India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
RS தலைவர் ஜெக்தீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுவதால்தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவதாக CONG தலைவர் கார்கே கூறியுள்ளார். அனுபவம் வாய்ந்த தலைவர்களை பேச அனுமதிக்காததோடு, அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட ஜெக்தீப் தன்கரே காரணமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஜெக்தீப் தன்கரை பதவி நீக்க, RS-இல் எதிர்க்கட்சி எம்பிக்கள் 60 பேர் நம்பிக்கையில்லா நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
‘சூது கவ்வும் 2’ நாளை மறுநாள் (டிச.13) ரிலீசாக உள்ள நிலையில், Book My Show தளத்தில் தற்போது வரை 2,000 பேர் அப்படத்தை காண ஆவலாக உள்ளனர். முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், 2ஆம் பாகம் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியலுடன் டார்க் காமெடி கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் தற்போது மிர்ச்சி சிவா நடித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வந்தது எப்படி என்று நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, ஐகோர்ட் வளாகத்திற்குள் வைத்துதான் கைமாற்றப்பட்டதாக காவல்துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்தது.
மேற்குவங்கம் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி போன்ற மசூதி கட்டப்படும் என TMC எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், WB உள்ள 34% முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழவும், முஸ்லிம்களின் தார்மீக உரிமையை நிலைநாட்டவும் மசூதி கட்டப்பட வேண்டியது அவசியம் என்றார். மசூதிக்காக ரூ.1 கோடியை தான் வழங்கவுள்ளதாகவும், டிசம்பர் 6, 2025க்குள் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவர இருப்பதாக JKNC கட்சி அறிவித்துள்ளது. VHP மாநாட்டில் கலந்துகொண்ட சேகர் குமார், வகுப்புவாதத்தை தூண்டும் வகையில், பொது சிவில் சட்டத்தை ஆதரித்து பேசியதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர்கள் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.
TN-க்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதியைத் தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக CONG MP சசிதரூர் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேரிடர் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், தமிழ் நாட்டில் பாதிப்பு கடுமையாக இருக்கிறது எனத் தெரிந்தும், மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக சாடியுள்ளார். பேரிடர் காலங்களில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குறை கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சளியும், இருமலும் இதன் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தால் கடுமையான தொண்டை வலியும் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுக வேண்டியது அவசியம்.
பெங்களூரில் மனைவியின் டார்ச்சர் தாங்காமல் கணவன் தற்கொலை செய்த நிலையில், அவர் சாவதற்கு முன் போட்டு வைத்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. போனில் கைரேகை பாஸ்வேர்டை அழிப்பது, கார், பைக் சாவியை ஃபிரிட்ஜில் வைப்பது, ஆபிஸ் லேப்டாப்பை ஒப்படைப்பது, சேமிப்பை மகனுக்கு கொடுப்பது, இறப்பதற்கு முன் குளிப்பது உள்ளிட்டவை லிஸ்ட்டில் உள்ளன. இத்தனை பெர்ஃபெக்டாக இருந்தவருக்கு வாழ்வில் எதிர்நீச்சல் போட தெரியாமல் போயிற்றே..
ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில், வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘ஆறு’ படத்திற்கு பிறகு த்ரிஷா, சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.