India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
AUSக்கு டெஸ்ட் தொடரில் INDவின் நட்சத்திரங்கள் யாருமே சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் ரோகித் பயங்கரமாக சொதப்பினார். அவர் 3 டெஸ்ட்டில் 31 ரன் மட்டுமே எடுத்துள்ளார். பண்ட், ராகுல், கோலியும் சோபிக்கவில்லை. IND தோல்விக்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் தங்களை மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் கையில் அணி செல்ல வேண்டும்.
திருச்சி எஸ்பியாக இருந்து டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற வருண்குமாரையும், அவரது மனைவியையும் நாதகவினர் சிலர் வலைதளங்களில் மோசமாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இன்று நடந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜரான வருண்குமார், நாதகவினருக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார்.
அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் தொடர்பாக விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களிடம் விநியோகித்ததாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர். அனுமதியின்றி நோட்டீஸ் விநியோகித்ததாக அவரும், 300-க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் அனைவரையும் போலீசார் தற்போது விடுவித்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான FIR கசிந்தது எப்படி என்று தேசிய தகவல் மையம் (NIC) விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய தண்டனை சட்டமாக இருந்த IPC, தற்போது BNS-ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் எஃப்ஐஆரை, BNS ஆக மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது கசிந்திருக்கும் என NIC விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக, பாலியல் வழக்கின் எப்ஐஆர்கள் முடக்கப்படுவது வழக்கம்.
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை இன்று குறைந்திருந்தது. தக்காளி கிலோ ரூ.12ஆகவும், நவீன் தக்காளி ரூ.19ஆகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. செள செள, முள்ளங்கி கிலோ ரூ.10ஆக குறைந்திருந்தது. புடலங்காய் ரூ.20ஆகவும், வாழைக்காய் தலா 1 ரூ.3ஆகவும் சரிந்திருந்தது. சுரைக்காய் கிலோ ரூ.15ஆகவும், கேரட் கிலோ ரூ.25ஆகவும் வீழ்ச்சி கண்டிருந்தது. உங்கள் ஊரில் காய்கறி விலை என்ன? கீழே பதிவிடுங்க.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். வள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ₹37 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்ணாடி பாலத்தின் வழியாக முதல்வர் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இரவு 7 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டில் எதிரணி கேப்டனின் பந்துவீச்சில் அதிக முறை ஆட்டம் இழந்த கேப்டன்கள் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் இடம் பிடித்துள்ளார். நடப்பு BGT தொடரில் இதுவரை 4 முறையும், அதற்கு முன்பு 2 முறையும் என இதுவரை 6 முறை ரோஹித் சர்மாவை, ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆட்டமிழக்க செய்துள்ளார். முன்னதாக ENG கேப்டன் டெட் டெக்ஸ்டர், AUS கேப்டன் ரிச்சி பெனாடின் பந்துவீச்சில் 5 முறை ஆட்டம் இழந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து ரயில்களுக்கும் பூஜ்யத்தில் தொடங்கும் எண்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், அந்த ரயில்களுக்கு தற்போது வழக்கமான எண்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயால் இயக்கப்படும் 296 ரயில்களின் எண்கள் மாற்றப்பட்டுள்ளன. அவை 2025 ஜன. 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 6 கோட்ட ரயில்களின் எண்களும் மாறுகின்றன. SHARE IT.
நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் பங்கேற்று விஜய் சேதுபதி பேசினார். அப்போது, செருப்பு அணிவது, தீபாவளி-பொங்கல் போனஸ், 8 மணிநேர வேலை இவையெல்லாம் நல்லக்கண்ணு வாங்கிக் கொடுத்தது என்றும், அவரது வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், VJS கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.