் கொளுத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர். MHவில் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் வாக்காளர்களை விட அதிகப்படியான வாக்கு பதிவாகியிருந்தது.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் KIIT சர்வதேச ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 9 வயதான இந்தியாவின் ஆர்த்தி கபில், 66 வயது கிராண்ட் மாஸ்டரான அமெரிக்காவின் ராசெட்டை எதிர்கொண்டார். சிறுவன் தானே என்ன செய்து விடப் போகிறார் என்ற பாணியில் விளையாடிய ராசெட்டை, ஆர்த்தி கபில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் நர்ஸ் பிரசவம் பார்த்ததால் தான், குழந்தை உயிரிழந்ததாகக் கூறி குழந்தையின் தந்தை, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர் இருக்க வேண்டும். ஆனால், ஞாயிறு இரவில் டாக்டர்கள் இல்லாததால், செவிலியரே பிரசவம் பார்த்ததாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். பிஞ்சு மரணத்துக்கு யார் காரணம்?
அமெரிக்காவில் நடைபெறும் 82வது கோல்டன் குளோப் விருது விழாவில் ’All We Imagine As Light’ என்ற மலையாளப் படம் 2 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. ஆங்கிலம் அல்லாத மொழி மற்றும் சிறந்த இயக்குனர் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இயக்குநர் பாயல் கபாடியா, “ இது எனக்கு மிகப் பெரிய கவுரவம். இந்த படத்தை இவ்வளவு பெரிய வெற்றிபெறச் செய்த அனைவருக்கு நன்றி” என்றார்.
Sorry, no posts matched your criteria.