India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
BGT 4ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் ரிஷப் பண்ட் 28 ரன்களில் அவுட் ஆனது குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் முட்டாள்தனமாக விளையாடினார். இந்தியா தற்போது இருக்கும் சூழலில் இப்படியா விக்கெட்டை பறிகொடுப்பது? இதுதான் எனது இயல்பு என்றெல்லாம் கூறமுடியாது. இது உங்கள் அணியை பிடித்து கீழே இழுப்பதுபோல் உள்ளது” என்றார்.
சிறு வயதில் ஸ்கூல் முடிந்தவுடன் ஒரே ஓட்டமாக வீட்டுக்கு வந்து கார்ட்டூன் நெட்வொர்க் முன் அமர்ந்த ஒரு ஜெனரேஷனே உள்ளது. பலரின் எமோஷனலாக இணைந்திருக்கும் கார்ட்டூன் நெட்வொர்க் 32 வருட நினைவுகளுடன் தனது இணையதளத்தை மூடியுள்ளது. நிதி சுமையை குறைக்கும் விதமாக டிஸ்னி நிறுவனம் இதனை செய்துள்ளது. இருப்பினும் ஆப், யூடியூப் போன்ற தளங்களில் கார்ட்டூன் நெட்வொர்க்கை நாம் காணமுடியும். உங்களுக்கு பிடித்த ஷோ எது?
Rapid & Blitz சாம்பியன்ஷிப் தொடருக்கு நடப்பு சாம்பியன் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்ததால், அதனை மாற்றும்படி FIDE அறிவுறுத்தியது. அதனை அவர் ஏற்க மறுத்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், “F**K Y*U” என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தி, மொத்த தொடரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) விதியின் படி ஆண் போட்டியாளர்கள் பேண்ட், சட்டை கோட் அணிய வேண்டும்.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோயம்பேட்டில் தேமுதிகவினர், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தேமுதிகவினர், முதல்வரை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கோயம்பேட்டில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கால்நடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனவரி முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும், காவல்துறை, தீயணைப்புத்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை மேற்பார்வையில் கண்காணிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 18 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, எருது விடுதல், மஞ்சு விரட்டு, வடமாடு என 4 பகுதிகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன.
விஜயகாந்த் நினைவு நாளையொட்டி தேமுதிகவினரின் அமைதி ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள விவகாரம் பலரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. கடந்த 5ஆம் தேதி காவல்துறைக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்ட நிலையில்,திட்டமிட்டே அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கருணாநிதி நினைவு நாள் அன்று திமுகவின் அமைதி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி? என CMஐ டேக் செய்து நெட்டிசன்கள் வினவுகின்றனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 27% அதிகரித்திருக்கிறது. இதேபோல, 2025ஆம் ஆண்டிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார். சர்வதேச போர் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை தங்கத்தின் விலையை உயர்த்தும் என்று கூறியிருக்கும் அவர், அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைத்தால் விலை எகிறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் நீல நிற தலைப்பாகை அணிந்திருப்பார். ஏன் என நம்மில் பலருக்கு தோன்றும். அதுபற்றி 2006இல் நிகழ்ச்சி ஒன்றில் அவரே பேசியுள்ளார். அவர் “என்னுடைய விருப்பத்திற்குரிய வண்ணங்களில் நீலம் ஒன்று. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த போது நீல நிற தலைப்பாகை என புனைப்பெயர் வைத்தே பாசத்துடன் சக மாணவர்கள் அழைப்பார்கள்” என நினைவுகூர்ந்து பேசினார்.
‘லக்கி பாஸ்கர்’ பட பாணியில் பொது பணத்தை கையாடல் செய்த நபரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளனர். ₹13,000 சம்பளத்திற்கு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஹர்ஷ் குமார், தனது காதலிக்காக BMW கார், வீடு என வாங்கிக் கொடுத்துள்ளார். திடீரென பணக்காரரான இவர் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வரவே சோதனை நடத்தப்பட்டது. புதிதாக வங்கிக் கணக்கு ஒன்றை திறந்து, அரசு நிதி ₹21 கோடியை அவர் அதில் வரவுவைத்தது அம்பலமானது.
2025ஆம் ஆண்டு 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. ஜன 1 – புத்தாண்டு, ஜன 14 – தைப் பொங்கல், ஜன 15 – திருவள்ளுவர் நாள், ஜன 16 – உழவர் திருநாள், ஜன 26 – குடியரசு தினம், பிப் 11 – தைப்பூசம், மார்ச் 30 – தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 – புனித வெள்ளி
Sorry, no posts matched your criteria.