India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நடிகர் பிரபாகர் கல்யாணி, வீட்டில் மயங்கி விழுந்து காலமானார். இவர் 2 நாள்களுக்கு முன் தான் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காந்தாரா’ படத்தின் மூலம் பெரும் பிரபலமடைந்த பிரபாகர், மேடை நாடகங்களிலும் மக்களை பெருமளவில் கவர்ந்தார். முன்னதாக, காந்தாரா 1’ படத்தில் நடித்து வந்த 3 நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது.
டிரம்ப்பை எப்படி டீல் செய்வதென்று PM மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். மோடியும் டிரம்ப்பும் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால், இதை செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். விரைவில் இந்தியா வரவுள்ளதாக தெரிவித்த அவர், இந்திய- அமெரிக்க உறவு மிகவும் உறுதியானது என்றும், வரிவிதிப்பு விவகாரத்துக்கு இருநாடுகளும் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 27) கொண்டாட்டம் தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, *பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகளை பயன்படுத்த வேண்டும். *சிலைகளை அலங்கரிக்க பிளாஸ்டிக், தெர்மோகோல் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த தடை. *ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பூஜை பொருள்களை பயன்படுத்த அனுமதி இல்லை. *அனுமதியில்லாத இடங்களில் சிலைகளை கரைக்க கூடாது. SHARE IT.
பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, அரசியலமைப்பு புத்தகத்தை சுமந்து செல்லும் ராகுல் அதனை திறந்து படிக்க வேண்டுமெனவும், அதில் இந்தியாவில் பிறக்காதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கவில்லை என்றும் கூறினார். பீகார் மக்களின் வேலைகளைப் பறிக்கும் வங்கதேசத்தினரைக் காப்பாற்ற ராகுல் விரும்புவதாகவும் விமர்சித்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம், சிம்புவின் சம்பளப் பிரச்னை காரணமாக டிராப் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ‘தொடங்கியது.. மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும்.. சிங்கத்தின் ஆட்டம் விரைவில்’ என குறிப்பிட்டு சிம்பு, வெற்றிமாறனை டேக் செய்துள்ளார். இப்படப் பணிகள் துவங்கி விட்டது என்பதை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடியாக இந்தியாவும் ஆக்ஷனில் இறங்கியுள்ளது. போயிங் நிறுவனத்திடமிருந்து P-8I ஜெட் விமானங்கள் வாங்கும் $3.6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஜெட் உற்பத்திக்கான மூலப் பொருள்கள் இந்தியாவிலிருந்து செல்லும் நிலையில், டிரம்ப்பின் 50% வரிவிதிப்பால், அவற்றின் விலையும் 50% உயர்ந்துள்ளது. இதனால் ஜெட் விலையும் உயர்வதால் ஆர்டரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்டுள்ள மாநில கல்விக்கொள்கை என்பது CM ஸ்டாலினின் நாடகம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், இந்தி உள்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், ஆனால் அரசுப் பள்ளிகளில் 2 மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என CM சொல்வதாக சாடியுள்ளார். ஏழை மாணவர்கள் 2 மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை எனவும் குற்றம்சாட்டினார்.
அன்புமணி தரப்பில் கூட்டப்படும் பொதுக்குழுவுக்கு தடைக் கோரி ராமதாஸ் தரப்பில் HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதன் விசாரணையின் போது <<17340719>>ராமதாஸ், அன்புமணியிடம்<<>> தனியாகப் பேச வேண்டியிருப்பதால் இருவரையும் நேரில் வருமாறு நீதிபதி அழைத்தார். இதற்கு அன்புமணி தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ராமதாஸால் வரமுடியாது என அவரது வழக்கறிஞர் தரப்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
மதம்பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம் தான் மாநில கல்வி கொள்கை என உதயநிதி தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கை, இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, நீட் என பல வழிகளில் தமிழக மக்களின் கல்வி கனவை சிதைக்கும் முயற்சிகள் நடப்பதாக சாடினார். புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக நின்றவர் CM ஸ்டாலின் என்றும், ‘வாழும் பெரியாராக’ அவர் திகழ்வதாகவும் கூறினார்.
*‘கூலி’ படத்துக்கான பின்னணி இசையை முடிந்த அனிருத்
*ராகவ லாரன்ஸ் தனது தம்பியுடன் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ படத்தின் டீசர் வெளியானது
*கேரளாவில் கூலி படத்தின் முன்பதிவுக்காக குவிந்த ரசிகர்கள்
*தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு
*‘Kantara Chapter1’ படத்தில் நடிக்கும் ருக்மினி வசந்தின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது.
Sorry, no posts matched your criteria.