India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேவர் குருபூஜை நாளான இன்று அரசியல் ரீதியாக அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பசும்பொன்னில் EPS-க்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தனர். இச்சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே சீமானை தோளில் கைப்போட்டு வைகோ அழைத்து வந்தார். மதிமுகவினரும், நாதகவினரும் மோதி வந்தனர். தற்போது இருவரும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

சீனாவும் USA-வும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் 2 நாடுகளுக்கிடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்புதான். இருந்தாலும் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க டிரம்ப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். மேலும், உலக அமைதி பற்றி டிரம்ப் அக்கறையுடன் உள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையை ஒட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில், CM ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற EPS-ன் கோரிக்கையை தானும் வழிமொழிவதாக குறிப்பிட்டார். மேலும், முத்துராமலிங்க தேவர் பெயரில் ₹3 கோடி செலவில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்றும் CM ஸ்டாலின் அறிவித்தார்.

நம்மில் பலரும் சாப்பிட்ட உடன் பல வேலைகளை உடனடியாக செய்வோம். சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்று நினைத்து நாம் செய்யும் சில செயல்கள், உண்மையில் நமது செரிமான மண்டலத்தைப் பெரிதும் பாதித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கக்கூடியவை என்பது பலருக்கு தெரிவதில்லை. அப்படி சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத விஷயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள மேலே SWIPE பண்ணி பாருங்க…

அக்டோபர் மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதத்தை 0.05 சதவீதம் வரை குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்த வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன் பெற்றவர்களின் மாதாந்தர தவணை (EMI) நவம்பர் மாதம் முதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லிச்சென்ஸ்டீன் (Liechtenstein) சுவிட்சர்லாந்தின் நாணயத்தையே பயன்படுத்துகிறது. 38,000 பேர் மட்டுமே வசித்தாலும், தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் ₹1.75 கோடியாம். இது USA, ஜப்பானை விட அதிகம். வரி குறைவு என்பதால், பல முன்னணி நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்குகின்றன. மேலும், உயர் கல்வி & தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், வலுவான வங்கித் துறை ஆகியவற்றால் ஐரோப்பாவின் 2-வது பணக்கார நாடாக லிச்சென்ஸ்டீன் உள்ளது.

சரிந்து கிடக்கும் மார்கெட்டை மீண்டும் உயர்த்தும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார். தற்போது இந்திய சினிமாவில் சாமி- கமர்சியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த லைனில்தான் ‘கருப்பு’ தயாராகியுள்ளது. அதை தொடர்ந்து, பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்த தெலுங்கு இயக்குநர் ‘லக்கி பாஸ்கர்’ வெங்கி அட்லூரி, மலையாள இயக்குநர் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் ஆகியோருடனும் கை கோர்க்கிறார். கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

சர்வதேச மோட்டார்ஷிப் சாம்பியன்ஷிப்பில் Ferrari காரை ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை புனேவை சேர்ந்த டயானா பூண்டோல்(32) நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை Middle East-ல் நடைபெறும் Ferrari Club Challenge தொடரில் அவர் பங்கேற்கிறார். Ex- ஸ்கூல் டீச்சரான டயானா, 2024-ல் the MRF Saloon Cars Championship தொடரில், நாட்டின் முன்னணி ஆண் ரேஸர்களை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தார்.

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் பாலால் அடிபட்ட இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மெல்போர்னில் உள்ள Ferntree Gully கிரிக்கெட் கிளப்பில் பென் ஆஸ்டின்(17), பயிற்சியில் ஈடுபட்டபோது, பவுலிங் மெஷின் வீசிய பால் அவரின் கழுத்தில் வேகமாக அடித்துள்ளது. ஆஸ்டின் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஆஸ்டின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.