India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில் FIRஐ வெளியிட்டது யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டதாக TN அரசு தெரிவித்துள்ளது. வழக்கமான நடைமுறையில் கோட்டூர்புரம் போலீசார் இணையத்தில் பதிவேற்றம் செய்ததை Citizen Portal மூலம் 14 பேர் பார்த்துள்ளதாகவும், அவர்களது விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஐகோர்ட்டில் கூறியுள்ளது. சிறிய தொழில்நுட்பக் கோளாறால் FIR வெளியானதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதிச் சேவை நிறுவனமான Motilal Oswal தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், 2025 டிசம்பரில் ரீசார்ஜ் கட்டணம் 15% வரை உயர்த்தப்படலாம். ARPU அளவை அதிகரிக்க இனிமேல் இந்த நடைமுறை அடிக்கடி மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. FY25 இல் தொலைத்தொடர்பு துறையின் வருவாய் ₹67,400 கோடியாக உயர்வடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
SBI வங்கியில் காலியாக உள்ள 600 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு நிலை – 1இல் பணியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 – 30. கல்வித் தகுதி: Any UG Degree, CA, CMA, ICWA. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2025. கூடுதல் தகவலுக்கு https://sbi.co.in/ சென்று பார்க்கவும்.
ஈஷா சார்பில் நடத்தப்படும் 16வது கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கலந்துகொள்ள இருக்கிறார். வாலிபால், த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் ஃபைனல்கள் டிச., 29இல் ஆதியோகியின் முன்பு நடைபெற உள்ளன. மேலும், நாதஸ்வரம், தவில், பஞ்சரி மேளம், சிலம்பம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்ததற்கு RBI காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வு தேவை குறைந்ததே முதல் 2 காலாண்டில் வளர்ச்சி குறையக் காரணம் எனவும், RBI-இன் பணக்கொள்கை நடவடிக்கைகளே தேவைகள் குறையக் காரணமாகி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. வட்டியைக் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியும் முன்னாள் RBI கவர்னர் சக்தி காந்ததாஸ் குறைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கும் என்பார்கள். துபாயில் வாட்ச்மேனாக பணிபுரியும் ஹைதராபாத்தை சேர்ந்த ராஜமலையாவிற்கு பிக் டிக்கெட் மில்லியனர் எலக்ட்ரானிக் லக்கி டிராவில் சுமார் ₹2 கோடியே 32 லட்சத்தி 76 ஆயிரத்தி 460 பரிசு கிடைத்துள்ளது. தன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்ற அவர், உதவிய நண்பர்களுக்கும் தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் இந்த தொகையை பயன்படுத்தப் போவதாக கூறினார்.
ஆயிரம் காலத்து பயிரான திருமணத்திற்கு பலர் கனவுகளோடு காத்திருக்கும் நிலையில், உ.பி.யில் சப்பாத்திக்காக மாப்பிள்ளை கல்யாணத்தையே நிறுத்தி விட்டார். திருமண நிகழ்ச்சியின் போது, நீண்ட நேரமாக தனக்கு சப்பாத்தி தராததால், ஆத்திரமடைந்து திருமணத்தை நிறுத்தி தனது உறவினர்களுடன் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், திருமணத்திற்கு ₹ 7 லட்சம் செலவானதாக நஷ்டஈடு கேட்டு புகார் அளித்துள்ளனர்.
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதை, பிரணாப் முகர்ஜியின் மகள் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது தந்தை இறந்தபோது, அவருக்கு இரங்கல் கூட்டம் கூட காங்கிரஸ் நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மூத்த தலைவரிடம் கேட்டபோது, இரங்கல் கூட்டம் நடத்துவதில்லை என அபத்தமாக கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. நேற்று ₹57,200க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,080க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,150ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ₹15 குறைந்து ₹7,135க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றம் ஏதுமின்றி கிராம் ₹100ஆக உள்ளது.
அதானி விவகாரத்தில் ஸ்டாலின் அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு போடுமா என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அதானி விவகாரத்தில் அமெரிக்க அரசின் அறிக்கையில், பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்கள்தான் சிக்கியுள்ளன எனக் கூறிய அவர், அரசியல் உள்நோக்கத்துக்காக இந்த பிரச்னையைக் கையிலெடுத்து, காங்., பேசுவதே அயோக்கியத்தனமானது என சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.