India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் சீயான் விக்ரமின் 63வது படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. மண்டேலா, மாவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மடோன் அஸ்வினுடன் அவர் இணைய உள்ளார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. போஸ்டரில் செம ஸ்டைலில் இருக்கிறார் விக்ரம். மேலும் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ₹1 கோடியை வட்டியுடன் ₹1.04 கோடியாக திரும்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘கொரோனா குமார்’ படம் தொடர்பாக சிம்பு மற்றும் பட நிறுவனமான வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்தது. வழக்கை திரும்ப பெற்றதால் டெபாசிட் செய்த தொகையை திரும்பி தருமாறு சிம்பு தரப்பில் விடுத்த கோரிக்கையை அடுத்து ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ திரைப்படங்களுக்கு பிறகு, செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுவார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வண்ணத்துப்பூச்சி, கண்ணாடி உடன் கூடிய போஸ்டர் நேற்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.
அரசியலமைப்பு மக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்தார். மக்களவையில் தனது கன்னிப் பேச்சை தொடங்கிய அவர், உ.பி.யின் சம்பால் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டை குறிப்பிட்டு பேசினார். போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தையல் தொழிலாளியின் குழந்தைகள் தன்னை சந்தித்ததாகவும், அதில் 17 வயதான சிறுவன் தந்தையின் கனவுபடி டாக்டர் ஆவேன் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை குறைந்திருக்கும் என்றும் 16ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை தொடங்கும் என்றும் MET தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 17ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்புலட்சுமியின் பேரன் மேல்முறையீடு செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
புஷ்பா 2 ரிலீஸின் போது, சம்பவம் நடந்த இரவு 9:30 மணிக்கு, திடீரென தன் செக்யூட்டியுடன் சந்தியா தியேட்டருக்கு படம்பார்க்க வந்த அல்லு அர்ஜுன், தன் வருகை குறித்து முன்பே தெரிவிக்கவில்லை என்பது குற்றச்சாட்டு. தியேட்டரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை. அல்லு அர்ஜுனின் செக்யூரிட்டிகள் மக்களை பிடித்து தள்ளியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?
விளையாட்டு, போர் எதுவானாலும், ஒருவர் செய்யும் தவறு, எதிராளியின் வெற்றியாக மாறிடும். அப்படியே, டிங் லிரெனின் ஒரு தவறான மூவ், குகேஷின் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாறியது. candidates சாம்பியன் வென்று தான் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதிபெற்றார் குகேஷ். ஆகவே, டிங் லிரென் <<14866745>>வேண்டுமென்றே தோற்றதாக<<>> சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. ஆனால், குகேஷின் இந்த வெற்றி கார்ல்சனுக்கு எதிராக இருந்தால் இன்னும் இனித்திருக்கும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க கூடாது என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமர்சித்த கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக் கூடாது என எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி அவருக்கு விருது வழங்க தடை விதித்தார். இந்நிலையில், அந்த தடையை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. இதற்காக, ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.