India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிய பால் பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது ஆவினில் ப்ளூ, கிரீன், ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட பாக்கெட்டை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது. கிரீன் கலர் பாக்கெட்டில் ‘கிரீன் மேஜிக் ப்ளஸ்’ என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த பாக்கெட், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலத்தில் வரும் 18-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், நடப்பு சாம்பியன் டிங் லிரெனை 7.5 – 6.5 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் தமிழகத்தின் 18 வயது குகேஷ். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பின், உலக சாம்பியனான இந்தியர் என்ற பெருமையுடன், மிக இளம்வயதில் உலக சாம்பியன் ஆன ரஷ்யாவின் காரி காஸ்பரோவின் சாதனையையும் குகேஷ் முறியடித்துள்ளார். இதன்மூலம், பல சாதனையாளர்கள் தமிழகத்தில் உருவாக குகேஷ் ஊக்கமளித்துள்ளார்.
குரூப் 2, 2A தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. வணிகவரி துணை அதிகாரி, தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளர் உள்ளிட்ட 2,327 பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதம் நடந்த தேர்வை, 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறை கூறியுள்ளார். தமிழகத்தில் 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை தமிழக அரசால் நியமிக்க முடியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், இந்து மதம் மீது தீராத வன்மம் கொண்ட அரசாக திமுக அரசு உள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் மக்கள், அதற்கு சரியான பதிலடி தருவார்கள் என்றும் சாடியுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் HOUSEFULL 5 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்று நடந்த சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்திய ஜனநாயகத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என மாநில & பிராந்திய கட்சிகள் கருத்துகளை முன்வைக்கின்றன. அவை ▶சட்டப்பேரவையை விட மக்களவைக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். ▶நாட்டின் பன்முகத்தன்மை பின்னுக்கு தள்ளப்படும். ▶பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை இல்லாத அளவில் பல கட்டங்களாக தேர்தலை நடத்தவேண்டி வரும். ▶மக்கள்தொகை & சமூக அடிப்படையில் நிர்வாக குளறுபடிகள் ஏற்படும்.
உலக செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இந்திய வீரர் குகேஷ். சிங்கப்பூரில் நடந்த போட்டியில், 14ஆவது சுற்றில் 58ஆவது காய் நகர்த்தலில், நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரேனை குகேஷ் வீழ்த்தினார். 13 சுற்றுகள் முடிவில் இருவரும் 6.5 புள்ளிகள் எடுத்திருந்த நிலையில், இறுதிச்சுற்றில் அபாரமாக விளையாடி குகேஷ் வென்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷ் ஆவார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையால் இந்தியாவுக்கு பல நன்மைகள் கிடைக்குமென பாஜக & NDA கூட்டணி கருத்துகளை முன்வைக்கின்றனர். அவை ▶பிரசாரங்களால் மக்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும், நேரம் மிச்சமாகும். ▶மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறையும். ▶நிர்வாக சிரமங்கள் குறையும். ▶பிராந்தியவாதம் ஒழிந்து தேசிய உணர்வு அதிகரிக்கும். ▶நலத்திட்டங்கள் இடையூறின்றி தொடரும். ▶வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சாலை விபத்துகளை குறைக்க முடியாதது, வருத்தத்தை தருவதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், சாலை விபத்துகள் தொடர்பாக வெளிநாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்கும்போது, தனது முகத்தை மறைத்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், விதிகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்தார்.
அம்பேத்கரிய இயக்க முன்னோடியும், சமூக செயற்பாட்டாளருமான ஜெய்பீம் சிவராஜ் (75) உடல் நலக்குறைவால் காலமானார். கர்நாடகா வாழ் தமிழரான சிவராஜ், திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் சேவை செய்து வந்தவர். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்ததுடன், அவர்கள் அரசு வேலைக்கு செல்வதற்கும் வழிகாட்டியாக இருந்தார்.
Sorry, no posts matched your criteria.