India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா CM தேவேந்திர ஃபட்னவிஸை தொழிலதிபர் கெளதம் அதானி மும்பையில் சந்தித்து பேசியுள்ளார். அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரி எதிர்க்கட்சி MPக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனினும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அம்மாநில அரசு கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2019-20ஆம் நிதியாண்டில் வெளியிட்ட 7ஆம் கட்ட தங்கப்பத்திர கணக்கை முதிர்வுக்கு முன்னதாக முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ₹7,644 வழங்கப்படும் என RBI அறிவித்துள்ளது. இது வெளியிடப்பட்ட விலையை விட 101% அதிகமாகும். இது தவிர ஆண்டுக்கு 2.5% வட்டியும் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தங்க இறக்குமதியை குறைப்பதற்காக 2015இல் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பாரசிட்டமால் மாத்திரைகளில் தரமில்லை என்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக மத்திய சுகாதார இணையமைச்சர் அனுப்ரியா பட்டேல் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் ஆண்டிபயாடிக் நிறுவனம், கர்நாடக ஆண்டிபயோடிக் நிறுவனம், பார்மாசூடிகல்ஸ் நிறுவனம் தயாரித்த மெட்ரானிடசோல், பாரசிட்டமால் மாத்திரைகளில் தரமில்லை என சோதனையில் தெரிய வந்ததாக அவர் கூறினார். அந்நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், அவரது காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் கோவாவில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. முதலில் நாளை காலையில் 2 பேரும் இந்துமத வழக்கப்படி திருமணம் செய்யவுள்ளனர். இதையடுத்து மாலையில் கிறிஸ்தவ மத வழக்கப்படி இன்னொரு முறை திருமணம் செய்யவுள்ளனர். 2 பேரின் திருமணத்திற்கும் திரையுலக பிரபலங்கள், 2 பேரின் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மயிலாடுதுறைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆயுதம் கொண்டு செல்ல உதவினால், சிரியா மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிளர்ச்சிப்படை ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து, சிரியா அதிபர் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இதையடுத்து சிரியாவில் ஆட்சியைப் பிடித்த கிளர்ச்சிப் படையினருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செயல்படாத ஜன்தன் வங்கிக் கணக்குகளில் ரூ.14,750 கோடி பணம் தேங்கி கிடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், நவ.20ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 54.03 கோடி ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 11.30 கோடி கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். இப்போட்டியில் 2 பேரும் சரியாக பேட்டிங் செய்யாமல் சொதப்பினர். இதையடுத்து நடுவரிசையில் இறங்கிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. எனினும், பேட்டிங் வரிசையில் மாற்றமிருக்காது. ரோஹித் நடுவரிசையில் களமிறங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டங்ஸ்டன் விவகாரத்தில் CM ஸ்டாலினை கமல் பாராட்டியுள்ளார். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டசபையில் அவரது பேச்சு, மக்கள் மீதான அவரது அக்கறையையும், இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் இருக்கும் ஈடுபாட்டையும் காட்டுவதாகவும் கமல் கூறியுள்ளார்.
நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ICICI, அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், வருகிற 14ஆம் தேதி இரவு 11.55 மணி முதல் மறுநாள் 15ஆம் தேதி காலை 6 மணி வரை RTGS பரிவர்த்தனை சேவை கிடைக்காது எனத் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணி நடைபெற இருப்பதே இதற்கு காரணம் என்றும், ஆதலால் வாடிக்கையாளர்கள் NEFT, IMPS, UPI மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும்படி ICICI கேட்டுக் கொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.