India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எதிரொலியாக தற்போது வரை 3 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றம், சட்டசபை & உள்ளாட்சித் தேர்தல்களை அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்புக்குள் ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியமில்லை. இத்திட்டத்தை அமல்படுத்த, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட 6 அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வருவது BJP-க்கு மிகப்பெரிய சவாலான விஷயம்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், குகேஷ், நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தி விட்டீர்கள். வெறும் 18 வயதில் உலக செஸ் சாம்பியனாவது நிகரற்ற சாதனை. மன உறுதி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை, உங்கள் கடின உழைப்பு எங்களுக்கு நினைவுப்படுத்துகிறது என பாராட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் வென்ற இந்திய வீரர் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில், “சதுரங்க விளையாட்டின் வரலாற்றில் குகேஷ் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்துள்ளார். மில்லியன் கணக்கான இளம் மனங்களை வென்ற அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், 2 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குகேஷின் வெற்றி பெருமையாக உள்ளதாக அவரின் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னா தெரிவித்துள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதற்காக, குகேஷ் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டதாகவும், தீவிர முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டு கனவு நனவானதால், குகேஷ் ஆனந்த கண்ணீர் விட்டதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக நாளை மறுநாள் ( டிச.14)நடைபெற இருந்த ஊரகத் திறனாய்வுத் <<14859359>>தேர்வு <<>>(TRUST), மாணவர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மையம், தமிழகம் – இலங்கை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், மாநிலத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்நிலையில், தாழ்வு மையம் வேகமாக நகர்வதால், சென்னைக்கு மேலே சுனாமி அலையை போல மழை மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. சென்னையை சுற்றி கருமேகம் படையெடுத்து நிற்பதை சாட்டிலைட் ஃபோட்டோ காட்டுகிறது.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் டிரெய்லரை, நாளை மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிட உள்ளார். இப்படத்தை அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராகவா லாரன்ஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பரில் வெளியாக வேண்டிய இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. அதேபோல், கடந்த நவம்பரில் முதல் சிங்கிள் ‘உன் முகத்தை’ வெளியாகி வரவேற்பை பெற்றது.
கார்த்திகை தீபம் என்றாலே நினைவுக்கு வருவது அண்ணாமலையார் தீபம்தான். விளக்கை மாலை வேளைகளில் மட்டுமே ஏற்ற வேண்டும். அதிலும் திருவண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் மாலை 6.05 மணிக்கு ஏற்றலாம். நாளை அசைவம் சாப்பிடக் கூடாது. விளக்கில் மஞ்சள் குங்குமம் இட்டு ஏற்ற வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கின் அடியில் காசு வைத்து ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.