India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா- ஆஸி. அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் 3வது போட்டிக்கான ஆஸி. அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ஹேசில்வுட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி: கவாஜா, மெக்ஸ்வீனி, லாபுசாக்னே, ஸ்மித், ஹெட், மார்ஷ், கேரி, கம்மின்ஸ் (C), ஸ்டார்க், லியோன், ஹேசல்வுட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். இதற்கு பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால், அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,000ஆக விற்பனையாகிறது. இதேபோல், சாமந்தி, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
‘கூலி’ படத்தில் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில், ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சந்தீப் கிஷன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். லோகேஷின் முதல் படமான ‘மாநகரம்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில், நட்பு ரீதியில் ‘கூலி’ படத்தில் அவர் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 6,500 கன அடியாக இருப்பதால் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், தென்காசி, தேனி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை.
கனமழை காரணமாக நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். <<14863993>>விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மொத்த மாவட்டங்களின் பட்டியலை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.<<>>
உலக செஸ் சாம்பியன் குகேஷ் கோப்பையுடன் 1.35 மில்லியன் டாலர் (ரூ. 11.45 கோடி) பரிசுத் தொகையை வென்றார். மேலும், இரண்டாம் இடத்தைப் பிடித்த டிங் லிரன் $1.15 மில்லியன் (ரூ. 9.75 கோடி) பெற்றார். மொத்த சாம்பியன்ஷிப் பரிசுத் தொகை ரூ.21.75 கோடியும், ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறும் வீரருக்கு ரூ.1.69 கோடியும் வழங்கப்படும். குகேஷ் 3, லிரன் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றனர். மற்ற ஆட்டங்கள் சமனில் முடிந்தது.
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம்,திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தர்மபுரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, தீப கொப்பரை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று அதிகாலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபக் கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு, கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியே மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.