India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
3-வது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்த சில திட்டங்களை வைத்துள்ளதாக ஆஸி., கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். நாங்கள் எப்போதும் இரண்டு திட்டங்களுடன் களமிறங்குவோம் என்ற அவர், ஒன்று வேலை செய்யவில்லை எனில், மற்றொன்றை பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி தருவோம் என்றார். காபா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால், பவுன்சர்களை கொண்டு IND அணிக்கு நெருக்கடி கொடுப்போம் என்கிறார் கம்மின்ஸ்.
TNPSC குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் & பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், குரூப் 4 தமிழ் தகுதி & மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/english/syllabus.htmlஇல் தெரிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியரை அவதூறாக பேசிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சேகர் குமாரை பணிநீக்க கோரும் தீர்மானத்தில் கையெழுத்திட ADMK MPக்கள் மறுத்துள்ளனர். இதை விமர்சித்துள்ள அமைச்சர் நாசர், சிறுபான்மை மக்களுக்கு எதிராக நிற்கும் ADMKவின் இரட்டை வேடம் இதன்மூலம் அம்பலமாகியுள்ளது என்றார். மேலும், BJP கூட்டணியில் இருந்து வெளியேறியதாக கூறி, மக்களை ADMK ஏமாற்றுவதாகவும், ADMK-BJP கள்ள உறவு இன்றும் தொடர்வதாகவும் சாடியுள்ளார்.
தன்னுடைய முதல் லைவ் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி லண்டனில் அரங்கேற இருப்பதாக இளையராஜா மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். ஆசிய கண்டத்தில் பிறந்து, வளர்ந்த இசைக் கலைஞர்களுக்கு சிம்பொனியைப் படைக்கும் ஆற்றல் இருப்பதில்லை என்ற தவறானக் கருத்து மேற்கத்திய இசை வல்லுநர்களிடம் இருந்தது. இதை லைவ் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா மூலம் மாற்றிக் காட்டப்போகிறார் இசைஞானி.
கனமழை எதிரொலியாக நாளை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து, எந்த சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சனி, ஞாயிறு என 2 நாள் தொடர் விடுமுறை வருகிறது. திங்கள் கிழமை பள்ளிகள் இயங்கும் என தெரிகிறது.
US அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், US இமிக்ரேஷன் டிபார்மென்ட், நாடு கடத்த வேண்டியவர்கள் லிஸ்டை ரெடியாக வைத்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியுள்ள 15 லட்சம் பேரை கொத்து கொத்தாக அனுப்ப உள்ளார் டிரம்ப். முதல் லிஸ்டில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். பஞ்சாப், குஜராத், ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான் இதில் பெரும்பான்மை. இதுதவிர, இந்தியாவை ஒத்துழைக்காத நாடுகளின் பட்டியலில் வைத்துள்ளதாம் அமெரிக்கா.
. கடந்த காலங்களில் வெறும் 3 நாட்கள் மட்டுமே எரியும் மகா தீபம் கால போக்கில் பக்தர்கள் வருகை அதிகமானதால் 11 நாட்களுக்கு தொடர்ந்து காலை மாலை என மலையில் தீபம் எரிய விடப்படுகிறது. பருவத ராஜகுலத்தினர் மகா தீபம் ஏற்றிவிட்டு, மலையின் கீழே வந்தவுடன் “அண்ணாமலையாரே உன்னை மிதித்து நாங்கள் மலைக்கு சென்றதற்கு எங்களை மன்னித்து விடு” என்று சொல்லும் விதமாக பிராயசித்த பூஜையும் செய்வதும் வழக்கம்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று, செஸ் விளையாட்டில் இந்தியாவின் 2-வது பாய்ச்சலை குகேஷ் தொடங்கி உள்ளார். இதிலும் தமிழகமே முன்னணியில் இருப்பதை பின்வரும் கிராண்ட் மாஸ்டர்கள் (GM) எண்ணிக்கை நிரூபிக்கிறது: நாட்டின் மொத்த GM எண்ணிக்கை -85. இதில் ▶தமிழ்நாடு- 31) ▶மகாராஷ்டிரா-12 ▶மே.வங்கம்-11 ▶தெலங்கானா-6 ▶டெல்லி-6 ▶கர்நாடகா-4 ▶ஆந்திரா-4 ▶கேரளா-3 ▶குஜராத்-2 ▶கோவா-2 ▶ஒடிஷா-2 ▶ஹரியானா-1 ▶ராஜஸ்தான்-1.
ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பு மற்றும் இசையமைப்பில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘Mental மனதில்’ என பெயரிடப்பட்டுள்ளது. NGK’ படத்தை இயக்கிய செல்வராகவன் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனில் இறங்கியுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் இயக்கிய ‘மயக்கம் என்ன’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படங்களில் இசையமைத்த ஜிவி, தற்போது அவரின் ஹீரோவாக பரிணமித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்துக்கு நாளை (14.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்காது. மேலும், எந்தவிதமான சிறப்பு வகுப்புகளையும், தேர்வுகளையும் நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.