India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமண உறவை மீறி, மற்றொருவருடன் உறவு ஏற்பட 90% காரணம் செக்ஸ் இல்லை; அவர்களுக்கு தேவைப்படும் மனரீதியான ஆறுதல் தான் என்கிறது ஆய்வு. இதுதவிர, போரடித்தல், உறவு தவறில்லை என்று நினைப்பது, கணவன்- மனைவி புரிதலின்மை, புதிதாக ஏற்படும் காதல், பொதுவான விருப்பங்கள் இல்லாதது என பல காரணங்களும் உள்ளன. உடல் தேவைக்காக ஏற்படும் உறவு வெறும் 10% தானாம். 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் படம் ரிலீஸான 5 நாட்களில் உலக அளவில் ₹922 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்திய சினிமா வரலாற்றில் மிக வேகமாக இந்த தொகையை வசூலித்த படம் என்ற பெருமையையும் புஷ்பா 2 பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
AAP எம்எல்ஏ அப்துல் ரகுமான் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது எனவும், அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதற்காகவே கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட், AAP இருந்து விலகிய நிலையில், தற்போது இவரின் விலகல் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது என்று இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் விவகாரத்தில் அதிமுகவின் பொய்யை நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் மூலம் அம்பலப்படுத்தினோம். வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது என்று விமர்சித்துள்ளார்.
குரு பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்கு சென்றுள்ளதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. 1) ரிஷபம்: அதிர்ஷ்டம் வீட்டின் கதவை தட்டும். பணவரவு உண்டாகும். பெரிய முன்னேற்றம் உண்டு. 2) கடகம்: தொட்டதெல்லாம் துலங்கும். வீட்டில் சந்தோஷம் தாண்டவம் ஆடும். திருமண யோகம் உண்டு. 3) சிம்மம்: குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். துணைவரின் ஆதரவு உண்டு. புதிய தொழில் தொடங்குவீர்கள். மன மகிழ்ச்சி உண்டாகும்.
சிரியாவில் பஷார் அல் அசாத் அரசு கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. இதுபற்றி ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள X பதிவில், ஆசாத் அரசின் வீழ்ச்சியை சிலர் கொண்டாடுகிறார்கள். நோவா காலத்தில் மழை வந்தபோது மக்கள் சந்தோஷப்பட்டனர். அதுவே பின், வெள்ளமாகி அவர்களை அடித்துச் சென்றது. அப்போதுதான் இறை தண்டனையை அவர்கள் உணர்ந்தனர். இது ஆரம்பமே எனத் தெரிவித்துள்ளது. போர் ஓய்ந்து மக்கள் புது வாழ்வு பெறுவது எக்காலமோ?
இஸ்ரேல் படையினர் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸை நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 200-க்கும் மேற்பட்ட விமானத் தாக்குதலை நடத்திய நிலையில், டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ தொலைவு வரை இஸ்ரேல் படை முன்னேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேல் இந்த தகவலை மறுத்துள்ளது. தற்காப்புக்காக பொதுவான எல்லைப்பகுதியில் நிற்கும் தங்கள் படைகள், எல்லையை தாண்டவில்லை என இஸ்ரேல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அஜித் தனது அறிக்கையில் கடவுளே என்ற வார்த்தையை தவிர்த்து, “க….. அஜித்தே” என்ற கோஷத்தை எழுப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்..வாழு & வாழ விடு! என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
வயது வித்தியாசமின்றி மாரடைப்பு அதிகரித்து வரும் சூழலில், மார்பு வலி மாரடைப்பு என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதயத் தசைகளுக்குப் போதிய ரத்தம் கிடைக்காத போது, மார்பில் வலி ஏற்படும். இதை Angina Pectoris என டாக்டர்கள் கூறுகிறார்கள். இது நடைபயிற்சி, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு அதிகரிக்கும் விஷயங்களால் ஏற்படும் வலியாகும். இதற்கு 5-10 நிமிடங்கள் ஓய்வெடுத்தாலே போதும் என அறிவுறுத்துகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கடன் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக சிஏஜி ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தின் மொத்தக் கடன் ரூ.21,980 கோடியாக உள்ளதாகவும், கடந்த 2017-க்கு முன்பாக இருந்த கடனை விட, இது 6 மடங்கு அதிகம் எனவும் சிஏஜி தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் செலவீனம் மட்டும் 55.20% முதல் 63.55% வரை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.