India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊடகங்கள் மீதான தனது தாக்குதலுக்கு மோகன் பாபு எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது பற்றிய எக்ஸ் தளப்பதிவில், எனது குடும்பத்தின் சம்பவம் இவ்வளவு பெரிய விஷயமாக மாறி, பத்திரிகையாளர்களை கஷ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன். சம்பவத்திற்குப் பிறகு 48 மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருந்ததால், உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. சம்பவத்தில் ஊடகவியலாளர் காயமடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
பொது வெளியில் ஏதாவது ஒரு கருத்தை கூறிவிட்டு, பிறகு அதனை மாற்றி பேசுவது பிரபலங்களின் வழக்கமாகிவிட்டது. சில நாட்கள் முன்பு, படத்தின் பிரமோஷனில் அல்லு அர்ஜுன் பற்றிய சித்தார்த்தின் “JCB கமெண்ட்ஸ்” வைரலானது. இக்கருத்துகள் அவரின் “மிஸ் யூ” படத்திற்கு சிக்கலை உண்டாகி விட்டது. ஹைதராபாத்தில் இதுவரை அப்படத்திற்கு வெறும் 50 டிக்கெட்டுகள் மட்டுமே புக் ஆகியுள்ளதாம். ஒரு சில இடங்களில் அதுவும் இல்லையாம்.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை, ‘ஊத்து’ பகுதியில் 54 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவுகளில் இதுவும் ஒன்று. மேலும், அம்பாசமுத்திரம், கோவில்பட்டி – 37 செ.மீ., மாஞ்சோலை – 32 செ.மீ., கடலூர் மாவட்டம் லால்பேட், தென்காசி மாவட்டம் ஆயிக்குடி, நெல்லை மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் 31 செ.மீ. பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 26 செ.மீ. மழை கொட்டியிருக்கிறது.
RBI-க்கு 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக RBI-க்கு வந்த இமெயிலில் வங்கிகளை வெடிக்கச் செய்யப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மொழியில் அனுப்பப்பட்ட அந்த இமெயில் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 2ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓவர் ஹைப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றும் படங்கள் ஆண்டுதோறும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில், இந்த ஆண்டும் பல படங்கள் ரசிகர்களின் பொறுமையைச் சோதித்துள்ளன. ‘லால் சலாம்’, ‘ரத்னம்’, ‘ரோமியோ’, ‘இந்தியன் 2’, ‘ஸ்டார்’, ‘ப்ளடி பெக்கர்’, ‘பிரதர்’, ‘கங்குவா’ என பட்டியல் நீள்கிறது. புரொமோஷன் அவசியம்தான் என்றாலும், ஓவர் புரொமோஷன் சில நேரங்களில் வினையாகி விடுகிறது.
தென் மாவட்டங்களில் கனமழை நீடித்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாகப் பேசிய அவர், தற்போதைய சூழல் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அடிப்படை உதவிகளை செய்யவும் அறிவுறுத்தினார்.
* நோய் கிருமிகள் ஈரப்பதத்தால் அதிகளவில் பரவும் என்பதால், இருப்பிடத்தை சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும் * வெளியில் சென்று வந்த பின் கை, கால்களை கழுவவும் * காய்ச்சிய நீரை பருகவும் * உணவில் சுக்கு, மஞ்சள் தூள், சீரகம், மிளகு தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம் * வெளியில் வாங்கி உண்பதை தவிர்ப்பது நல்லது * நோய் தொற்றை பரப்பும் கொசுவை விரட்ட வேப்பிலை, துளசி, நொச்சி போன்ற இலைகளை புகை மூட்டம் போடலாம்.
இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு, இந்திய செஸ் லெஜெண்ட் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், “குகேஷின் சிறு வயதின் போது அவருக்கு கோப்பை கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து ‘ராஜாவான சிறுவன்’ என பதிவிட்டுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்திடம் இருந்து பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வந்து அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு ₹55 குறைந்து ₹7,230க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹3 குறைந்து, ₹101க்கும், கிலோ வெள்ளி ₹101,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில தினங்களாக ஏற்றத்திலிருந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவைக் கண்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 3 படங்கள் திரைக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல சித்தார்த் நடிப்பில் ‘Miss You’, பரத் நடிப்பில் ‘Once Upon a time in Madras’ என்ற படமும் திரைக்கு வந்துள்ளது. இதில் நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படம் எது?
Sorry, no posts matched your criteria.