India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமதாஸை அன்புமணி சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தைலாபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த சந்திப்பின் போது PMK மூத்த நிர்வாகிகள் சிலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. அக்கா மகனுக்குக் கட்சியில் பொறுப்பு வழங்கியதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழுவிலிருந்து பாதியில் வெளியேறினார். அவருடன் GK மணி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேல்மலையனூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தன் உடல் நலக்குறைவால் காலமானார். 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றவர். உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தமிழ்மொழி ராஜதத்தன் மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு மலையை சாப்பிட முடியுமா? ஆம், நாங்கள் காலம் காலமாக சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள், ஈரான் அருகே இருக்கும் ஹார்முஸ் தீவு மக்கள். இவர்கள் உணவு – மீன் மசாலாவாக அங்குள்ள மலையை பயன்படுத்துகிறார்கள். ஏன், பிரேட்டும் தயாரிக்கிறார்கள். ரெயின்போ வண்ணத்தில் காட்சியளிக்கும் இந்த ஹார்முஸ் மலையில் வெவ்வேறு உப்பு தாதுக்கள் படிந்திருப்பதால், உலகிலேயே சாப்பிட கூடிய ஒரு மலையாக உள்ளது. டேஸ்ட் பண்ணிடுவோமா?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதன்படி விசாரணை நடத்த NCW ஆணையத்தின் தலைவர் விஜயா ரகத்கர் அமைத்துள்ள 2 பேர் கொண்ட குழு நாளை சென்னை வரவுள்ளது. இக்குழு பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தவுள்ளது.
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விடாமுயற்சி, கேம் சேஞ்சர் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளதால், தற்போது இப்படத்திற்கு திரைகளில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்பரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் என்ற புகழைக் கொண்டது காஞ்சி கைலாசநாதர் கோயில். கி.பி. 700இல் 2ஆம் நரசிம்ம வர்மனால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் இது. மணற்கற்களால் ஆன இக்கோயிலின் கருவறையில் மூலவர் 16 பட்டை லிங்கமாக உள்ளார். ஈசனின் 58 கோயில்கள் ஒருங்கே காட்சித் தரும் புனர்ஜனனி தத்துவ திருத்தலமான இங்கு சென்று, வில்வ இலை மாலை சாற்றி வணங்கினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
பாமகவில், தேர்தல் கூட்டணி முடிவுகளை இனி ராமதாஸ் மட்டுமே எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. <<15002794>>ராமதாஸ் – அன்புமணி இடையேயான பனிப்போர்<<>>, நேற்று பொதுக்குழுவில் உச்சத்தை எட்டி வார்த்தை போர் நடந்தது. இதனால், தனி ஆபீஸ் முடிவு வரை அன்புமணி சென்றுவிட்டார். அவரை சமாதானம் செய்ய மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்து வரும் நிலையில், அன்புமணி ஆதரவாளர்கள் பனையூர் ஆபீஸுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் நியோ பூங்காவை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு முதல்வர் கள ஆய்வு மேற்கொள்கிறார். அந்த வகையில், 63,000 சதுர அடி பரப்பளவில் ₹30 கோடியில் காட்டப்பட்டுள்ள டைட்டல் நியோ பூங்காவை திறந்து வைக்கிறார். அதேபோல, புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.
தென் கொரியாவின் முவான் நகரில் ஏற்பட்ட விமான விபத்துக்கு landing gear செயலிழந்ததுதான் காரணம் என்று கருதப்படுகிறது. பேங்காக் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் முவான் நகரில் தரையிறங்க முயற்சித்தபோது சக்கரங்கள் (landing gear) வெளியே வரவில்லை. இதனால், சக்கரங்கள் இல்லாமல் தரையில் மோதிய விமானம், நிற்க முடியாமல் சுவற்றில் மோதியது. இதில், 181 பயணிகள் இருந்தனர்.
தபால் துறையை லாபம் ஈட்டக்கூடியதாக மாற்றுவதற்கான சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அதிகமான வாடிக்கையாளர்களை பெறுவதுடன், அவர்களை தக்கவைப்பது மற்றும் செயல்படும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அடுத்த 7 ஆண்டுகளில் தொழில்துறை போட்டிகளை சமாளிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.