India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
DMK எம்.பிக்கள் இன்றும், நாளையும் கட்டாயம் பார்லிமெண்ட் வர வேண்டும் என அக்கட்சியை சேர்ந்த இரு அவைகளின் கொறடாக்கள் ஆணையிட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, டிச.13, 14 என 2 நாள்கள் அரசியலமைப்பு சட்டத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் PM மோடி பதிலளிக்க உள்ளார்.
தமிழகத்தில் 3 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகையில் நேற்று வீட்டின் சுவர் இடிந்து 9ஆம் வகுப்பு மாணவன் கவியழகன் உயிரிழந்தார். இன்று காலை பரமகுடியில் சுவர் இடிந்து சிறுமி கீர்த்திகா மரணம் அடைந்தார். மேலும், அரியலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வேங்கையன் என்ற 75 வயது முதியவர் உயிரிழந்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் கனமழை பெய்து வருவதால் சுவாமிமலை முருகன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்தானது. அலங்கரிக்கப்பட்ட தேர் தயாராக இருந்த நிலையில், ரத்தானதால் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
ஓய்வூதியம் ரூ.30,000த்தில் தான் காலத்தை கடத்தி வருவதாக வினோத் காம்ப்ளி கூறியுள்ளார். பேட்டி ஒன்றில், “ சிறுநீரக கோளாறால் அவதியடைந்து வரும் என்னை, என் குடும்பம் தான் பார்த்துக் கொள்கிறது. சச்சினும் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு அறுவை சிகிச்சைகளில் உதவியிருக்கிறார் என்ற அவர், கபில்தேவ் கூறியபடி மறுவாழ்வு மையத்திற்கு செல்ல தயாராக உள்ளேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டிருக்கிறார் CM ஸ்டாலின். மேலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோருக்கு தலா ₹1 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு தலா ₹50 ஆயிரமும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நேற்று அவரது நீண்ட நாள் காதலர் ஆன்டனியை கோவாவில் திருமணம் செய்து கொண்டனர். இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, ஜெகதீஷ் பழனிசாமி போன்றோர் கலந்து கொண்டார். விருந்தினர்களுக்கு கேரள முறைப்படி விருந்து பரிமாறப்பட்டுள்ளது. அதில், லெமன் சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புளிசாதம், கூட்டு – பொரியல், கத்திரிக்காய், நேந்திரம் சிப்ஸ், சுவீட், பாயசம், ஒரு வாழைப்பழம் பரிமாறப்பட்டுள்ளது.
நாளை வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. 10 நாள்களுக்கு முன் ஃபெஞ்சல் புயல் டெல்டாவையும் வட மாவட்டங்களையும் புரட்டிப் போட்டு சென்றது. நேற்று பெய்த கனமழையால் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கின்றன. இந்நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்ற செய்தி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று காலை வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. இதன் தாக்கத்தால் நேற்று தமிழகத்தின் தென் பகுதிகள் மிக கனமழையை எதிர்கொண்டன. தற்போது மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கும்.
பிரதமர் மோடிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, தனக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பெண் குழந்தைகள், பெண்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுகுறித்து தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.