India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஸ்வகர்மா திட்டத்தை காப்பி அடித்து, கலைஞர் கைவினை திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக அரசு திட்டத்தில் 35 வயதிற்கு மேல் உள்ளவர்களே இணைய முடியும். எனவே, இத்திட்டத்தை கைவிட்டு, விஸ்வகர்மா திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அதானியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று கூறினால், ஆதாரத்தை வெளியிட தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.
நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், இதுவரை எந்த மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை. கனமழையின்போது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க பள்ளிகளுக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை விடுமுறை அப்டேட் வெளியாகவில்லை. இதனால் நாளை விடுமுறையா? இல்லையா? என மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
பொது இடத்தில் கட்சிக் கொடிக்கம்பங்கள் அமைக்கப்படுவதை ஏன் தடை செய்யக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலை அனுமதிக்க முடியாது என்றார். கட்சி கொடிக் கம்பங்களால் இதுவரை நிகழ்ந்த விபத்துகள் எத்தனை? பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எத்தனை என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
மூளையில் சிலருக்கு கட்டி வளரும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால் சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கும். 1) அடிக்கடி தலைவலி வருதல் 2) வலிப்பு 3) மங்கலான பார்வை 4) தலைசுற்றல் – வாந்தி 5) ஞாபக மறதி 6) அடிக்கடி கோபம் 7) பேச்சு இடர்பாடு 8) காது கேட்காமல் போவது ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும். SHARE IT.
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய AUS, 298/6 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சதர்லேண்ட் (110) சதமடித்தார். தொடர்ந்து விளையாடிய IND அணி 45.1 ஓவரில், 215 ரன்களில் ஆட்டமிழந்தது. ஸ்மிருதி மந்தனா சதம் (105) அடித்தார். ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய AUS, இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
2025 ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், பல முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகளை டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில், தனது மூத்த மகன் டொனால்ட் ஜூனியரின் வருங்கால மனைவி கிம்பெர்லி குல்ஃபாயிலை கிரீஸ் நாட்டு தூதுவராக தேர்வு செய்துள்ளார். சட்டம், ஊடகம், அரசியல் ஆகிய துறைகளில் பெற்றுள்ள நிபுணத்துவத்தால் அவரை தேர்வு செய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மது அருந்துவோருக்கு ஒரு அதிர்ச்சி கலந்த எச்சரிக்கையை டாக்டர்கள் கொடுத்துள்ளனர். 2 மணிநேரத்தில் 6 பெக் மதுவை நீங்கள் அருந்துபவர் என்றால், உங்களை பெரும் குடிகாரர் என டாக்டர்கள் வகைப்படுத்துகிறார்கள். அதுவே, 2 மணிநேரத்தில் 10-12 பெக் அடிப்பவர் என்றால் மிக தீவிரமான குடிகாரர் என்கிறார்கள். இவர்களுக்கு கணையம், கல்லீரல், இதயம், மனரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும் எச்சரிக்கின்றனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையின்போது, மெரினாவில் மின்கசிவு ஏற்பட்டதாக, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல்குமார் வீடியோ வெளியிட்டிருந்தார். ஆனால் அந்த சம்பவம், வியட்நாமில் நடந்தது என TN Fact Check குழு விளக்கமளித்தது. இந்நிலையில், வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் ரோலில் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் வெளியான 6 நாள்களில் ₹1000 கோடியை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை வசூலிப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான், சல்மான் கான், பிரபாஸ் ஆகியோர் கூட செய்யாத சாதனையை அல்லு அர்ஜுன் படைத்துள்ளதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் ஓர் ஆய்வகத்திலிருந்து ஆபத்தான வைரஸ்கள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. ஹென்ட்ரா, லைசா, ஹண்ட்டா ஆகிய உயிர்க்கொல்லி வைரஸ்கள் அடங்கிய 323 சாம்பிள்கள் மிஸ் ஆகியுள்ளன. அதுவும் 2023ம் ஆண்டே அவை காணாமல் போய்விட்டன. ஆனால், இன்றுதான் அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து மிஸ்ஸான வைரஸ்தான், உலகையே அச்சுறுத்திய கொரோனா என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.