India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரு சக்கர வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து RTO அலுவலகங்களுக்கும் போக்குவரத்து ஆணையர் கடிதம் எழுதியிருக்கிறார். தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனாலும், இத்தனை நாள் இது கண்டுகொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்புமணியின் மகள் சங்கமித்ரா தயாரிக்கும் ‘அலங்கு’ படத்தின் டிரெயிலரை ரஜினிகாந்த் வெளியிட்டிருப்பது அரசியலாகவும் மாறியுள்ளது. ‘காலம் எவ்வளவு வேகமாக சுத்துது பார்த்தீர்களா’ என சூரியவம்சம் தேவயானி டெம்பிளேட்டுடன் மீம்ஸ்கள் தெறிக்கின்றன. காரணம் 2002இல் ரஜினியின் பாபா படத்தை மக்கள் பார்க்க வேண்டாம் என ராமதாஸ் பேசியிருந்தார். ஆனால் அவரது பேத்தியின் முதல் படத்தின் அறிமுகமே அவரது கையால் வெளியாகியுள்ளது.
”கடவுளே.. அஜித்தே” அப்படியெல்லாம் கூப்டாதீங்கப்பானு நேத்துதான் அஜித் சொல்லி முடிச்சார். அதனால, நம்ம ஆளுங்க இன்னிக்கு விஜய் பக்கம் திரும்பிட்டாங்க. குறும்புக்கார ரசிகர் ஒருத்தரு விஜய்யை ஏசு கிறிஸ்து மாதிரி வரைய சொல்லி AI கிட்ட கேட்க, அதுவும் போட்டோவை வரைஞ்சு தள்ளிடுச்சி. அடுத்து, “என்னைய இப்படியெல்லாம் பண்ணாதீங்கப்பா” அப்படினு அறிக்கை விடனும் போல.
பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழாவையொட்டி, பாரதியின் முழுமையான படைப்பு நூல்களின் தொகுப்பை இன்று நண்பகல் 12 மணிக்கு PM மோடி வெளியிடுகிறார். இதில், பாரதியாரின் படைப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கப் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. தமிழில் வெளியிடப்படும் இந்நூலை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இவர், பாரதியாரின் சகோதரரான விஸ்வநாதனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஆவார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ.60 வரை அண்மையில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை கிலோ ரூ.20ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக குறைந்த அளவில் தக்காளி வாங்கிய மக்கள், மீண்டும் பழையபடி கிலோ கணக்கில் வாங்கத் தொடங்கியுள்ளனர். உங்கள் பகுதியில் தக்காளி விலை என்ன? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
அரசியல் சட்டத்தின் 67பி பிரிவின் படி, ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இத்தீர்மானம் பெரும்பான்மையுடன் இரு சபைகளிலும் நிறைவேற வேண்டும். இதனை ஏற்க 14 நாள்கள் அவகாசம் தர வேண்டும். குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 20ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அத்துடன், இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லாததால், தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய வீரர்கள் 2 பேர் இடம் பிடித்துள்ளனர். இப்பட்டியலில் இந்திய ஸ்டார் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா 7வது இடம் பிடித்துள்ளார். இந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல ஹர்திக் முக்கிய காரணமாக இருந்தார். அதைப்போல் ஐபிஎல்லில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய(uncapped) வீரர் ஷஷாங்க் சிங் 9வது இடத்தில் உள்ளார்.
2024ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் Indian Premiere League (IPL) முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் T20 World Cup, மூன்றாவது இடத்தில் Barathiya Janatha Party ஆகியவை உள்ளன. Election Results 2024 நான்காவது இடத்தை பிடித்த நிலையில், மறைந்த ரத்தன் டாடா ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கொரோனா நிதியில் ₹265 கோடி நிதியை செலவிடப்படவில்லை என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரை சமாளிக்க மத்திய அரசின் ₹1,435 கோடி, மாநில அரசின் ₹351 கோடி என மொத்தம் ₹1,787 கோடி நிதியை தேசிய சுகாதார இயக்கம் வாங்கியது. இதில் ₹264.48 கோடி நிதி பயன்படுத்தப்படவில்லை. அதேபோல, 3,757 ஆக்சிஜன் செறிவூட்டிகளில் 147 பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.