India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை, சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில், PM மோடி தலைமையில் நடந்த, அமைச்சரவைக் கூட்டத்தில், 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடப்புக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகியுள்ளது.
நடிகர் ரஜினிக்கு தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவரது X பதிவில், “ஹாப்பி பர்த்டே டூத ஒன், ஒன்லி ஒன், சூப்பர் ஒன் .. சூப்பர் ஸ்டார். மாஸ் மற்றும் ஸ்டைலின் மறு உருவமான என் தலைவா” என பதிவிட்டுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டாலும், ரஜினி மீது அவருக்கு இருக்கும் அன்பு துளியும் குறையவில்லை என்றே சொல்லாம்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என MET, ரெட் அலர்ட் விடுத்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், குமரியில் மிக கனமழையும், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ திரைப்படங்களுக்கு பிறகு, செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வண்ணத்துப்பூச்சி, கண்ணாடி உடன் கூடிய போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. என்ன படமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.
பாதுகாப்பு படை அமைப்புகளான CDS, NDA, NA ஆகியவற்றில் உள்ள 400 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 12ஆம் வகுப்பு. இதற்கு எழுத்துத்தேர்வு மற்றும் Personality Test தேர்வுகள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 31. https://upsc.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப ₹56,100 முதல் ₹2,50,000 வரை சம்பளம் உள்ளது.
அனைவரும் ஒரே கடவுளை வழிபட வேண்டும் என சனாதனம் கூறவில்லை என கவர்னர் RN ரவி கூறியுள்ளார். குமரியில், விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது என்றும் நாம் வேறு மொழி பேசலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்றுதான் என்று கூறினார். சனாதனத்தை டெங்கு கொசு ஒழிப்பதைப் போல ஒழிக்க வேண்டும் என உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை அருகே Youtube பார்த்து பிரசவ சிகிச்சை மேற்கொண்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அலோபதி மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாத அபிராமியின் கணவர் ராஜ்குமார் இந்த கொடூரத்தை அரங்கேறியுள்ளது. அபிராமி GHஇல் சிகிச்சையில் உள்ளார். கடந்த மாதம் சென்னை குன்றத்தூரில் ‘வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்’ என்ற வாட்ஸ்அப் குழு அமைத்து வீட்டில் பிரசவம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தனது துள்ளலான இசையால் லட்சகணக்கான ரசிகர்களை கட்டி வைத்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகள் என பல விருதுகளை குவித்த அவரை லண்டனில் உள்ள Trinity Laban இசைக் கல்லூரி கௌரவத் தலைவராக நியமித்து பெருமை சேர்த்துள்ளது. அப்போது பேசிய ரஹ்மான், ‘மனித வெளிப்பாட்டின் பரந்த தன்மையை ஆராய்வதற்காக இசை, நடனம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம்’ என்றார்.
மழைக்காலத்தில் வெளியூர் பயணம் செல்லும் போது உடைகள் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் தேவை. கனமான ஆடைகளைவிட மெல்லிய ஆடைகளே பொருத்தமானவை. மழையில் நனைந்தாலோ, துவைத்தாலோ விரைவாக உலர்ந்துவிடும். ஜீன்ஸ் ஆடைகளை மழையில் தவிர்த்தல் நலம். அதன் அசவுகரியம், துவைத்து காய வைப்பதில் சிரமம், ஈரப்பதத்தால் ஏற்படும் துர்நாற்றம் உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கும். முடிந்தவரை குறைவான எண்ணிக்கையில் உடைகளை எடுத்துச் செல்லுங்கள்.
இந்திய தேர்வு குழுவில் மாற்றம் தேவை என ஆஸி., முன்னாள் வீரர் கிரெக் சேப்பல் தெரிவித்துள்ளார். அவர், ‘சீனியர் வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றாலும் அணியில் விளையாட வேண்டும் என விரும்புவார்கள். ஆனால் அணிக்காக அவர்களை நீக்கும் நிலை வந்தால், அவர்களை அணியில் இருந்து நீக்கும் கடினமான முடிவுகளை எடுக்க இந்தியாவுக்கு நல்ல, வலுவான தேர்வுக் கொள்கைகள் மற்றும் தேர்வு குழுக்கள் இருக்க வேண்டும்’ என்றார்.
Sorry, no posts matched your criteria.