India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025இல் சந்திரனும், வியாழனும் மிதுன ராசியில் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதனால், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பலனடைய போகின்றனர். இவர்களுக்கு வரப் போகும் புத்தாண்டில் வீடு, நிலம், தங்கம் போன்ற சொத்துகளை வாங்கிக் குவிக்கும் ராஜயோகம் உள்ளது. மேலும், மகிழ்ச்சி, மன வலிமை, அதிர்ஷ்டம், ஆளுமைத் திறன் ஆகியவையும் பல மடங்கு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.88 என்ற வரலாறு காணாத அளவில் சரிந்தது. டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் இறக்குமதி அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
முறையான எச்சரிக்கை விடுத்த பிறகே அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசை TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான X பதிவில், மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததைவிட அதிக மழை என காரணத்தை தேடாமல், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே, கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்க ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கக்கடலில் அந்தமான் அருகே டிச.15 புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடிக்கு அதிகனமழைக்கான Red Alert, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான Orange Alert விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்குக் கேட்டதாக வெளியான தகவலை, மினிஸ்டர் லட்சுமி நாராயணன் மறுத்துள்ளார். பீச் ரோட்டில் இருக்கும் சீகல்ஸ் ஹோட்டலை விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாகத் தகவல் பரவியது. வெளிநாட்டில் நடத்துவதைப் போல் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த, பீச் அருகே வாடகைக்கு இடம் கேட்டதாகவும், இது வழக்கமாகத் தனியார் நிறுவனங்கள் அணுகும் நடைமுறைதான் என்றும் மினிஸ்டர் விளக்கமளித்துள்ளார்.
IND எதிரான மூன்றாவது டெஸ்டில் புதிய மைல் கல்லை மிட்செல் ஸ்டார்க் எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 283 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 692 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினால், AUS அணிக்காக 700 விக்கெட்டுகளை எடுத்த 4ஆவது வீரர் என்ற சாதனையை படைப்பார். வார்னே, மெக்ராத், பிரட்லீ ஆகியோர் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் கிளிக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் கோவாவில் நடைபெற்று வரும் நிலையில், அதில் கலந்து கொள்ள நடிகர் விஜய் அங்கு சென்றுள்ள போட்டா தான் அது. செம ஸ்டைலாக வேட்டி, சட்டை சட்டையில் கலக்குகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட கால நண்பனான ஆன்டனி தட்டிலை இன்று கரம் பிடித்தார். அவருக்கு உங்கள் வாழ்த்துகளை கமெண்ட்ல சொல்லுங்க.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், தற்போது கர்நாடகா, தெலங்கானாவிலும் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில், தற்போது டெல்லியிலும் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், நாளை முதல் ₹1000 பெற விண்ணப்பிக்கலாம் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் AAP ஆட்சிக்கு வந்தால் ₹2,100 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2025ல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை T20வடிவத்தில் நடத்த ஒளிபரப்பாளர்கள் ICCயிடம் கேட்டு கொண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது. நிறைய அணிகள் டி20 போட்டிகளையே விரும்புவதாலும், ஒரு நாள் விட டி20 போட்டிகளை ரசிகர்களிடம் எளிதில் விளம்பரப்படுத்த முடியும் என்ற காரணங்களாலும் இம்முடிவை ICC பரிசிலித்து வருகிறது. இத்தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. T20யில் சாம்பியன்ஸ் டிராபி எப்படி இருக்கும்?
இன்று நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அவரது நீண்ட நாள் காதலன் ஆன்டனியுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கோவாவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் கோலாகலமாக இந்து முறைப்படி நடைபெற்று முடிந்துள்ள இந்த திருமணத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இவர்களுக்கு கிறிஸ்தவ முறைப்படியும் மீண்டும்
மாலை 5 மணிக்கு திருமணம் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.