India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அம்பேத்கர் போட்டோ முகமூடியை அணிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசிகவினர் நடத்திய 1000 முறை அம்பேத்கர் பெயரைக் கூறும் போராட்டம் கவனத்தை ஈர்த்துள்ளது. திருமாவளவன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ‘புரட்சியாளர் அம்பேத்கர்’ என விண்ணதிர முழக்கங்களை எழுப்பினர். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
AUSக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் இன்றைய போட்டியில், நிதிஷ்குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார். இது குறித்து அவரது தந்தை முத்யாலா ரெட்டியிடம் கேட்டதற்கு, தங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம் எனவும், இந்த நாளை வாழ்நாளில் மறக்க முடியாது எனவும் உணர்ச்சிப்பொங்க தெரிவித்தார். மேலும், சிறு வயது முதலே சிறப்பாக ஆடியவன், தற்போது சர்வதேச போட்டியிலும் சிறப்பாக ஆடுவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆப்கனிலுள்ள சில பகுதிகள் மீது பாக். விமானப்படை அண்மையில் தாக்குதல் நடத்தியதில் 46 பேர் பலியாகினர். இதற்கு பதிலடி காெடுப்போம் என தலிபான் அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் பல பகுதிகளுக்குள் புகுந்து இன்று தலிபான்கள் நடத்தியத் தாக்குதலில் 19 வீரர்கள் பலியானதாகவும், 2 ராணுவ முகாம்களை தலிபான்கள் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது முழுபோராக மாறலாம் என அஞ்சப்படுகிறது.
அன்புமணியை சமாதானம் செய்ய குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நாளை அன்புமணியை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு கட்சியில் பதவி வழங்கியதை, அன்புமணி எதிர்த்ததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சாய் பல்லவியின் 16 வயதிலேயே, அவரது நம்பரை ‘ஹீரோயின்’ என தனது மொபைலில் Save செய்ததாக ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். எதற்கு அவ்வாறு செய்தேன் என தெரியவில்லை எனவும், ஆனால், அப்போதே ஹீரோயின் ஆவதற்கான தடயங்களை சாய் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியை ராஜ்குமார் இயக்கியதும், பல்லவி அதில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில், பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் சுதந்திரமாக சுற்றுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். CM ஸ்டாலின் சுவரொட்டி மீது மூதாட்டி செருப்பு வீசிய வீடியோ வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைதான நிலையில் மூதாட்டி மீதும் போலீஸ் வழக்கு பதிந்ததாக தெரிகிறது. இதனை கண்டித்த அண்ணாமலை, மூதாட்டி மீதான வழக்கை ரத்து செய்வதுடன், பிரதீஷை விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதே திட்டம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கும் நாளை மறுநாள் (30ஆம் தேதி) விரிவுப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதும், அந்த மாணவிகளின் வங்கிக்கணக்கில் அரசால் மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக் கொண்ட பின் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தேர்தல் வேட்பாளர் வரையறை, ஓட்டு போடும் வயது உள்ளிட்டவற்றை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்களின் குறைந்தபட்ச வயது வரம்பை 17 ஆகவும், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோல்டன் குளோப் விருது வென்ற ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹசி எஸ்ய்லே காலமானார். மார்பக புற்றுநோயால் 2008 முதல் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு சிகிச்சை எடுத்த போதிலும், வீட்டில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1968இல் வெளியான ரோமியோ, ஜூலியட் மற்றும் டெத் ஆன் தி நைல், சைக்கோ 4 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் மதிப்புமிக்கவர்களாக இந்தியர்கள் இருக்க விரும்பினால், நமது நாட்டிற்குள்ளேயே டெக்னாலஜி சார்ந்த திறன்களை வளர்க்க வேண்டும் என ZOHO CEO ஸ்ரீதர் வேம்பு அறிவுறுத்தியுள்ளார். வெளிநாட்டில் சாதனைகள் புரிவது உண்மையான மரியாதையை வழங்காது எனவும் கூறியுள்ளார். USAல் இந்தியர்கள் குடியேற்றம், திறமையானோரை தக்கவைப்பது குறித்து விவாதிக்கப்படும் நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.