India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சி, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகூர் தர்கா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையிலும், கனமழையால் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை இலவசமாக அப்டேட் செய்யும் வசதி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. எனினும் டிசம்பர் 14ஆம் தேதி வரை அதை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நீட்டித்திருந்தது. இந்த அவகாசம் நாளை மறுதினத்துடன் முடியவடையவுள்ளது. அதன்பிறகு ரூ.50 கட்டணம். ஆதலால் இந்த இலவச சேவையை பயன்படுத்தி அப்டேட் செய்யும்படி நாட்டு மக்களை UIDAI கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை, விழுப்புரத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோவால் கூட்டாக நடத்தப்படுகின்றன. இதையடுத்து 2030இல் அப்போட்டிகள் மொராக்கோ, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளன. சென்டினரி போட்டிகள் அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே நாடுகளிலும், 2034ஆம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சவுதி அரேபியாவிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் தொழிலதிபரை ஐஸ்வர்யா ராய் 2ஆவது திருமணம் செய்ததாக செய்திகள் வெளியாகின. 2 பேரும் ஒன்றாக அமர்ந்திருப்பது உள்ளிட்ட புகைப்படங்களும் பரவின. இது உண்மையா என FACT CHECK செய்து பார்த்தபோது, அது பொய்யான செய்தி, படமும் உண்மையானது இல்லை. டிஜிட்டல் அடிப்படையில் அந்த படம் போலியாக தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. யார் இதை செய்தார்கள் எனத் தெரியவில்லை.
இந்தியா, ஆஸி இடையேயான 3ஆவது டெஸ்ட் வருகிற 14ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் காபா மைதானம் எப்படி இருக்கும் என்பது குறித்து பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி பேட்டி அளித்துள்ளார். நல்ல வேகத்துடன் பந்து பவுன்ஸ் ஆகும் வகையில் மைதானத்தை உருவாக்குவதாகவும், பேட்ஸ்மேன்கள், பவுலர்களுக்கு சமவாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் அம்பிகாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஹோட்டலில், பிளாஸ்டிக் கழிவுகள் கொடுத்தால் உணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கால் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இட்லி உள்ளிட்ட டிபன் வகைகளும், 1 கிலோ கழிவுகளுக்கு ஃபுல் மீல்ஸும் கொடுக்கிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பசியோடு யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கில் இந்த Garbage Cafe செயல்பட்டு வருகிறதாம்.
உலகில் நம்பர் 1 கோடீஸ்வரராக உள்ளார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க். தற்போது அவரின் சொத்து மதிப்பு சட்டென இந்திய மதிப்பில் ரூ.4.50 லட்சம் கோடி (50 பில்லியன் டாலர்)அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.33.92 லட்சம் கோடியாக (439.2 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. உலக அளவில் தனிநபர் ஒருவருக்கு மிக அதிக அளவு சொத்து இருப்பது இதுவே முதல்முறை.
மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பதவி உயர்வுக்காக மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மாநிலங்களவையில் தன்கர் பள்ளித் தலைமை ஆசிரியர் போல செயல்படுவதாகவும், எதிர்கட்சிகள் தரப்பில் முக்கியமான விவகாரம் குறித்து பேச முயன்றால் தன்கர் அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் போல தன்கர் செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.