India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 24 மணி நேரத்தில், குர்ஸ்க் போர்க்களத்தில் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை உக்ரைன் ஆயுதப்படைகள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், “2022 முதல் இதுவரை குர்ஸ்கில், 40,000க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் உக்ரைன் இழந்துள்ளது. நோவோவனோவ்கா கிராமத்தை ரஷ்யா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், உலகிலேயே மிகவும் இனிமையான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் தனியொருவர். எங்களை தினமும் இன்ஸ்பைர் செய்பவர். உங்களது பிறந்தநாள் எங்களை போன்ற கோடிக்கணக்கானோருக்கு கொண்டாட்டம். உங்களுக்கு தேவையான அனைத்தையும் கடவுள் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
விவாகரத்து ஆனபின், மனைவிக்கு ஜீவனாம்ச உதவி பெற உரிமையுண்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், விவாகரத்து சட்டப்படி, நிபந்தனைக்கு உட்பட்டு கணவனுக்கும் ஜீவனாம்ச உரிமை உள்ளது தெரியுமா? உடல் ரீதியாகவோ, நிதி ரீதியாகவோ மனைவியை சார்ந்திருக்கும் நிலையில் உள்ள கணவன், விவாகரத்துக்கு பின் மனைவியிடம் ஜீவனாம்சம் கோர சட்டத்தில் இடமுண்டு என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
ஜீவனாம்சத்தை நிர்ணயிக்க இந்த அம்சங்களை பின்பற்ற SC வழிகாட்டுதல்: 1)இருதரப்பினரின் சமூக, நிதி நிலைமை. 2)மனைவி & குழந்தைகளின் நியாயமான தேவைகள் 3)இருதரப்பினரின் கல்வித்தகுதி, பணிநிலைமை 4)தனிநபரின் வருமானம்(அ) சொத்து 5)திருமண வீட்டில் பெண்ணின் வாழ்க்கைத்தரம் 6)குடும்ப கடமைகளுக்காக வேலையை விட நேர்ந்த நிலை 7)வேலை இல்லாத இணையரின் வழக்குச் செலவு 8)கணவனின் பண வசதி, வருமானம், பராமரிப்பு கடமைகள் & கடன்கள்.
தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திக்கு பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுப்பு தெரிவித்துள்ளார். உடல் எடை கூடியதால் கர்ப்பமாக இருப்பது போல் தோற்றம் இருப்பதாகவும், இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் காட்டமாக கூறியுள்ளார். மேலும், 4 மாதங்களாக திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார்.
நாடாளுமன்றத்தில் இன்று பேசிய கனிமொழி, திமுகவின் முழக்கமான திராவிட மாடல் பற்றி விளக்கம் தந்துள்ளார். அவர் பேசுகையில், வெப்ப அலையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் வெப்ப அலையை மாநில பேரிடராக திமுக அரசு அறிவித்துள்ளது. எனவே, இதில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வரை அரசு வழங்குகிறது. இதைதான் திராவிட மாடல் அரசு என சொல்கிறோம்” எனக் கூறினார்.
குகேஷின் வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாக விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார். போட்டி நிறைவடைய 15 நிமிடங்களுக்கு முன்பு கூட குகேஷ் வெல்வாரா என்ற சந்தேகம் இருந்ததாக குறிப்பிட்ட அவர், முழு முயற்சியுடன் விளையாடியதால், அவரால் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறியுள்ளார். செஸ் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மம்முட்டி நடிக்கும் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை முடித்துவிட்டு, அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இப்படத்தில் சிம்பு நடிக்க இருந்ததாகவும், ஆனால், சில காரணங்களால் சிம்பு நடிக்க மறுத்ததாகவும் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து, நாட்டின் பன்முகத்தன்மையை இந்த மசோதா கேள்விக் குறியாக்கியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மாநிலங்களின் உரிமைகளை பறித்து, கடைசியில் மாநிலங்களை ஒழிப்பதுதான் மத்திய அரசின் திட்டம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக செஸ் சாம்பியனாக சாதித்த தமிழக வீரர் குகேஷுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 18 வயதில் சாம்பியனாகி சாதனை படைத்த குகேஷுக்கு எனது வாழ்த்துகள். இந்தியாவின் உயரிய செஸ் பாரம்பரியத்தை, உங்கள் சாதனை தொடரச் செய்திருக்கிறது. மேலும், சென்னைதான் சர்வதேச செஸ் தலைநகர் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. உங்களால் தமிழ்நாடு பெருமையடைகிறது என ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.