India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை காரணமாக தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், <<14863841>>விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.<<>>
நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என மினிஸ்டர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2ஆம் காலாண்டில் GDP வளர்ச்சி 5.40%ஆக சரிந்த நிலையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அவர், பொதுத்தேர்தல் காலக்கட்டத்தில் கொள்கை முடிவுகளை மேற்கொள்வது, அதனை செயல்படுத்துவது போன்றவை பாதிப்புக்குள்ளாவது இயல்புதான் என்றார்.
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்று வாஷ் அவுட் செய்துள்ளது மே.இ.தீவுகள் அணி. மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறும் போட்டிகளில், டெஸ்ட் தொடரை 1 – 1 என்று சமன் செய்தது. பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மொத்தமாக வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் 321 ரன்களை சேஸ் செய்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மே.இ.தீவுகள் அணி.
கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் <<14863813>>மொத்தப் பட்டியலை<<>> இங்கே பார்க்கலாம்.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன் கடந்த ஜூலை மாதம் கட்டண உயர்வை அமல்படுத்தின. இதையடுத்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஜியோ மட்டும் 1 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்டெல் 52 லட்சம், வோடாபோன் 48 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது. நீங்கள் என்ன சிம் வைத்துள்ளீர்கள்?
கனமழை எதிரொலியால் தஞ்சாவூர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7%ஆக இருக்கும் என ஆசிய வளர்ச்சி வங்கி முன்பு கணித்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த வளர்ச்சி விகித கணிப்பை 6.5%ஆக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. இதேபோல், 2026 நிதியாண்டுக்கான கணிப்பையும் 7.2%இல் இருந்து 7%ஆக ஆசிய வளர்ச்சி வங்கி குறைத்துள்ளது. தனியார் முதலீடு குறைந்தது உள்ளிட்டவையே காரணமாகக் கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாண்டேவாடா, நாராயண்பூர் எல்லையில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர். கடந்த அக்டோபர் மாதத்தில் இங்கு 38 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
4 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (டிச.13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக மாணவர்கள் நலன்கருதி நேற்று பல மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம், தூத்துக்குடி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.