India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய 5 பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சார்ஜர் வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய்க்கு நெருக்கமான ஆடிட்டர் ஒருவர் ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் CM பதவியை ராமதாஸ் கேட்க, துணை முதல்வர் பதவிக்கு விஜய் தரப்பு ஓகே சொல்லி இருக்கிறதாம். ஆனால், CM பதவியில் ராமதாஸ் உறுதியாக நிற்க, விஜய்யிடம் தெளிவான பதில் பெற்று வாருங்கள், கூட்டணி பேசி முடிக்கலாம் என அவர் கூறியுள்ளாராம்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்க 5 புதிய அறிவிப்புகளை CM வெளியிட்டார். புவிசார் குறியீடு மானியம் ₹1 லட்சமாக உயர்த்தப்படும். அம்பத்தூரில் உலோகவியல் ஆய்வகங்கள் ₹5 கோடியில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், பழந்தண்டலத்தில் ₹5 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள். காக்கலூர் தொழிற்பேட்டையில் ₹3.90 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க ₹2 லட்சம் என அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெரிய இடைவேளைக்கு பிறகு, சமந்தா மீண்டும் திரைத்துறையில் பிஸியாகி இருக்கிறார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘சுபம்’ என்ற படத்தையும் தயாரித்து இருக்கிறார். இந்த படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா என்பவர் இயக்கி இருக்கிறார்.
நாட்டின் சிறுகுறு தொழில்களில் தமிழ்நாடு 9.4% பங்களிப்பை வழங்கி வருவதாக CM ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். குன்றத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிறுகுறு தொழில்கள் தமிழகத்தில் வளர்ந்திருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டம், சமூக நீதிக்கு எதிரானது என்றும் விமர்சித்தார்.
2028 ஒலிம்பிக்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து அணிகள் இணைந்து ஒருங்கிணைந்த பிரிட்டன் அணியை உருவாக்க உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் நிர்வாகத்தின் CEO ட்ரூடி தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் 2028 ஜூலை 14 முதல் ஜூலை 30 வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் 6 அணிகள் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினைத் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கிறது என விமர்சித்தார். எனவே தான், சாதி பாகுபாடு இல்லாத வகையில் கைவினைக் கலைஞர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கலைஞர் கைவினைத் திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
கோடையை சமாளிக்க சென்னையில் ஏ.சி புறநகர் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க குறைந்தபட்ச கட்டணம் ₹35. பீச்-செங்கல்பட்டு வரை ₹105. தாம்பரம்-பீச் மார்க்கத்தில் 5.45AM-க்கு ( ALL STOPS) புறப்படும். பீச்-செங்கல்பட்டு 7AM-க்கும், 3.45 PM-க்கும் இயக்கப்படும். செங்கல்பட்டு-பீச் 9AM-க்கு, 5.45 PM-க்கு, பீச்-தாம்பரம் 7.35 PM-க்கும்( ALL STOPS) இயக்கப்படும். ஞாயிறு சேவை இல்லை.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள திருமண கூடத்தில் தவெகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் ஐடி மற்றும் சோஷியல் மீடியா பிரிவு சார்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். 2026 தேர்தல் வியூகம் பற்றி ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அண்மையில் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல் பகிர்ந்துள்ள போட்டோ நெட்டிசன்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த போட்டோவில் அவர், ‘Baby bump’ உடன் இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், நடிகை அமிஷாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழில் விஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.