news

News December 13, 2024

அல்லு அர்ஜுன் மீது என்ன கேஸ்?

image

புஷ்பா 2 பட ரிலீசின் போது ஹைதராபாத் சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன், தன் செக்யூரிட்டி குழுவினருடன் சென்றார். அவரோடு சேர்ந்து ரசிகர்களும் உள்ளே நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் ஒரு பெண் பலியானார். இதையடுத்து BNS பிரிவு 105 (மரணத்துக்கு காரணமாவது), பிரிவு 118(1) r/w 3(5) (தெரிந்தே கொடுங்காயம் ஏற்பட காரணமாவது) போன்ற பிரிவுகளில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

News December 13, 2024

குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு: CM ஸ்டாலின்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ள குகேஷுக்கு CM ஸ்டாலின் ரூ.5 கோடி பரிசு அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், டிங் லிரேனை வீழ்த்திய குகேஷுக்கு பதக்கத்துடன் ரூ.11.45 கோடி வழங்கப்பட்டது. இந்நிலையில், Dy CM உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News December 13, 2024

ஈ சாலா கப் RCBக்கு தான்: ரெய்னா

image

‘ஈ சாலா கப் நம்தே’ என ஒவ்வொரு வருடமும் சொல்லி வரும் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுரேஷ் ரெய்னாவிடம், விராட் கோலி ஏன் தற்போது வரை கோப்பையை வெல்லவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் “2025 ஐபிஎல் கோப்பையை கோலி வெல்லுவார்” என பதில் அளித்தார். அவரது இந்த வார்த்தை துவண்டு போய் இருக்கும் ஆர்சிபி-க்கு சற்று ஆறுதலை அளிக்கும் என்றே சொல்ல வேண்டும்.

News December 13, 2024

செந்தில்பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்கிறாரா?:SC

image

செந்தில் பாலாஜி(VSB) இன்னும் அமைச்சராக தொடர்கிறாரா என SC காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. பண மோசடி வழக்கில் சிறை சென்ற VSB, 15 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வந்து மீண்டும் அமைச்சரானார். இதனை எதிர்த்து வித்யா குமார் தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், வரும் 18ம் தேதிக்குள் VSB எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜாமின் கிடைத்த மறுநாளே ஏன் அமைச்சரானார் என கடந்த 2ஆம் தேதியும் SC கேட்டிருந்தது

News December 13, 2024

BIG BREAKING: அல்லு அர்ஜுன் கைது

image

புஷ்பா – 2 படம் பார்க்க வந்த பெண் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இப்படம் வெளியாவதற்கு முதல் நாளே ப்ரீமியர் ஷோ ஒளிபரப்பப்பட்டது. அதனைப் பார்க்க மகனுடன் வந்த ரேவதி என்ற பெண், நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.

News December 13, 2024

குகேஷிற்கு கூகுள் கொடுத்த கவுரவம்

image

உலகில் நிகழும் நிகழ்வுகளின் அடிப்படையில், கூகுள் தனது டூடுலை அவ்வப்போது மாற்றிக்கொண்டே வரும். அப்படி தான் தற்போது கூகுள் செஸ் டூடுலை வைத்துள்ளது. இன்று முக்கிய செய்தியாக இருக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை கவுரவிக்கும் வகையில் தனது டூடுலில் செஸ் விளையாட்டை மையப்படுத்தியுள்ளது. மேலும், குகேஷை பாராட்டும் வகையில் இந்த டூடுல் இடம் பெற்றிருப்பது, நமக்கு கூடுதல் சிறப்பு.

News December 13, 2024

₹199, ₹499, ₹999 க்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘பொங்கல் தொகுப்பு’ வழங்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ₹199க்கு இனிப்பு பொங்கல் தொகுப்பு, ₹499க்கு சிறப்பு பொங்கல் தொகுப்பு, ₹999க்கு மாபெரும் பொங்கல் தொகுப்பு என்று விற்பனை செய்யப்படவுள்ளது.

News December 13, 2024

பார்லி.,யில் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம்

image

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிங்கப்பூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18ஆவது உலக செஸ் சாம்பியனாக குகேஷ் நேற்று மகுடம் சூடினார். இதைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

News December 13, 2024

கார்த்திகை தீபம்: இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க

image

கார்த்திகை தீபத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மாலை 6.05 மணி முதல் 6.30க்குள் தீபம் ஏற்றிவிடுவது மிகவும் நல்லது. வீடுகளில் 27 விளக்குகள் ஏற்றுதல், 27 நட்சத்திரங்களை குறிக்கும். இதனால், பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 27 முடியாதவர்கள் 9 விளக்குகள் ஏற்றலாம். குறிப்பாக, தெற்கு திசை நோக்கி விளக்குகளை ஏற்றக்கூடாது. உங்கள் உறவினர்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News December 13, 2024

3வது டெஸ்ட்: ரோஹித்தின் முடிவு சரிதானா

image

தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் ரோஹித் ஷர்மா, மீண்டும் ஓப்பனராக களமிறங்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மிடில் ஆர்டருக்கு கே.எல்.ராகுல் தள்ளப்படுவார். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு சீனியர் வீரர்களால் இடம் பறிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் ராகுலுக்கு மீண்டும் இடம் மறுக்கப்படுகிறதா? என கேள்விகள் எழுகின்றன. ரோஹித்தின் முடிவு சரிதானா?

error: Content is protected !!