India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இயக்குநர் ராம் கோபால் வர்மா 4 கேள்விகளை எழுப்பியுள்ளார். *கோயில் திருவிழா கூட்டங்களில் பக்தர்கள் காணாமல் போனால் கடவுள் கைது செய்யப்படுவாரா? *தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தால் அரசியல்வாதி கைது செய்யப்படுவாரா? *ப்ரொமோஷனுக்கு வராத ஹீரோ, ஹீரோயின்கள் மீது நடவடிக்கை பாயுமா? *கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது ஹீரோவா, போலீசா? என வினவியுள்ளார்.
கனமழை எதிரொலியாக 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி, தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து, சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
யார் பந்து வீசுகிறார்கள் என்றெல்லாம் IND வீரர்கள் கவலைப் படுவதில்லை என பேட் கமின்ஸுக்கு சுப்மன் கில் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த போட்டியில் pink ball-ஐ எதிர்கொள்வதில் சிரமமாக இருந்தது. சிவப்பு பந்துகளில் விளையாடி பழகியதால் இந்த தடுமாற்றம் ஏற்பட்டது. ஆனால், அடுத்த டெஸ்டில் அது நிச்சயம் இருக்காது என்றார் கில். முன்னதாக, பவுன்சர்களை வீசி IND வீரர்களை திணறடிப்போம் என பேட் கம்மின்ஸ் கூறியிருந்தார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக ஆம் ஆத்மிக்கு எதிராக 5000 பக்க ஆதாரங்களை டெல்லி பாஜக, தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துள்ளது. அப்போது பேசிய பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா, சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய ரோஹிங்கியா, வங்கதேசத்தவருக்கு ஆம் ஆத்மி அடைக்கலம் கொடுத்ததற்கான ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். போலியான வாக்கு ஒன்றுகூட விழ அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
அல்லு அர்ஜுன் வருவது குறித்து முன்பே போலீசாருக்கு தகவல் அளித்ததாக தியேட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பந்தோபஸ்து கேட்டு அனுப்பிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் அல்லு அர்ஜுன், ஹீரோயின் மற்றும் விஐபிக்கள் 9.30 மணி காட்சிக்கு வருவதாகவும், மக்கள் கூட்டம் அலைமோதுவதால் போதிய பாதுகாப்பு வேண்டுமெனவும் ஏசிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. யார் மீது தவறு என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்?
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வீட்டிற்கு செல்வோர் மிக கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை பல விந்தைகளை தனக்குள்ளே வைத்திருக்கிறது. கூன்முதுகு திமிங்கிலங்கள் இனப்பெருக்கத்திற்காக நெடுந்தொலைவு பயணிக்கக் கூடியன. இவ்வகை ஆண் திமிங்கிலம் ஒன்று, 3 பெருங்கடலை தாண்டி 13,046 கிமீ பயணித்ததை பதிவு செய்துள்ள விஞ்ஞானிகள், இது 19,000 கிமீ வரை செல்லக்கூடும் என்கின்றனர். பருவநிலை மாற்றம் இவற்றின் பழக்கவழக்கத்தை பாதிக்கிறதா? எதனால் இத்தனை தூரம்? என ஆய்வு நடைபெறுகிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ICC ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் துபாயிலும், மற்ற போட்டிகள் பாகிஸ்தானிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2026ல் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெறும் என ICC- BCCI- PCB இடையே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இனி விளையாட்ட கவனிக்கலாம்.
விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் திருமா பங்கேற்கக்கூடாது என திருமாவுக்கு திமுக அழுத்தம் கொடுத்ததாக விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவிடம் அமைச்சர் வேலு பேசியதாக கூறியுள்ள அவர், புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் கூட்டணி உருவாகும் என நினைப்பது முதிர்ச்சியற்றது என்றும் விசிகவினர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், மறைந்த கலைஞர்களை திரையில் மீண்டும் தத்ரூபமாக கொண்டு வருகிறார்கள். தற்போது வெளியாகியுள்ள, ஷண்முக பாண்டியனின் “படைத்தலைவன்” பட டிரெய்லரில் AI விஜயகாந்த் இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே, GOAT படத்திலும் இது போன்று விஜயகாந்தை AIயில் திரையில் காண்பித்தனர். தற்போது வந்துள்ள டிரெய்லரில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் பெஸ்ட்டா? GOATஇல் வந்தவர் பெஸ்ட்டா? உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.