India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து 13,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து தற்போது 8,000 கனஅடியாக உள்ளது. இதனால், தி.மலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என PWD தெரிவித்துள்ளது. அண்மையில் தென்பெண்ணை வெள்ளத்தால் கடலூர், விழுப்புரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்ல வேண்டிய 7 விமானங்கள் மற்றும் பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வர வேண்டிய 5 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர். சென்னையில் கனமழை தொடரும் என MET கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சென்னை, கோவை உள்பட பல நகரங்களில், மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ‘டீம் லீஸ் எட்-டெக்’ நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, டெல்லி மற்றும் சென்னையில் அதிகபட்சமாக மருத்துவப் பணியாளர்களை வேலைக்கு சேர்க்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த துறையில் 47% நிறுவனங்கள், டெலி ஹெல்த் மற்றும் நோய் தடுப்பு சேவைகளின் முன்னேற்றம் காரணமாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.
கனமழை காரணமாக தஞ்சை, தி.மலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சி, திருவாரூர், நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையாகும். நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை.
சில தினங்களுக்கு முன்பு, சாய் பல்லவி ராமாயணம் படத்தில் நடித்து முடிக்கும் வரையில், அசைவ உணவுகளை எடுத்து கொள்ளமாட்டார் என பிரபல தமிழ் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. வைரலான இந்த செய்தியில் உண்மை இல்லை என சாய் பல்லவி மறுத்து விட்டார். இனியும் அமைதியாக இருக்க முடியாது. அது ஒரு ‘முன்னணி’ நிறுவனமாக இருந்தாலும் சரி, அடுத்த முறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன் என Warningகும் கொடுத்துள்ளார்.
கோதுமையை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. அதன்படி, மொத்த விற்பனையாளர்களுக்கு 2,000 டன்னிலிருந்து 1000 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, சில்லறை வணிகர்கள் 5 டன் மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கோதுமையை பதுக்கி செயற்கையாக விலையேற்றத்தை ஏற்படுத்தும் செயலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தானும் தனது மனைவியும் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார். இருவரும் அவருக்கு உண்டான திசையில் பயணிப்பதற்காக விவாகரத்து பெறவுள்ளதாகவும், இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சி, திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். நாகூரில் உள்ளூர் விடுமுறை. நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை.
அமெரிக்காவுடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அமைத்து வரும் துறைமுகத்துக்கு கடன் பெற அமெரிக்க அரசின் நிதி அமைப்பிடம் அதானி குழுமம் விண்ணப்பித்து இருந்தது. சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைத்த அமெரிக்கா ₹4,600 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றதாக செபியிடம் அதானி போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை ஆகும். நாகூரில் உள்ளூர் விடுமுறை. நெல்லையில் 1-5ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை.
Sorry, no posts matched your criteria.