India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் வங்கி ஊழியர்களின் பணி விலகல், 25% அதிகரித்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வங்கி சேவைகள் முடங்கி வருவதாக எச்சரித்துள்ள RBI, பணி விலகலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகள் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நிதிசார்ந்த முறைகேடுகளை உன்னிப்பாக கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள 466 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.30) நிறைவடைய உள்ளது. Supervisor, Turner உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி : 10th, ITI, UG Degree. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹19,900-₹92,300. தேர்வு முறை: உடற்தகுதி, எழுத்துத் தேர்வு. கூடுதல் தகவலுக்கு https://marvels.bro.gov.in/ சென்று பார்க்கவும்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் டாப்பாக உள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கிவைத்த அவர், மதிப்பெண்கள் பெறுவதிலும், அதிகமாக உயர்கல்வியில் சேர்வதிலும், உயர்கல்வி முடித்து வேலைக்கு போவதிலும் தமிழக பெண் டாப் என புகழாரம் சூட்டினார். மேலும், ஒரு தந்தையாக இருந்து நான் செய்த கடமைதான் புதுமைப் பெண் திட்டம் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடங்கும் 2025 இருந்து பிறப்பவர்கள் ஜெனரேஷன் பீட்டா என அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் Gen Z, Gen A தலைமுறைகளின் அடுத்த தலைமுறை. அப்படி என்றால், 90ஸ் கிட்ஸ் தாத்தா – பாட்டி தலைமுறையாக மாறுகிறார்கள். 90ஸ் கிட்ஸ் எனப்படுபவர்கள் 1981 – 1996க்குள் பிறந்தவர்கள். 2k கிட்ஸ் (அ) Gen Z 1996 – 2010க்குள், Gen Alpha 2010-2024க்குள் பிறந்தவர்கள். ஒவ்வொறு 14 ஆண்டுகளுக்கும் ஒரு Generation குறிக்கப்படுகிறது.
இன்று காலமான Ex. அமெரிக்கா அதிபர் ஜிம்மி கார்ட்டரின் பெயரில் ஹரியானாவில் ஒரு கிராமம் இருக்கிறது. 1978ல் அதிபராக இருந்த ஜிம்மி டெல்லிக்கு வந்திருந்த போது, மனைவியுடன் அங்கிருந்து 1 மணி தூரத்தில் இருக்கும் தௌலத்பூர் நசிராபாத் கிராமத்திற்கு சென்றார். இதனை கெளரவிக்கும் வகையில் கிராமத்தினர் ஊரின் பெயரை ‘கார்டர்பூரி’ என மாற்றினார். மேலும், அவர் ஊருக்கு வந்த ஜனவரி 3 அங்கு இன்றும் உள்ளூர் விடுமுறை தான்.
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன், அண்ணா பல்கலை., மாணவிக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்துவாரா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “அண்ணா பல்கலை.,யில் நடந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை திமுக அரசு காப்பாற்றக் கூடாது. முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். FIR வெளியானது அவமானகரமான விஷயம்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காலையில் கடிதம் ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, ஆளுநரை மதியம் 1 மணிக்கு விஜய் ராஜ் பவனில் சந்திக்கவுள்ளார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரிடம் அவர் மனு அளிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
சீனியர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை ரிட்டையர் ஆக சொல்லி X தளத்தில் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடப்பு BGT தொடரில் இருவரது மோசமான விளையாட்டே இந்த ட்ரெண்டுக்கு காரணம். 2024ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் 619 ரன்களும், கோலி 417 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். இவர்களது இடத்தை இளைஞர்களுக்கு கொடுக்கலாம் என்று நெட்டிசன்கள் ஐடியா கொடுத்து வருகின்றனர்.
புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை, CM ஸ்டாலின் இன்று தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார். அரசுப் பள்ளிகளில் +2 வரை படிக்கும் மாணவிகள் உயர்கல்வி பயில, TN அரசு மாதம் ₹1,000 வழங்குகிறது. இந்த திட்டம் தற்போது அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு கல்வியாண்டு முதல் 75,028 மாணவிகள் கூடுதலாக பயன்பெறுவார்கள்.
4வது டெஸ்டில் நிலைத்து நின்று ஆடிய வந்த பண்ட் 30 (104) ரன்களை எடுத்து ஹெட் பந்துவீச்சில் மார்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். இந்திய அணி 121/4 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 33 ஓவர்களில் 219 ரன்கள் தேவைப்படுகிறது. ஜெய்ஸ்வால் 70 (176) ரன்களுடன் களத்தில் நிற்கிறார்.
Sorry, no posts matched your criteria.