India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதால், இனி வீடுகளில் தீபங்கள் ஏற்றலாம். வீட்டு வாசலில் கோலமிட்டு தாம்பூல தட்டு வைத்து, அதில் 5 முக குத்துவிளக்கை ஏற்றி வழிபடுவது சிறந்தது. அதேபோல், காமாட்சி அம்மன் விளக்கின் அடியில் காசு வைத்து ஏற்றினால், மகாலட்சுமி அருள் கிடைக்கும். வாசலில் ஏற்றப்பட்ட தீபமானது குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது எரிய வேண்டும். அகல் விளக்குகளை சாமி அறையிலும் ஏற்ற வேண்டும்.
தமிழ் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து நடிகை த்ரிஷா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் 22 ஆண்டுகளைக் கடந்து, முன்னணி நாயகியாக வலம்வரும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் அமீர் இயக்கத்தில் டிச.13, 2002இல் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தில் அறிமுகமானார் த்ரிஷா. உங்களுக்கு த்ரிஷா நடித்ததில் பிடித்த படம் எது?
திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் போது, பருவத ராஜகுலத்தினர் என்ற சமூகத்தினரே மகா தீபம் ஏற்றும் உரிமையை பெற்றுள்ளனர். இந்த பணியை 15 தலைமுறைகளுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். புராணங்களின் படி, பருவத ராஜனின் மகளாக பார்வதி தேவி அவதரித்ததாகவும், அவர்கள் செம்படவர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பார்வதி தேவி அவதரித்த வம்சம் என்பதால் தீபம் ஏற்றும் உரிமையை அவர்கள் பெற்றனர்.
கடந்த 2017ல் ‘ரயீஸ்’ பட ப்ரோமோஷனுக்காக ஷாருக்கான் ரயிலில் பயணித்தார். அவரைக் காண வதோதரா ரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவ்வழக்கில், இதுபோன்ற கூட்ட நெரிசலில் ஏற்படும் விளைவுகளுக்கு, நேரடி ஈடுபாடு நிரூபிக்கப்படாத வரை பிரபலங்கள் பொறுப்பாக முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை சுட்டிக்காட்டி, அல்லு அர்ஜூனுக்கு மட்டும் தனி சட்டமா என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. டிச.4-ல் தமிழக PWD அதிகாரிகள் பொருள்களை கொண்டு சென்றபோது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு தமிழக சட்டப்பேரவையில் MLAக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளா தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன?
நாம்பள்ளி நீதிமன்றத்தால் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. இதற்கிடையில், அவரை ஏற்கனவே போலீசார் சஞ்சல்குடா சிறைக்கு அழைத்து சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்க கூட்டத்தில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், அவரை போலீசார் காலையில் கைது செய்தனர்.
பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், 17வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அவர் PM மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், விவசாயிகளின் நலனுக்காக என்னுடைய உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளேன். அப்போதாவது மத்திய அரசு விழித்துக் கொண்டு எங்களின் 13 கோரிக்கைளை நிறைவேற்றுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிக்கு அரசின் பதில் என்னவாக இருக்கும்?
திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் 8 திசைகளிலும் அஷ்டலிங்கமாக ஈசன் அருள்பாலிக்கிறார். மகா தீப நாளான இன்று 12 ராசியினரும் வணங்க வேண்டிய லிங்கங்களைப் பற்றி பார்க்கலாம். ➤மேஷம் – நிருதி லிங்கம் ➤ரிஷபம் & துலாம் – இந்திர லிங்கம் ➤சிம்மம் – அக்னி லிங்கம் ➤விருச்சிகம் – யம லிங்கம் ➤மகரம் & கும்பம் – வருண லிங்கம் ➤கடகம் – வாயு லிங்கம் ➤மிதுனம் & கன்னி – ஈசான்ய லிங்கம் ➤தனுசு & மீனம் – குபேர லிங்கம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னதானம் செய்வதால், கல்வி, வேலை, அரசியல், பதவி, திருமணம், வழக்கு, குடும்பப் பிரச்னைகள் போன்றவை நீங்கி மேன்மையும், சுபமும் உண்டாகும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. அதேபோல, தொழிலில் சுணக்கம், வயிறு, தோல் நோயால் வாடுவோர், அன்ன வேஷத்தால் சரியாக சாப்பிட முடியாதவர்கள் நிவர்த்தி பெற தி.மலையில் அன்னதானம் செய்வது வழக்கமாக உள்ளது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற குகேஷுக்கு நடிகர்கள் தனுஷ் மற்றும் SK வாழ்த்து தெரிவித்தனர். தனுஷ், ” குகேஷ் இளம் வயது உலக செஸ் சாம்பியனானது இந்தியாவிற்கும், சென்னைக்கும் நம்பமுடியாத பெருமையான தருணம். வாழ்த்துகள், இந்த சாதனையின் மூலம் எங்கள் அனைவருக்கும் ஊக்கம் அளித்து பெருமை சேர்த்துள்ளீர்கள்” என்றார். அதைப்போல SKவும், ”வாழ்த்துகள் குகேஷ். நீங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு inspiration” என்றார்.
Sorry, no posts matched your criteria.