India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உக்ரைனை சாக்காக வைத்து தன்னை தொடர்ந்து சீண்டும் நேட்டோ நாடுகளை டார்கெட் செய்யும் வகையில், 2025-ல் பெலாரஸில் அதிநவீன Oreshnik ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. நொடிக்கு 3 கிமீ வேகம் செல்லும் இந்த ஏவுகணை, பாரீஸை 8.3 நிமிடத்திலும், லண்டனை 8.8 நிமிடத்திலும் தாக்கும். ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் வல்லமையும் கொண்டது. இதை அண்மையில் உக்ரைனில் ஏவி ரஷ்யா சோதித்தது குறிப்பிடத்தக்கது.
➤மேஷம் – முயற்சி ➤ ரிஷபம் – இன்பம் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – செலவு ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – வெற்றி ➤துலாம் – உறுதி ➤விருச்சிகம் – சுபம் ➤தனுசு – தனம் ➤மகரம் – பக்தி ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – அன்பு.
சிலர் வேலை வெட்டி இல்லாமல் போகிறபோக்கில் கருத்து சொல்லிச் செல்கிறார்கள் என்று அண்ணாமலையின் விமர்சனத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அரசியலில் நாகரீகமாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், உள்ளூரில் நின்றாலும் தோல்வி, வெளியூரில் நின்றாலும் தோல்வி என தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடியவர்கள், அவர்களுடைய இருப்பை காட்டுவதற்காகவே அவதூறு கருத்துகளை பரப்புவதாகவும் சாடியுள்ளார்.
தலையணை இல்லாமல் தூங்கினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 1) தலையணை இல்லாமல் படுப்பதால் முதுகெலும்பு நேராக இருக்கும். இதனால் முதுகு மற்றும் கழுத்து வலி வராது. 2) தலைக்கு நல்ல ரத்த ஓட்டமும், ஆக்சிஜனும் கிடைப்பதால் அந்த நாளே சுறுசுறுப்பாக இருக்கும். தலைவலியும் வராது 3) உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் இருப்பதால் மன அழுத்தம் பல மடங்கு குறைகிறது.
மனைவி டார்ச்சர் தாங்காமல் பெங்களூரில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்த நிலையில், அவரது மனைவி நிகிதா சிங்கானியாவின் குடும்பத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நடந்த விஷயத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. எனினும், அதுல் மரணத்திற்கு வருந்துகிறோம் எனத் தெரிவித்துள்ளனர். போலியாக வரதட்சணை புகார் கொடுத்து தொந்தரவு செய்ததால், அதுல் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா (105) புதிய சாதனை படைத்துள்ளார். ஒரே ஆண்டில் 4 சதமடித்த முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்றை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 9 சதம் விளாசியுள்ள அவர், இந்தியாவில் அதிக சதமடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்திலும் உள்ளார். 2ஆவது இடத்தில் 7 சதங்களுடன் மித்தாலி ராஜ் உள்ளார்.
மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த தினமான இன்று, அவரது நூல் தொகுப்பை வெளியிட்டு பேசிய PM மோடி, மாபெரும் கவிஞன் பாரதியை பயபக்தியுடன் வணங்குகிறேன் என்றார். பாரதத்தின் தேவையை மனதில்கொண்டு பாடுபட்டவர் பாரதி என்று புகழ்ந்த மோடி, அந்தக் காலத்திலேயே அவருக்கு இருந்த விசாலமான பார்வை தனக்கு வியப்பை தருவதாகவும், தன் ஒவ்வொரு மூச்சையும் பாரதத்திற்காக அர்ப்பணித்த மகான் எனவும் புகழாரம் சூட்டினார்.
புத்தாண்டை முன்னிட்டு ஜியோ புதிய ரீசார்ஜ் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. ₹2025-க்கு ரீசார்ஜ் செய்தால், 200 நாள்கள் வேலிடிட்டியில், தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் மெசேஜ் வசதியை வழங்குகிறது. அதோடு Azio, ஸ்விக்கி என ₹2,150 மதிப்புள்ள பல்வேறு தள்ளுபடி கூப்பன்களும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இன்று முதல் 2025 ஜனவரி 11க்குள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கண்ணீர் துளிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். கண்ணீரில் ‘Nacre’ என்ற நுண் படிகம் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த படிகத்தை அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது மின்சாரம் தயாரிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வருங்காலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க இது பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரெட் ஜெயண்ட் மூவிஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரியா வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.