India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை- சென்னை இடையே பயணிக்கும் பாண்டியன் Exp ரயிலில், துணி உறையுடன் கம்பளி போர்வை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, ரயில்களில் வழங்கப்படும் போர்வைகள் மாதம் ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் கூறியது பயணிகள் இடையே அதிருப்தி ஏற்படுத்தியது. இதையடுத்து, மாதத்திற்கு 2 முறை துவைப்பதாக ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் வெளியிட்ட X பதிவில், தேர்தல்கள் மாறி மாறி நடப்பதால் PM, CM, MLA, MP என அனைவரது நேரமும் வீணாவதுடன், மக்கள் நலத் திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே தேர்தல் நடத்தப்படவும், இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஜாம்பவான்களுக்கே டஃப் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா. கானா, மெலடி, பிஜிஎம் என அனைத்திலும் புகுந்து விளையாடியவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறும் போது, எனது பாடல்களை இப்ப உள்ள படங்களில் பயன்படுத்துறாங்க. இந்த காலத்து பசங்களுக்கும் என் பாட்டு ரீச் ஆகுது. அதனால என் பாட்டை பயன்படுத்த கூடாதுனு நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன். அது எனக்கு பெருமைதான் என்றார்.
திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த இபிஎஸ் மீது தனிமனித தாக்குதல் நடத்துவதா என்று ஆர்.பி.உதயகுமார் கொந்தளித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கும், மத்திய அரசின் சிறப்பு மண்டலத்திற்கும் கூட அமைச்சருக்கு வித்தியாசம் தெரியவில்லை என ரகுபதியை விமர்சித்த அவர், மத்திய அரசுக்கு நீர்வளத்துறை அமைச்சர் எழுதிய கடிதத்தை வெளியிட திமுக அரசுக்கு தைரியம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருத்தர ஏமாத்த, ஆசையை தூண்டணும் என ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு வசனம் வரும். அதற்கேற்றார்போல், ஆப்பில் டிரேடிங் செய்தால் பணமழை கொட்டும் என முன்பின் தெரியாத ஒரு பெண் கூறியதை கேட்டு, ₹4.05 கோடியை இழந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஒருவர். தனியார் நிதிநிறுவனத்தின் பிரதிநிதி என கூறி, அப்பெண் வாட்ஸ்அப்பில் அந்நபரை தொடர்பு கொண்டு, APP-ஐ டவுன்லோடு செய்ய சொன்னது தெரியவந்துள்ளது. உஷாரா இருங்க மக்களே..
நவம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் கைப்பற்றியுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. கடந்த மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் பும்ரா, பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், SA ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்த நிலையில், பாக்., வீரர் விருதை வென்றுள்ளார்.
SWIGGY, ZOMATO உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு மத்திய அரசு இனிப்பான செய்தியை அறிவித்துள்ளது. இதுவரை இந்த ஊழியர்களுக்கு சம்பளத்தை தவிர, வேறு எந்தவித பலன்களும், எதிர்கால பாதுகாப்பும் இல்லாத சூழல் இருந்தது. இந்நிலையில், இந்த ஊழியர்களுக்கு பென்சன், மருத்துவக் காப்பீடு போன்ற பலன்களை கொடுக்கும் வகையிலான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை செயலர் சுமிதா தவ்ரா அறிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் சிறுவன் கருப்பசாமி (10) ஆசனவாயில் காயத்துடன் இறந்துகிடந்த நிலையில், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது குறித்து சிறுவனின் தாயார் சில வாரங்களுக்கு முன்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல், சிறுவனை கொலை செய்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாரதியார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு தமிழிசை மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பாரதியை, திமுக அரசு ஏன் கொண்டாடுவதில்லை என ஆவேசமாக கேள்வியெழுப்பினார். மேலும், பெண்ணுரிமைக்கு அடையாளமாக பெரியாரை கொண்டாடும் இந்த அரசு, அவருக்கு முன்பே பெண்ணுரிமை பாடிய பாரதிக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
தென் கொரியாவில் தீவிர குடிப்பழக்கம் கொண்டிருந்த பெரும்பான்மையான மக்கள், அதிலிருந்து மீண்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்பு கூட்டம் நிரம்பி வழிந்த பார்கள், தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. குடிப்பழக்கத்தை மக்கள் கைவிடுவதற்கு, அந்நாட்டின் நீண்டகால பணவீக்கம்தான் காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பான்மையானோர் கடனாளிகளாக இருப்பதால், குடிக்கு பணம் செலவு செய்ய யோசிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.