news

News December 30, 2024

சிறப்பு புலனாய்வு குழு இன்று முதல் விசாரணை

image

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளது. இதில், ஞானசேகரனுடன் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க சிறப்பு புலனாய்வு குழுவை ஐகோர்ட் நியமித்துள்ளது. இன்று முதல் விசாரணையை தொடங்கும் குழுவினர், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், ஞானசேகரனிடம் தனித்தனியாக விசாரிக்க உள்ளது.

News December 30, 2024

டிச.30: வரலாற்றில் இன்று

image

▶1879 – ரமண மகரிஷி பிறந்தநாள்.
▶1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
▶1906 – அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
▶1941 – இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து காந்தி விலகினார்.
▶2006 – ஈராக் நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
▶2013 – இயற்கை ஆர்வலர் கோ. நம்மாழ்வார் காலமானார்.

News December 30, 2024

“புத்தாண்டு நள்ளிரவில் கோவில்களை திறக்கக்கூடாது”

image

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார். ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12 மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு நடத்தக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், பொது இடங்களில் மது விருந்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதை அரசு தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News December 30, 2024

தினம் ஒரு பொன்மொழி!

image

✦மனிதாபிமானம் என்பது அழுவதல்ல; அநீதிக்கு எதிராக போராடுவதேயாகும். ✦புரட்சி செய்ய புறப்பட்டவனுக்கு துணை நிற்பதே படைப்பாளியின் கடமை. ✦சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாத எழுத்தும் பேச்சும் குப்பைக்கு சமமானதே. ✦அடிமைக்கும் ஆண்டைக்கும் இடையே சமரசத்தை செய்வது என்பது கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல. ✦பிச்சை இடுபவன் அருவருக்கத்தக்கவன்; பிச்சை எடுப்பவன் பரிதாபத்துக்கு உரியவன்.
-மாக்ஸிம் கார்க்கி

News December 30, 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்

image

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (100) நேற்று இரவு காலமானார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவாக இருந்த அவர், ஜார்ஜியாவில் உள்ள வீட்டில் காலமானதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1977-1981 வரை பொருளாதார நெருக்கடிகளால் சூழப்பட்ட நிலையிலும் சிறப்பாக பணியாற்றினார். நீண்ட காலம் வாழ்ந்த US ஜனாதிபதி என்ற சாதனையை கார்ட்டர் பெற்றுள்ளார்.

News December 30, 2024

ஆதார்- PAN இணைப்பு நாளையே கடைசி

image

வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் PAN கட்டாயமாகும். இதை ஆதார் எண்ணுடன் இணைக்க டிச.31 வரை வருமான வரித்துறை அவகாசம் அளித்திருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் (டிச.31) நிறைவடைய உள்ளது. இந்த தேதிக்குள் உங்கள் PAN எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், உங்கள் PAN ரத்து செய்யப்படலாம். இதனால் வங்கிப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News December 30, 2024

வாக்குச்சீட்டு தேர்தல் முறை வேண்டும்: அகிலேஷ் யாதவ்

image

இந்தியாவில் சிலரது நலனுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடப்பதாக சுட்டிக்காட்டிய அவர், வாக்குப்பதிவு எந்திரங்களை யாரும் நம்பவில்லை எனவும் கூறியுள்ளார். வாக்குச்சீட்டு தேர்தல் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 30, 2024

ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி

image

IPS ஜோடியான <<15015653>>வருண்குமார்<<>>, வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

News December 30, 2024

அண்ணா பல்கலை. குற்றவாளி DMKவைச் சேர்ந்தவர்: சீமான்

image

அண்ணா பல்கலை. குற்றவாளி DMKவைச் சேர்ந்தவர் என்பது அக்கட்சியின் பேனர், அமைச்சர்களின் போட்டோக்களின் மூலம் தெரிய வந்துள்ளதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். மா.சுப்பிரமணியம் கைதான நபரின் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதாகவும், துணை முதல்வரோடு இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளதாகவும் சாடியுள்ளார். அவர் கட்சியில் இருக்கிறாரோ, இல்லையோ இதுபோன்ற தவறுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

News December 30, 2024

தனியார் வங்கிகளில் பணி விலகல் விகிதம் அதிகரிப்பு

image

தனியார் வங்கிகளில் பணியாளர்கள் வேலையை விட்டு செல்வது அதிகமாக உள்ளது என RBI தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வேலையிலிருந்து விலகுவோர் விகிதம் சராசரியாக 25% என்ற அதிகபட்ச அளவில் உள்ளது. இது, வங்கி செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்துவதால், பணியாளர்கள் விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தனியார் வங்கிகளை RBI வலியுறுத்தியுள்ளது.

error: Content is protected !!