India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீனா, பாகிஸ்தான் நாடுகள் தங்களது ராணுவத்தை வலுப்படுத்தி வருவதால், இந்தியாவும் ராணுவத்தை பலப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதற்கு ஏதுவாக, ரூ.20,000 கோடி செலவில் ராணுவத்திற்கு 100 கே.9 வஜ்ரா ஹெளவிட்சர் பீரங்கிகள், விமானப்படைக்கு 12 சுகோய் போர் விமானங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் கட்டமைக்கவுள்ளது. இந்த 2 திட்டங்களுக்கும் பாதுகாப்பு தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்போது தமிழகம் முழுவதும் இந்துக்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது வழக்கமாகும். இந்த விளக்குகளை எப்படி ஏற்ற வேண்டும் என பார்க்கலாம். பொதுவாக, ஒவ்வொரு நிலைப்படியிலும் இரண்டிரண்டு விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டின் முன்வாசலில் குத்துவிளக்கு கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். இதுபோல விளக்கு ஏற்றினால், இறை அருள் வீடு தேடி வரும் என்பது ஐதீகம்.
சிவன் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என ஆன்மிகம் கூறுகிறது. அத்தகைய புகழ்பெற்ற திருவண்ணாமலையில் மலையே லிங்கமாக காட்சியளிக்கிறது. இதன் உச்சியில் இன்று மாலை மகாதீபம் கொப்பரையில் ஏற்றப்படும். இதை தரிசனம் செய்தால், நமது வாழ்வில் பல செல்வங்கள் நிலைக்கவும், வம்சம் தழைக்கவும் செய்யும் என ஆன்மிகம் சொல்கிறது. இதை காண WAY2NEWS-உடன் இணைந்திருங்கள்.
13 மாவட்டங்களில் காலை 4 மணிவரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை கொட்டும் என கூறியுள்ளது. விழுப்புரம், தி.மலை, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனக் கூறியுள்ளது.
1955: முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பிறந்தார்
1960: தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் பிறந்தார்
1961: இந்திய அணி ஜாம்பவான் படோடி டெஸ்டில் அறிமுகமான நாள்
1986: இந்தி நடிகை ஸ்மிதா பாட்டீல் மறைந்தார்
1990: நடிகை ரெஜினா பிறந்தார்
2001: டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்றம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நாள்.
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பெயர் பதிவான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்துக்கு மாநில அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தத் தொகை போதாது என பெண்கள் கருதுவதாகவும், ஆதலால் ரூ.2,100 அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸி.க்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் ஷர்மா ஓபனிங் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்றார் போல், இன்று புதிய பந்தில் அவர் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்துள்ளது. 2ஆவது டெஸ்ட்டில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர், 2 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 9 ரன்களையே அடித்திருந்தார். அதன் காரணமாக, 3ஆவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
QR CODE லிங்க் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வழக்கம் கொண்டோருக்கு ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. பணம் அனுப்ப மட்டுமே QR CODE ஸ்கேன் செய்ய வேண்டும். பணத்தை பெற ஸ்கேன் செய்யத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அறிமுகம் இல்லாத எண் அல்லது நபரிடம் இருந்து QR CODE லிங்க் வந்தால் அதை ஸ்கேன் செய்யக்கூடாது. பணத்தை பெற ஓடிபி, லிங்க் அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
*எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்
*வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது
*நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது
*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.
இன்று (டிச.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.