India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் கலாசாரம், அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவே ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, CBSE பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர், கணித மேளா, கணித பிரகாஷ், பூர்வி, கிருதி, சிதார் என பெயரிடப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், NCERT தற்போது விளக்கம் அளித்துள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், NDPS சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஜினியின் வாழ்க்கையில் முக்கிய நாள்களில் இன்றைய (ஏப்.19) நாளும் ஒன்று. இந்த நாளில்தான், 2019ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தனது இலக்கு இல்லை, 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்தான் தனது இலக்கு, அந்தத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அவர் கூறினார். எனினும் பிறகு கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி, அந்த முடிவை ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார்.
IPL 2025-ல் அகமதாபாத்தில் நடைபெறும் மேட்ச்சில், GT அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3-ல் DC-யும், 2-ல் GT-யும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவாங்க என நினைக்குறீங்க?
மத்திய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ₹49,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மே 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகிய <<16147444>>துரை வைகோ<<>> எம்பி, 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20ம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பேன், பிறகு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 7 ஆண்டாக தான் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும், எந்த சூழலிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.
பிராமணர்கள் குறித்த தனது கருத்திற்கு அனுராக் காஷ்யப் மன்னிப்பு கேட்டுள்ளார். <<16140214>>பிராமணர்கள் <<>>மீது சிறுநீர் கழிப்பேன் என்ற அந்த ஒரு வரிக்காக மட்டுமே மன்னிப்பு கேட்பதாகவும், மொத்த பதிவுக்காக அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தனது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், ஆனால் கூறியதை திரும்ப பெற மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். ‘புலே’ படத்தை எதிர்க்கும் பிராமணர்களை அனுராக் சாடியிருந்தார்.
போனில் சும்மா சும்மா சார்ஜ் குறைஞ்சா, இந்த சிம்பிள் டிப்ஸை யூஸ் பண்ணுங்க ★Always-On டிஸ்பிளேவை அணைத்து வைப்பது, சார்ஜ் குறைவதை தடுக்கும் ★Settings -> Battery Usage-ல், போனின் பேட்டரியை அதிகமாக உறிஞ்சும் App-களை கண்டறிந்து, அவற்றில் தேவையற்றதை Uninstall செய்யுங்கள் ★Location settings-ஐ சோஷியல் மீடியா, கேம்ஸ் போன்ற தேவையற்ற App-களுக்கு ஆப் செய்து வையுங்கள்.
பங்களாதேஷ் பூஜா உத்ஜபான் பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் பாபேஷ் சந்திரா ராய் (58) அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த அவரை சிலர் கடத்திச் சென்று கொலை செய்ததாக ராயின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த கொலை நிகழ்ந்துள்ளது.
Just Dial நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு 61% அதிகரித்து, தற்போது ₹584.2 கோடியாக உயர்ந்துள்ளது. 2025 நிதியாண்டின் காலாண்டில், அந்நிறுவனம் ₹157.6 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும், மொத்த வருவாய் ₹1,142 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024-ஐ காட்டிலும் 9.5% அதிகமாகும். அதேபோல், 4-வது காலாண்டில் இந்த தளத்தை பயன்படுத்திய பயனர்களின் எண்ணிக்கை 191.3 மில்லியனாக அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.