news

News December 30, 2024

தினம் ஒரு பொன்மொழி!

image

✦மனிதாபிமானம் என்பது அழுவதல்ல; அநீதிக்கு எதிராக போராடுவதேயாகும். ✦புரட்சி செய்ய புறப்பட்டவனுக்கு துணை நிற்பதே படைப்பாளியின் கடமை. ✦சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாத எழுத்தும் பேச்சும் குப்பைக்கு சமமானதே. ✦அடிமைக்கும் ஆண்டைக்கும் இடையே சமரசத்தை செய்வது என்பது கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல. ✦பிச்சை இடுபவன் அருவருக்கத்தக்கவன்; பிச்சை எடுப்பவன் பரிதாபத்துக்கு உரியவன்.
-மாக்ஸிம் கார்க்கி

News December 30, 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்

image

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) நேற்று இரவு காலமானார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர், ஜார்ஜியாவில் உள்ள வீட்டில் காலமானதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1977-1981 வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார். நீண்ட காலம் வாழ்ந்த US ஜனாதிபதி என்ற சாதனையை கார்ட்டர் பெற்றுள்ளார்.

News December 30, 2024

ஆதார்- PAN இணைப்பு நாளையே கடைசி

image

வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் PAN கட்டாயமாகும். இதை ஆதார் எண்ணுடன் இணைக்க டிச.31 வரை வருமான வரித்துறை அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் (டிச.31) நிறைவடைய உள்ளது. இந்த தேதிக்குள் உங்கள் PAN எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் PAN ரத்து செய்யப்படலாம். இதனால் வங்கிப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 30, 2024

வாக்குச்சீட்டு தேர்தல் முறை வேண்டும்: அகிலேஷ் யாதவ்

image

இந்தியாவில் சிலரது நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் நம்பவில்லை எனவும் கூறியுள்ளார். வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 30, 2024

ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி

image

IPS ஜோடியான <<15015653>>வருண்குமார்<<>>, வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

News December 30, 2024

அண்ணா பல்கலை. குற்றவாளி DMKவைச் சேர்ந்தவர்: சீமான்

image

அண்ணா பல்கலை. குற்றவாளி DMKவைச் சேர்ந்தவர் என்பது அக்கட்சியின் பேனர், அமைச்சர்களின் போட்டோக்களின் மூலம் தெரிய வந்துள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். மா.சுப்பிரமணியம் கைதான நபரின் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதாகவும், துணை முதல்வரோடு இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளதாகவும் சாடியுள்ளார். அவர் கட்சியில் இருக்கிறாரோ, இல்லையோ இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

News December 30, 2024

தனியார் வங்கிகளில் பணி விலகல் விகிதம் அதிகரிப்பு

image

தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது அதிகமாக உள்ளது என RBI தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையிலிருந்து விலகுவோர் விகிதம் சராசரியாக 25% என்ற அதிகபட்ச அளவில் உள்ளது. இது, வங்கி செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்துவதால், பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் வங்கிகளை RBI வலியுறுத்தியுள்ளது.

News December 30, 2024

சத்துணவு பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல்

image

தொகுப்பு ஊதியம் அடிப்படையில் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சத்துணவு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த, 30 ஆண்டுகளாக போராடி பெற்ற சிறப்பு காலமுறை ஊதியத்தை, மீண்டும் தொகுப்பு ஊதிய முறைக்கு கொண்டு செல்வதற்கு சத்துணவு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு இதனை கைவிடவில்லையெனில், போராட்டத்தை தொடர்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

News December 30, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 133 ▶குறள்: ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். ▶பொருள்: ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

News December 30, 2024

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழை பெய்யலாம் என RMC கணித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், மழை பெய்யலாம் என முன்னறிவித்திருந்தது.

error: Content is protected !!