India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கையில் துறைமுக முனையம் அமைக்கும் திட்டத்திற்காக அமெரிக்க வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் சுமார் ₹4,700 கோடி கடன் பெறும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தனது சொந்த வருவாய் மற்றும் மூலதனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கு ₹2000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, அலுவலகம் சென்றோர், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் கவனமாக வீடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், தற்போது தி.மலை, காஞ்சி, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கி., வீரர் ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் (4), பண்ட்(9) இருவர் மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளனர். ஆனால் விராட் கோலி, அவரது கரியரில் மிக மோசமான ரேங்கிங்கில், 20ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸி., டூரில் கோலி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலியின் சரிவு, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வாரம் 5 படங்கள் திரைக்கு வரவுள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’, சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’, பரத் நடிக்கும் ‘Once Upon A Time In Madras’ ஆகிய 3 படங்கள் நாளை மறுநாள் வெளியாகின்றன. அன்சல் பால் நடித்துள்ள ‘மழையில் நனைகிறேன்’ படமும் நாளை வெளியாகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி’ திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆகிறது.
தன் மீது தவறாக புனையப்பட்ட குடும்ப வன்முறை வழக்கையும், திருமணத்தையும் ரத்து செய்யக்கோரி தெலங்கானாவை சேர்ந்தவர் SC-இல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், 498A சட்டப்பிரிவை மனைவி தவறாக பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டதுடன், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து, கணவன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
மனைவி கொடுமைப் படுத்துவதாக கூறி <<14842776>>கணவன் தற்கொலை<<>> செய்துகொண்டது விவாதமாகி உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவனையும், அவரது குடும்பத்தினரையும் பழிவாங்க சட்டப்பிரிவு 498A தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதி நாகரத்னா தீர்ப்பளித்துள்ளார். இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில், மாதவன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுத, ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதன்மூலம், LCU-வில் மாதவன் இணைவார் என கருதப்படுகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கடைசியாக ‘ஆயுத எழுத்து’ படத்தில் மாதவன் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.
கணவனோ, அவரது உறவினர்களோ யாராக இருந்தாலும், திருமணமான பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ கொடுமைக்கு ஆளாக்குவதை இந்த 498A சட்டப்பிரிவு (BNS 84) கிரிமினல் குற்றமாக வரையறுக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டம் வழி செய்கிறது. ஆண்களை பழிவாங்க இச்சட்டப்பிரிவு அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
AP-யை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பையா (45) சக வீரர்கள் 30 பேரின் உயிரைக் காப்பாற்றி வீர மரணமடைந்துள்ளார். ஜம்முவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக கண்ணிவெடியை மிதித்துள்ளார். இதனை அறிந்த அவர், உடனடியாக சக வீரர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதால், அவர்கள் உயிர்தப்பினர். எனினும், சுப்பையா கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தார்.
இந்தாண்டு பிப். மாதம் கோலி-அனுஷ்கா தம்பதிக்கு மகன் பிறந்தார். அவருக்கு Akaay என பெயர் வைத்தனர். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு கூகுளில் அதிக முறை தேடப்பட்ட ’வார்த்தையின் அர்த்தம்’ என்ற பட்டியலில் Akaay 2வது இடம் பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில் ‘All Eyes on Rafah’ என்ற வார்த்தை முதலிடத்தில் உள்ளது. இதை பார்க்கும் கோலி ரசிகர்கள் பிறந்ததில் இருந்தே Akaay சாதனை படைக்க தொடங்கிவிட்டதாக கமெண்ட் செய்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.