India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால், அடுத்து அங்கு என்ன நடைபெறுமோ என பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் சிரியாவில் வேலை உள்ளிட்ட காரணத்திற்காக தங்கியிருந்த 75 இந்தியர்கள் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் மீட்கப்பட்டு லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு விமானங்களில் திருப்பி அழைத்து வரப்படவுள்ளனர்.
JIO போன் பயனாளர்களுக்காக அந்நிறுவனம் புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. 11 மாதங்கள் வேலிடிட்டி கொண்ட இத்திட்ட பலன்களைப் பெற ரூ.895 ரீசார்ஜ் செய்ய வேண்டும். அந்தத் தொகையை ரீசார்ஜ் செய்தால் தினமும் அன்லிமிடெட் அழைப்பு வசதி, தினமும் 50 இலவச எஸ்எம்எஸ் வசதியை அளிக்கிறது. 11 மாதங்களுக்கு மொத்தம் 24 ஜிபி டேட்டா, ஜியோ கிளவுட், ஜியோ சினிமா ஓடிடி சேவையையும் வழங்குகிறது.
விஜய்யின் தவெக கட்சிக்கு பிரபல நடிகர் நரேன் ஆதரவு தெரிவித்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படமான “தளபதி 69” படத்தில் அவருடன் இணைந்து நரேன் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் கட்சியைத் தொடங்கி, தமிழ் சினிமாவை விட்டு விஜய் விலகுவது கஷ்டமாக உள்ளது என்றார். விஜய் அரசியலில் சாதிக்க நினைப்பதாகவும், ஆதலால் அவருக்கு ஆதரவாக இருப்போம் என்றும் குறிப்பிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882இல் டிச. 11இல் பிறந்த பாரதியார், 7ஆவது வயதிலேயே கவிதை எழுதினார். தமிழ் மட்டுமன்றி இந்தி, சமஸ்கிருதம் மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். கவிதை எழுதுபவர் கவிஞரல்ல; கவிதையை வாழ்க்கையாக உடையவர், வாழ்க்கையையே கவிதையாகப் படைப்பவரே கவிஞர் என இலக்கணம் சொன்னவர் அவர். அவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பாரதி மறைந்தாலும் இன்னும் அவரின் புகழ் மறையவில்லை.
*தன் எதிரிகளை வெல்பவனை விட, ஆசைகளை வெல்பவனே தைரியமானவன்
*அனுபவம் வாய்ந்தவர்கள் என்று யாரும் இல்லை. காலமே அனுபவத்தை உருவாக்குகிறது
*ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும்போது மட்டுமே நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்
*புத்திசாலியை போல சிந்தியுங்கள், ஆனால் சாதாரண நபரை போல பேசுங்கள்
*மேன்மை என்பது விபத்தல்ல. எப்போதும் உயர்ந்த எண்ணம், முயற்சியின் விளைவே அது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையம் மிகக்கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, திருவள்ளூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. நாளை தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சியில் மிக கனமழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது.
1999 உலகக் கோப்பையில் இந்தியா வெளியேற ஜிம்பாபேயிடம் அடைந்த தோல்வியும் ஒரு காரணம். இப்போட்டியில் ஜிம்பாபே வெல்ல ஓலாங்கா முக்கிய காரணமாவார். பின்னர் 1998இல் சச்சினின் அதிரடி விளாசலால் அவர் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஜிம்பாபே அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் பெயிண்டராக உள்ளார். அடிலெய்ட் டெஸ்டில் பெயிண்ட் செய்ததையும் காண முடிந்தது.
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தன்கரை பதவிநீக்குவது தாெடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதுகுறித்து பேசிய ரிஜிஜூ, தே.ஜ கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால், நோட்டீஸ் நிராகரிக்கப்படும் என்றார்.
*1882: மகாகவி சுப்ரமணிய பாரதி பிறந்தநாள்
* 1922: இந்தி நடிகர் திலீப் குமார் பிறந்தார்
* 1931: ஆன்மீக குரு ஓசோ பிறந்தார்
* 1953: யூனிசெஃப் அமைப்பு உருவாக்கப்பட்டது
*1964: ஐ.நா. பொதுச் சபையில் சே குவேரா உரையாற்றினார்
* 1969: செஸ் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தார்
* 2004: பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி மறைந்தார்
* 2012: சிதார் கலைஞர் ரவிசங்கர் காலமானார்
திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். “மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர், பதவி கிடைக்காததால், மக்களிடம் பிரசாரம் செய்ய போவதாக வீடியோ வெளியிடுகிறார், என்ன கொடுமை சார் இது” என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆதவ் அர்ஜூனாவை அமீர் விமர்சித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.